Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 24 செப்டம்பர், 2012

சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திடும் --RADIANT IAS ACADEMY


CkR I.H.Gv ALôPª ùTôÚ[ôRôWj§p ©uRe¡V UôQYoLs I.H.Gv úTôu\ EVo TR®LÞdÏ YWúYiÓm Gu\ úSôdLjúRôÓ ©uRe¡V UôYhPUô] ®Ýl×Wm UôYhPj§p, Ls[dϱf£«p ØRuØRXôL ùRôPeLlThPÕ.  CkR ALôPª ¡WNuh Lp® A\dLhPû[«u ¸r CVe¡ YÚ¡\Õ.  CkR ALôPª ©lWY¬-20, 2004p ùRôPeLlThPÕ.  CÕ ùRôPeLlThP Sô°­ÚkÕ Cuß YûW 100dÏm úUtThúPôûW AWÑ A§Lô¬L[ôL EÚYôd¡Ùs[Õ. CkR ALôPª«p T«t£ ùTt\YoLs TpúYß Õû\L°p EVo TR®L°p Es[]o. 
I.H.Gv Utßm CRW úTôh¥j úRoÜLÞdLôL ùT¬V SLWeLÞdÏ ùNuß UôQYoLs T¥dLúYiÓùUu\ ¨ûXûV Uôt±, Ls[dϱf£«úXúV SLWeLÞdÏ ¨LWô] T«t£ûV A°jÕ YÚ¡u\Õ.  CkR ALôPª I.H.Gv,   TNPSC Ïìl-I, II, IV, Ye¡j úRoÜLs, CW«púY úRoÜLs Utßm B£¬Vo úRoYôûQVj úRoÜLÞdÏ £\lTô] T«t£V°jÕ YÚ¡\Õ. 
CkR T«t£ ¨ßY]j§u ¨ßY]j RûXYÚm, CVdÏSÚUô] Bo.CWLUjÕpXô TpúYß LÚjRWeÏLû[ 100-dÏm úUtThP Lpí¬L°p CÕYûW SPj§Ùs[ôo. CYo _Uôp ØLmUÕ Lpí¬«u UôQYo. CYo RªrSôÓ Uô¨X UL°o BûQVj§u JÚe¡ûQlTô[WôLÜm,  RªrSôÓ Y@d× Yô¬Vj§u Lp®dÏÝ Eßl©]WôLÜm T¦Vôt±Ùs[ôo. 

TpúYß SLWeL°p I.H.Gv úTôu\ úTôh¥j úRoÜLs Tt±V ®¯l×QoÜ T«XWeLjûR SPj§Ùs[ôo.  úUÛm Lp®dLôL TpúYßl T¦Lû[ ùRôPokÕ  ùNnÕùLôiÓs[ôo. 
      CkR ALôPª«p £ßTôuûU NêLjûRf úNokRYoLÞdÏ CXYN T«t£Ùm A°dLlTÓ¡u\Õ.  ùTôÚ[ôRôWj§p ©uRe¡V UôQYoLÞdÏ T«t£d LhPQm Ïû\dLlTÓ¡u\Õ.  CkR T«t£ ûUVj§u RûXVôV úSôdLm úTôh¥j úRoÜLs Tt±V ®¯l×QoÜ HtTÓj§, UôQYoLû[ A§p TeùLÓjÕdùLôs[f ùNnÕ, ùYt±ùT\ ûYlTÕRôu. 
      CkR ALôPª«u CVdÏSo Bo. CWLUjÕpXô êuß Øû\ ùTô§ûL ùRôûXdLôh£«p úTôh¥j úRoÜLs Tt± ®[d¡Ùs[ôo.  úUÛm CYo úTôh¥j úRoÜLÞm ùYt±Ùm, Ck§V AW£VXûUl× A¥lTûP E¬ûULs B¡V èpLû[ GݧÙs[ôo.   I.H.Gv Es°hP úTôh¥j úRoÜLû[l Tt±V NkúRLeLÞdÏ GkúSWØm CVdÏSûW ùRôPo×ùLôs[Xôm.  úNûYûV CkR ¨ßY]j§u úSôdLUôL Es[Õ.
தொடர்புக்கு ,
AûXúT£ GiLs - 9842998892  - 9624309314

                                                  
        

அழிந்து வரும் மேற்கு தொடர்ச்சி மலை வனபகுதி


நெல்லை மாவட்டத்தின் வளம் மிக்க பகுதியும், கேரளா எல்லையுமான கடையநல்லூர், மேக்கரை, செங்கோட்டை, குற்றாலம், பழைய குற்றாலம், கடையம், மத்தளம் பறை பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஈத்தல் என்றழைக்கப்படும் மூங்கில் தொடர்ந்து வெட்டப்படுவதால் நீர்பிடிப்பு குறைவதுடன், யானைகள் ஊருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக-கேரள மாநிலங்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கி வரும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி அரிய வகை மிருகஙகளையும், மரங்களையும், மூலிகைச் செடிகளையும் கொண்ட இயற்கை வளம் மிக்க பகுதியாகும். இங்கு யானை, சிறுத்தை, மிளா, காட்டுப்பன்றி போன்ற மிருகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. மேலும் பறக்கும் அணில் போன்ற அபூர்வ வகை அணில்களும், பலதரப்பட்ட பறவைகளும் உள்ளன. ஏராளமான அருவிகளும், நதிகளும் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி இயற்கை நமக்கு தந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷமாகும். ஆனால் சமீபகாலமாக மேக்கரை, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இயற்கை வளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது.
அபூர்வ வகை மரம், மூலிகைச் செடிகள் தீ உள்ளிட்ட சக்தியாலும், சமூக விரோத கும்பல்களாலும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் யானை, மான், மிளா போன்ற உயிரினங்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகிறது. காடுகளை பாதுகாக்க வேண்டிய வனத்துறையினர் முழு ஈடுபாட்டோடு செயல்படாததாலும், பல நேரங்களில் காட்டை அழிப்பவர்களோடு கைகோர்த்து செயல்படுவதாலும் தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. பல மாநிலங்களில் காடுகளின் பரப்பளவு 33 சதவீதம் இருந்து வரும் நிலையில் தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு மளமளவென குறைந்து தற்போது 18 சதவீதமாக உள்ளதாக இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காடுகளை பாதுகாக்கவும், காடுகளின் பரப்பளவை அதிகரிக்கவும் ஜப்பான் நாட்டு நிதியுதவியோடு தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வந்த டிஏபி எனப்படும் காடுகள் பாதுகாப்பு திட்டமும் சரிவர செயல்படுத்தப்படாததால் காடுகள் குறைந்து, மழை பொய்த்து, பஞ்சம் தலைவிரித்தாடும் சூழ்நிலை உருவாகி வருகிறது. காடுகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தங்கள் வாழ்விற்காகவும், வருமானத்திற்காகவும் காடுகளை நம்பி இருந்தவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பிற்கு திட்டமிடப்பட்டது. அதாவது அவர்கள் காடுகளை நம்பி இல்லாமல் வேறு சுய தொழில் செய்து பிழைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் இத்திட்டம் கடையநல்லூர், செங்கோ்ட்டை, தென்காசி பகுதியில் சரிவர செயல்படுத்தப்படாததால் காடுகள் தொடர்ந்து அழிந்து வருகிறது. குறிப்பாக செங்கோட்டை, மேக்கரை, கடையநல்லூர் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மூங்கில் அதிகம் வளர்ந்துள்ளது. இந்த வகை மூங்கில் யானைகளுக்கு உணவாவதுடன் நீர்பிடிப்புக்கு அதிகம் துணை செய்கிறது. இதனால் காடுகளில் உள்ள நீர்நிலைகளில் கோடை காலத்திலும் தண்ணீர் இருக்கும். இவற்றால் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் உள்பட எந்த மிருகமும் ஊருக்குள் வராமல் இருந்தன. ஆனால் தற்போது இந்த வகை மூங்கில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களால் அதிக அளவு வெட்டப்பட்டு வருகிறது. அங்கு வளரும் மூங்கில்கள் ஜவுளிக் கடை பைகளுக்கு கைப்பிடியாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதன் காரணமாக அங்குள்ள மூங்கில்களுக்கு சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆர்டர் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் செங்கோட்டை, கடையநல்லூர் பகுதியில் மூங்கில் அதிக அளவுக்கு வெட்டப்பட்டு செங்கோட்டை பகுதிகளிலேயே சைஸ் செய்யப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மூங்கில் வெட்டப்பட்டு அனுப்பப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த முறைகேட்டில் அரசியல்வாதிகளோடு, வனத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் பல ஆண்டுகளாக இந்த தொழில் தொய்வில்லாமல் நடந்த வண்ணம் உள்ளது. வேலியே பயிரை மேய்வதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதுவும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால் தற்போது ஆண்டுதோறும் இப்பகுதியில் மழை அளவு குறைந்து வருவதால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து தமிழக அரசுக்கு அடிக்கடி புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  ஜவுளிக் கடை பைகளுக்கு பயன்படும் இந்த மூங்கில்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் காடுகளில் வளர்ந்துள்ள மூங்கில்கள் அதிக அளவில் வெட்டப்படுகிறது. இதனால் கடையநல்லூர் பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து மலையடிவாரங்களில் உள்ள தென்னை, வாழை தோட்டங்களை அழித்து வருகிறது.

கடந்த ஆட்சி காலத்தில் விவசாய நிலங்களுக்குள் மிருகங்கள் புகாத வண்ணம் சுமார் ரூ. 5 கோடி செலவில் அமைக்கப்பட்ட சோலார் மின்வேலியும் செயல் இழந்து விட்டதால் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கேரள வனத்துறையும், தமிழக வனத்துறையும் இந்த விஷயத்தில் கண்டுகொள்ளாமல் இருப்பதால் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதி அழிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களின் வாழ்விடம் அழிக்கப்படுவதால் யானைகள் மனிதர்களின் வாழ்விடங்களை அழிக்கும் நிலை உருவாகி வருவதை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

"ஊரைக் காணோம்" ஆட்சித்தலைவரிடம் புகார்


நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள யாக்கோபுபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள அதிகாரிகளிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

பணகுடி அருகே உள்ள சிதம்பராபுரம்-யாக்கோபுபுரம் ஊராட்சி பகுதியில் யாக்கோபுபுரம் ஊர் பெயர் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள அரசு கட்டிடங்களில் யாக்கோபுபுரம் என்றே பெயர் எழுதப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போதைய பஞ்சாயத்து தலைவர் யாக்கோபுபுரம் என்ற பெயரை அழித்து சிதம்பராபுரம் என்று எழுதி வருகிறார். இதனால் யாக்கோபுபுரத்திற்கு வருபவர்கள் சிதம்பராபுரம் என்று எழுதியிருப்பதை கண்டு ஏமாற்றமடைகிறார்கள். எனவே பெயர் பலகைகளில் யாக்கோபுபுரம் என்ற பெயரை அழிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

‘மணிச்சுடர்’ வெள்ளிவிழாவை உலகம் வியக்க நடத்திக் காட்டுவோம்! - பேராசிரியர் கே.எம்.கே



`மணிச்சுடர்’ தமிழ்கூறும் நல்லுலக முஸ்லிம்களின் தனிச் சுடர்! தமிழ் மொழியில் இஸ்லாமிய சுடர் பரப்பும் சன்மார்க்கச் சுடர்! தமிழக முஸ்லிம்களின் இதயங்களில் ஏற்படும் ஒளியை - குரலைப் பிரதிபலிக்கும் சமுதாயச்சுடர்!

இந்த ஏடு, 1-6-1987-ல் ரமளான் திங்களில் தலைவர் சிராஜுல் மில்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களும், அவர்களின் அருமைப்புதல்வர் ஏ. அப்துல் ஹக்கீம் அவர்களும் இணைந்து உருவாக்கிய மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் மூலம் துவக்கப்பட்டது.

``சென்னை பீட்டர்ஸ் சாலையில் அய்யம்பேட்டையைச் சேர்ந்த புரவலர் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களின் கட்டடமாம் தாருல் ஸமத் மாளிகையில் பிறப்பெடுத்த மணிச்சுடர், தமிழகமெங்கும் பரவி, தமிழ் பேசும் நாடுகளில் எல்லாம் விரவிச் சென்று தமிழக முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி, சன்மார்க்க, அரசியல் நிலைமைகளை விளக்கும் நாளிதழாக வலம் வந்தது.

பின்னர், சென்னை நுங்கம்பாக்கம் வாலஸ் தோட்டம் `பொன் மனம்’ மாளிகை - சகோதரர் திருநாவுக்கரசர் எக்ஸ் எம்.பி. அவர்களின் கட்டடம், மணிச்சுடர் அலுவலகமாக மாறியது. இக் காலத்தில் சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகளில் வாழும் தமிழக முஸ்லிம்களின் காலக் கண்ணாடியாக `மணிச்சுடர்’ திகழ்ந்தது.

அதன்பின்னர், இப்பொழுது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகம் காயிதெ மில்லத் மன்ஸில், மணிச்சுடர் அலுவலக மாக மாறியிருக்கிறது.

முஸ்லிம் லீகின் தலைமையகத்தில் இருந்து வெளிவரும் மணிச்சுடர், இன்றைக்கு இ.யூ. முஸ்லிம் லீகின் அதிகாரப்பூர்வ ஏடாக பரிணமித்திருக்கிறது.

இதற்கு முன்பும், மணிச்சுடர்தான், முஸ்லிம் லீகின் பிரச்சார ஏடாக விளங்கி வந்தது.

இன்றைக்கு மணிச்சுடர் நாளிதழ் - இ-பேப்பர் ஆகியிருக்கிறது. சென்னையில் மணிச்சுடர் அச்சாகி நமது கரங்களுக்கு வருமுன்னரே, உலகின் எல்லாப் பாகங்களிலும் மணிச்சுடர் இ-பேப்பரை வாசித்து, அதன் செய்திகள் பற்றிய சாதக - பாதக விமர்சனங்களும் வந்து விடுகின்றன! என்னே காலத்தின் மாற்றம்!

ஆரம்பம் முதல் இன்றைக்கு வரைக்கும் இ.யூ. முஸ்லிம் லீகின் குரலாக - கொள்கை முரசாக - அதன் வரலாற்று விளக்காகத் திகிழும் மணிச்சுடர் இருபத்து ஐந்து ஆண்டுப் பயணத்தை நிறைவு செய்து இப்பொழுது 26-வது ஆண்டில் பயணித்துக் கொண்டிருக் கிறது. கடந்து வந்த இருபத்தைந்து ஆண்டு காலத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் நடந்து வந்த பாதையை - அதன் பயணத்தில் நிகழ்ந்த பாடங்களை - காலச்சுவடுகளாகத் தொகுத்து மணிச்சுடர் வெள்ளிவிழா மலர் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சிறப்பு மலர் வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 4-ம் தேதி வியாழக்கிழமை 5 மணிக்கு சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெறுகிறது.

மலரை வெளியிட்டு தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் நிறைவுரை நல்குகிறார்!

இ.யூ. முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது, முந்நாள் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணியார், இந்திய தேசிய காங்கிரஸ் முன்னணித் தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ்  மற்றும் இ.யூ. முஸ்லிம் லீகின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகி கள், மணிச்சுடர் நிர்வாகிகள், இயக்குநர்கள், முந்நாள் இந்நாள் ஆசிரியர் குழுவினர், இதழுக்கு ஆதரவளித்து வரும் புரவலர்கள், மணிச்சுடர் முகவர்கள், நிருபர்கள், அலுவலர்கள், சர்வதேச காயிதெ மில்லத் பேரவை நிர்வாகிகள், முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகிகள், அறங்காவலர்கள் மற்றும் வாசக நேசகர்கள் எல்லோரும் பங்கேற்கிறார்கள். இது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, என்றென்றும் நினைவில் நிற்கும் நிகழ்ச்சியாகும்!

இந்த விழா, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் விழாவாகும்! இ.யூ. முஸ்லிம் லீகை வளர்த்து வரும் மணிச்சுடர், இ.யூ. முஸ்லிம் லீகினரால் வளர்ந்து வரும் ஏடாகும்!

