Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 3 நவம்பர், 2012

தமிழகத்தில் 4000 சுகாதாரப்பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்


தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில், விதி, 110ன் கீழ், வெளியிட்ட அறிக்கை:
கிராம சுகாதார செவிலியர்கள் பணி மேம்பாடு அடையும் வகையில், அவர்களுக்கு, இலவச லேப்-டாப் வழங்கப்படும். இதற்கென, 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்ட மருத்துவமனைகள், மருத்துவ அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் என்ற பெயரில், பணியாளர்களை நியமிக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது.இந்த வகையில், ஒப்பந்த அடிப்படையில், 4,000 பேர் பணி நியமனம் செய்யப்படுவர். 200 படுக்கைகளுக்கு, குறைவான மருத்துவமனைகளில், சுகாதார பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களாக, இவர்கள் நியமனம் செய்யப்படுவர்.மருத்துவமனைகளில், பாதுகாப்பை செம்மைப்படுத்தும் வகையில், 2,176 காவல் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.

மருத்துவமனைகளில் தொய்வின்றி, சேவை மேற்கொள்வதற்காக, உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்க, கூடுதலாக, 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், 1.64 லட்சம் பயனாளிகளுக்கு, 384 கோடி ரூபாய், காப்பீட்டு நிறுவனத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் காது நுண் எலும்பு கருவி பொருத்தும் சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ள, 1.50 லட்சம் ரூபாய்க்கு மேலாக செலவு ஆகிறது. இந்த கூடுதல் செலவினத்தையும் அரசே ஏற்கும் வகையில், சிறப்பு தொகுப்பு நிதி ஒன்று உருவாக்கப்படும்.

அதற்கு, 10 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும். வரும் காலங்களில், அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் காப்பீட்டு தொகையிலிருந்து, இந்த சிறப்பு தொகுப்பு நிதிக்காக, ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சட்டசபையில் முதல்வரின் அறிவிப்பால், கிராம சுகாதார செவிலியர்கள், 11 ஆயிரம் பேருக்கு, இலவச லேப்-டாப் வழங்கப்படும் என, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக