Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 2 நவம்பர், 2012

பொறியாளர்களுக்கு ஹிந்துஸ்தான் காகித ஆலையில் வேலைவாய்ப்பு


கொல்கத்தாவில் உள்ள மத்திய அரசு நிறுவனமாக ஹிந்துஸ்தான் காகித ஆலையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்:
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல்/பல்ப் அன்ட் பேப்பர் டெக்னாலஜி, சிவில், இன்பர்மேஷன் டெக்னாலஜி, என்விரான்மென்ட், எச்.ஆர், மார்க்கெட்டிங், கமர்சியல், பினான்ஸ், பாரஸ்ட்ரி

கல்வித்தகுதி:
யூஜிசி.,யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது ஏஐசிடிஇ.,யால் அனுமதிக்கப்பட்ட இளநிலை பொறியியல் பட்ட படிப்பில் 65 சதவீத மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சிஏ/ஐ.சி.டபிள்யூ.ஏ.,வில் 55 சதவீத மதிப்பெண்களும், எம்.பி.ஏ.,நிதியியல் பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி.எஸ்டி மாணவர்களுக்கு 5 சதவீதம் தளர்வு அளிக்கப்படும்.

வயது: 22-30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 
தகுதியுடையவர்கள் www.hindpaper.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நவம்பர் 8 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.hindpaper.in/images/pdf/ET-Advertisement-2012_11-10-12.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக