Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 2 நவம்பர், 2012

புதிய கட்டடங்களில் "சோலார் பேனல்' பொருத்துவது கட்டாயம்


 திருவள்ளூர் நகராட்சி பகுதியில், புதிதாக உருவாகும் வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்களில், சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க கூடிய பலகைகளை (சோலார் பேனல்) பொருத்துவது, கட்டாயமாக்கப் பட்டு உள்ளது. இந்த விதி, வரும் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.தற்போது, நிலவும் 14 மணி நேர மின்வெட்டு ‹ழலை சமாளிக்க, தமிழக அரசு”, சூரிய சக்தி கொள்கையை அண்மையில் அறிவித்தது. அதை செயலாக்கும் வகையில், திருவள்ளூர் நகராட்சி இந்த முன்னோடி விதிமுறையை அறிவித்து உள்ளது.

தீர்மானம்:
கடந்த மாதம், 25ம் தேதி நடந்த நகராட்சிக் கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதன்படி, நகராட்சியிடம் கட்டட அனுமதி கோருபவர்கள், கட்டட வரைபடத்துடன், சூரிய சக்தி கட்டமைப்பை நிறுவுவதற்கான உறுதிமொழியை சமர்ப்பிப்பது, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

 இது குறித்து, நகராட்சித் தலைவர், பாஸ்கரன் கூறியதாவது: தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டை போக்குவதற்காக, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. குறிப்பாக, புதிதாக கட்டப்படும் வீடுகளில் இதற்கான கருவிகளை பொருத்த வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் இந்த உத்தரவை ஏற்று, தற்போது நிலவி வரும் மின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, இந்த நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், புதிதாக கட்டப்பட உள்ள கட்டடங்களில், மின்சாரம் தயாரிக்க கூடிய பலகைகளை பொருத்துவது கட்டாயம் ஆக்கப் பட்டு உள்ளது. இதற்காக, கட்டட அனுமதி கோரும் விண்ணப்பத்துடன், "தாங்கள் கட்டும் கட்டடத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க கூடிய பலகைகளை கண்டிப்பாக நிறுவுவோம்' என்ற உறுதிமொழி பத்திரத்தை இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டு உள்ளது. அவ்வாறு குறிப்பிடப்படாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இப்புதிய உத்தரவு, வரும், 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விதிகள்:
குறைந்தபட்சம், 1,200 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடங்கள் கட்டுபவர்கள், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் மின்சாரம் தயாரிக்க கூடிய பலகைகளை கட்டாயம் பொருத்த வேண்டும். இதற்கு குறைந்த பரப்பளவு கொண்ட கட்டடங்கள் கட்டுவதற்கு இது அவசியம் இல்லை.டூ கட்டட அனுமதி பெறும் போது, மின்சாரம் தயாரிக்க கூடிய பலகைகளை நிறுவுவது குறித்து உறுதிமொழி பத்திரத்தை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். கட்டட பணி நிறைவடைந்த பிறகு, பணி நிறைவு சான்றிதழ் பெறுவதற்கு முன்பாக, இவற்றை பொருத்தி இருக்க வேண்டும். இல்லையெனில், பணி நிறைவு சான்றிதழ் பெற முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக