Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 3 நவம்பர், 2012

கதை அல்ல நிஜம் :பேசும் யானை


ரஷ்யா மற்றும் கசகஸ்தான் மிருகக் காட்சி சாலையில் உள்ள யானைகள், அந்நாட்டு மொழியில் பேசியதாகக் கூறப் பட் டது. ஆனால், இவையெல்லாம், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.தென் கொரியாவின், "எவர்லேண்ட்' மிருகக் காட்சி சாலையில் உள்ள, "கோஷிக்' என்ற யானை, கொரிய மொழியில் பேசுவது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த மிருகக் காட்சி சாலையில், பல ஆண்டுகளாக இந்த ஒரு யானை மட்டுமே பராமரிக்கப்பட்டு வருகிறது. பாகன் பேசும் ஒரு சில வார்த்தைகளை, கவனத்தில் கொண்டு, அதை திரும்பவும் உச்சரித்து வருகிறது. துதிக்கை வழியாகத் தான், ஐந்து வார்த்தைகளை திரும்ப திரும்ப கூறி வருகிறது. இதற்கான அர்த்தம் அதற்கு புரிந்ததாக தெரியவில்லை.

அனியாங் (ஹலோ), அஞ்சா (உட்கார்), அனியா (இல்லை), நுவோ (படுத்து கொள்), சோயா (நல்லது) ஆகிய வார்த்தை களை, கொரிய மொழியில் இந்த யானை பேசுவதை, கொரிய மொழி தெரிந்தவர்களால், புரிந்து கொள்ள முடிகிறது .ஆசிய மற்றும் ஆப்ரிக்க யானைகள் பொதுவாக, லாரிகளின் இன்ஜின் சத்தத்தை, "மிமிக்ரி' செய்வதாக பலரும் தெரிவித் துள்ளனர்.

அமெரிக்காவில் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு


அமெரிக்காவில், புயல் பாதித்த பகுதிகளில், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவில், கடந்த வாரம் மையம் கொண்ட, "சாண்டி' புயல், 15 மாகாணங்களை தாக்கியது. இந்த புயலால், 80க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். விமானப் போக்குவரத்து மட்டும் தான் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது.

சாலைகள் மற்றும் சுரங்க ரயில்பாதைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், முழு வீச்சில் போக்குவரத்து துவங்கவில்லை.நியூயார்க் மற்றும் நியூஜெர்சி உள்ளிட்ட பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் விழுந்து கிடப்பதால், அத்தியாவசிய பொருட்களின் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் பல நகரங்கள் இருளில் தான் மூழ்கியுள்ளன. அமெரிக்காவின் பல நகரங்களில் 40 லட்சம் பேர், மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகியுள்ளனர். மன்ஹாட்டன் நகரில், மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், இப்பகுதியில் மின்சாரம் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் நிலையங்கள் உள்பட, அலுவலகங்களும், வர்த்தக நிறுவனங்களும், ப்ருக்ளின் நகரில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.மின்சாரம் துண்டிக்கப்பட்டு, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், போதிய ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், கடைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக நியூயார்க் போலீசார், 19 பேரை கைது செய்துள்ளனர்.சாலைகள் பழுது பட்டுள்ளதால், நியூயார்க் மற்றும் நியூஜெர்சி உள்ளிட்ட இடங்களுக்கு, கடந்த சில நாட்களாக, பெட்ரோல் சப்ளை செய்யப்படவில்லை.இதனால், இந்த பகுதிகளில், கடும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்ரோல் நிலையங்களிலும், 1கி.மீ.,தூரத்துக்கு மக்கள் வரிசையில் காத்திருந்து, கேன்களில் பெட்ரோல் வாங்கி செல்கின்றனர்.சில இடங்களில், இது தொடர்பாக சண்டை மூண்டதால், அங்கெல்லாம், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாணவன் போலீசில் புகார் :அரசு பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை


அரசு பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை என மாணவன் போலீசில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவிலுள்ள பல அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு வருகிறது. உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கணக்குப் பதிவியல், வணிகவியல் பாட பிரிவுகளுக்கு ஆசிரியர் இல்லை.

இதுகுறித்து மாணவர்கள் ஆசிரியர்களிடம் முறையிட்டுள்ளனர்.இதனால், எந்த பலனும் கிடைக்காததால், செங்குறிச்சியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற மாணவன், நேற்று உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரில், எங்கள் பள்ளியில் கணக்குபதிவியல், வணிகவியல் பாட பிரிவுக்கு ஆசிரியர் இல்லை, உடனே ஆசிரியரை நியமக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். புகாரை பெற்ற போலீசார், கல்வித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் 4000 சுகாதாரப்பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்


தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில், விதி, 110ன் கீழ், வெளியிட்ட அறிக்கை:
கிராம சுகாதார செவிலியர்கள் பணி மேம்பாடு அடையும் வகையில், அவர்களுக்கு, இலவச லேப்-டாப் வழங்கப்படும். இதற்கென, 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்ட மருத்துவமனைகள், மருத்துவ அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் என்ற பெயரில், பணியாளர்களை நியமிக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது.இந்த வகையில், ஒப்பந்த அடிப்படையில், 4,000 பேர் பணி நியமனம் செய்யப்படுவர். 200 படுக்கைகளுக்கு, குறைவான மருத்துவமனைகளில், சுகாதார பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களாக, இவர்கள் நியமனம் செய்யப்படுவர்.மருத்துவமனைகளில், பாதுகாப்பை செம்மைப்படுத்தும் வகையில், 2,176 காவல் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.

மருத்துவமனைகளில் தொய்வின்றி, சேவை மேற்கொள்வதற்காக, உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்க, கூடுதலாக, 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், 1.64 லட்சம் பயனாளிகளுக்கு, 384 கோடி ரூபாய், காப்பீட்டு நிறுவனத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் காது நுண் எலும்பு கருவி பொருத்தும் சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ள, 1.50 லட்சம் ரூபாய்க்கு மேலாக செலவு ஆகிறது. இந்த கூடுதல் செலவினத்தையும் அரசே ஏற்கும் வகையில், சிறப்பு தொகுப்பு நிதி ஒன்று உருவாக்கப்படும்.

அதற்கு, 10 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும். வரும் காலங்களில், அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் காப்பீட்டு தொகையிலிருந்து, இந்த சிறப்பு தொகுப்பு நிதிக்காக, ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சட்டசபையில் முதல்வரின் அறிவிப்பால், கிராம சுகாதார செவிலியர்கள், 11 ஆயிரம் பேருக்கு, இலவச லேப்-டாப் வழங்கப்படும் என, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளி, 2 நவம்பர், 2012

புதிய கட்டடங்களில் "சோலார் பேனல்' பொருத்துவது கட்டாயம்


 திருவள்ளூர் நகராட்சி பகுதியில், புதிதாக உருவாகும் வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்களில், சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க கூடிய பலகைகளை (சோலார் பேனல்) பொருத்துவது, கட்டாயமாக்கப் பட்டு உள்ளது. இந்த விதி, வரும் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.தற்போது, நிலவும் 14 மணி நேர மின்வெட்டு ‹ழலை சமாளிக்க, தமிழக அரசு”, சூரிய சக்தி கொள்கையை அண்மையில் அறிவித்தது. அதை செயலாக்கும் வகையில், திருவள்ளூர் நகராட்சி இந்த முன்னோடி விதிமுறையை அறிவித்து உள்ளது.

தீர்மானம்:
கடந்த மாதம், 25ம் தேதி நடந்த நகராட்சிக் கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதன்படி, நகராட்சியிடம் கட்டட அனுமதி கோருபவர்கள், கட்டட வரைபடத்துடன், சூரிய சக்தி கட்டமைப்பை நிறுவுவதற்கான உறுதிமொழியை சமர்ப்பிப்பது, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

 இது குறித்து, நகராட்சித் தலைவர், பாஸ்கரன் கூறியதாவது: தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டை போக்குவதற்காக, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. குறிப்பாக, புதிதாக கட்டப்படும் வீடுகளில் இதற்கான கருவிகளை பொருத்த வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் இந்த உத்தரவை ஏற்று, தற்போது நிலவி வரும் மின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, இந்த நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், புதிதாக கட்டப்பட உள்ள கட்டடங்களில், மின்சாரம் தயாரிக்க கூடிய பலகைகளை பொருத்துவது கட்டாயம் ஆக்கப் பட்டு உள்ளது. இதற்காக, கட்டட அனுமதி கோரும் விண்ணப்பத்துடன், "தாங்கள் கட்டும் கட்டடத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க கூடிய பலகைகளை கண்டிப்பாக நிறுவுவோம்' என்ற உறுதிமொழி பத்திரத்தை இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டு உள்ளது. அவ்வாறு குறிப்பிடப்படாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இப்புதிய உத்தரவு, வரும், 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விதிகள்:
குறைந்தபட்சம், 1,200 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடங்கள் கட்டுபவர்கள், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் மின்சாரம் தயாரிக்க கூடிய பலகைகளை கட்டாயம் பொருத்த வேண்டும். இதற்கு குறைந்த பரப்பளவு கொண்ட கட்டடங்கள் கட்டுவதற்கு இது அவசியம் இல்லை.டூ கட்டட அனுமதி பெறும் போது, மின்சாரம் தயாரிக்க கூடிய பலகைகளை நிறுவுவது குறித்து உறுதிமொழி பத்திரத்தை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். கட்டட பணி நிறைவடைந்த பிறகு, பணி நிறைவு சான்றிதழ் பெறுவதற்கு முன்பாக, இவற்றை பொருத்தி இருக்க வேண்டும். இல்லையெனில், பணி நிறைவு சான்றிதழ் பெற முடியாது.

பொறியாளர்களுக்கு ஹிந்துஸ்தான் காகித ஆலையில் வேலைவாய்ப்பு


கொல்கத்தாவில் உள்ள மத்திய அரசு நிறுவனமாக ஹிந்துஸ்தான் காகித ஆலையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்:
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல்/பல்ப் அன்ட் பேப்பர் டெக்னாலஜி, சிவில், இன்பர்மேஷன் டெக்னாலஜி, என்விரான்மென்ட், எச்.ஆர், மார்க்கெட்டிங், கமர்சியல், பினான்ஸ், பாரஸ்ட்ரி

கல்வித்தகுதி:
யூஜிசி.,யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது ஏஐசிடிஇ.,யால் அனுமதிக்கப்பட்ட இளநிலை பொறியியல் பட்ட படிப்பில் 65 சதவீத மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சிஏ/ஐ.சி.டபிள்யூ.ஏ.,வில் 55 சதவீத மதிப்பெண்களும், எம்.பி.ஏ.,நிதியியல் பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி.எஸ்டி மாணவர்களுக்கு 5 சதவீதம் தளர்வு அளிக்கப்படும்.

வயது: 22-30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 
தகுதியுடையவர்கள் www.hindpaper.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நவம்பர் 8 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.hindpaper.in/images/pdf/ET-Advertisement-2012_11-10-12.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.


தமிழகத்தில் அறிமுகமாகிறது செய்முறைத்தேர்வு இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கும் ......


இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முறையில், அடுத்த கல்வி ஆண்டில், பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. செய்முறைத் தேர்வுக்கு, 40 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வுக்கு, 60 மதிப்பெண்கள் என, பிரித்து வழங்கவும், மொழிப் பாடங்களில், அறிவை மேம்படுத்துவதற்கு, பல புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட உள்ளன.

தமிழக அரசு பல்கலைகளின், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் கூட்டம், உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தலைமையில், சென்னையில் நடந்தது. தமிழ்நாடு உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் மற்றும் சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை உள்ளிட்ட, பல்வேறு பல்கலைகளின், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள், கூட்டத்தில் பங்கேற்றனர்.

இளங்கலை, முதுகலை தேர்வுகளில், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து, பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வருவது குறித்து, கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. பாட வாரியாக வழங்கப்படும், 100 மதிப்பெண்களை, செய்முறைத் தேர்வுக்கு, 40, எழுத்து தேர்வுக்கு, 60 என, பிரித்து வழங்குவது என, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. வருகைப் பதிவேடு, செய்முறைப் பதிவேடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், 40 மதிப்பெண்களையும், எழுத்துத் தேர்வுக்கு, 60 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது.

இதில், தேர்ச்சிக்குரிய, 40 மதிப்பெண்களைப் பெற, செய்முறைத் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட, 40ல், குறைந்தபட்சம், 16 மதிப்பெண்களும், எழுத்து தேர்வுக்கான, 60 மதிப்பெண்களில், குறைந்தபட்சம், 24 மதிப்பெண்களும் பெற வேண்டும் என, முடிவு எடுக்கப்பட்டது.

முதுகலையிலும், இதே நடைமுறை அமல்படுத்தப்படும் எனவும், அதில் தேர்ச்சி பெற, செய்முறைத் தேர்வில் குறைந்தபட்சம், 20 மதிப்பெண்களும், எழுத்துத் தேர்வில், குறைந்தபட்சம், 30 மதிப்பெண்களும் பெற வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது.

ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடத்தில், அறிவை மேம்படுத்துவதற்கு, வாசித்தல், குழு விவாதம் உள்ளிட்ட, பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக, பட்டப் படிப்புகளுக்குப் பின், வேலை வாய்ப்புகளைப் பெற, ஆங்கிலத்தில், தகவல் தொடர்புத் திறன் அவசியமாக இருப்பதால், இதில் அதிக கவனம் செலுத்த, உயர்கல்வி துறை திட்டமிட்டுள்ளது. பல்கலைகளின் பாடத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக, ஒரு கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

பாடத் திட்டங்களை, எந்தெந்த வகையில் மேம்படுத்துவது என்பது குறித்து, விரிவாக விவாதித்து, ஆய்வு செய்து, உரிய பரிந்துரைகளை செய்ய, தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும், கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பான அரசின் முடிவு, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், உயர்கல்வி துறை மானியக் கோரிக்கையின் போது, அறிவிப்பாக வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.