இந்த விழாவில் பங்கேற்பது, இ.யூ. முஸ்லிம் லீகின் 25 ஆண்டு கால வரலாற்றை ஒரே இடத்தில் ஒரு சேரக் காண்பதற்கு ஒப்பாகும்! தமிழகம் முழுவதிலும் இருந்து ஒவ்வொரு முஸ்லிம் லீகரும் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டிய விழா என்பதை எல்லாரிடத்தி லும் எடுத்துச் சொல்லுங்கள்!

அக்டோபர் 4 - தலைவர் சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப் - சமூக நல்லிணக்கம் பேணிய சந்தனத் தமிழ் மேதை - சன்மார்க்க அறிஞர் -சமுதாயப் போராளி - பிறந்த நாள் என்பதையும் நினைவிற் கொள்ளுங்கள்!

சிராஜுல் மில்லத் பிறந்த நாளில் மணிச்சுடருக்கு வெள்ளி விழாவை உலகம் வியக்க நடத்திக் காட்டி, அதன் பொன்விழாவை பூலோகமே அதிசயிக்கும் வகையில் நடத்துவோம் என்பதைச் சூளுரையாகக் கொள்ள வாருங்கள்!

சென்னையில் 4-10-2012 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குச் சேருவோம்! எல்லோரும் ஒரே குரலில் மணிச்சுடர் வாழ்க! மணிச்சுடர் வெல்க! முஸ்லிம் லீக் ஜிந்தாபாத்! என்று கூறுவோம்!

வியாழன், 20 செப்டம்பர், 2012

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? - இன்டீரியர் டிசைனிங்


உட்புற அலங்காரம் என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல. கட்டிடக்கலையின் அம்சங்கள், பொருளின் வடிவமைப்பு மற்றும் சுற்றுசூழல் உளவியல் போன்ற பல அம்சங்கள், உட்புற பரப்பை, நேர்த்தியாகவும், படைப்புத்திறன் மிக்கதாகவும் மாற்றும் பணியில் கலந்திருக்கின்றன. ஒரு உட்புற அலங்கரிப்பாளர் என்பவர், தனது திறமையை வெளிப்படுத்தும்போது, வாடிக்கையாளரின் தேவையையும் மனதில் கொண்டு, அவரை திருப்திப்படுத்த வேண்டும். தான் ஏற்கனவே திட்டமிட்ட வடிவமைப்பு முறையை மாற்றம் செய்யவேண்டிய நிலை வந்தால், வாடிக்கையாளரின் தேவை மற்றும் விருப்பத்தைப் பொறுத்து, அதை மாற்றிக்கொள்ள அலங்கரிப்பாளர் தயங்கக்கூடாது.
உள்கட்டமைப்பின் பிரம்மாண்ட வளர்ச்சியால், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் என பல்வேறு தரப்பிலும் இன்டீரியர் டிசைன் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


இத்துறைக்கு தேவைப்படும் பண்புகள்: நல்ல படைப்புத் திறன்தான் இத்துறைக்கு அடிப்படையான மூலதனம். இத்தொழில் மீது மிகுந்த ஆர்வம் இருக்க வேண்டும். அலங்காரம் தொடர்புடைய பலவித பொருட்களைப் பற்றிய விரிவான அறிவும், அறிமுகமும் இருக்க வேண்டும். மேலும், எந்தெந்த வகை அலங்காரங்களுக்கு, எவ்வளவு பணம் செலவாகும் என்பதைப் பற்றியும் தெளிவான அறிவை பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான், வாடிக்கையாளர்களின் நிதிநிலைக்கேற்ப, ஒரு தெளிவான திட்டத்தை உடனடியாக தயாரித்து வழங்க முடியும்.

படிப்புகள்: ஜெய்ப்பூரில் உள்ள அயோஜன் ஸ்கூல் ஆப் ஆர்க், இன்டீரியர் டிசைன் பிரிவில் 5 ஆண்டு படிப்பாக வழங்குகிறது. சென்னை பல்கலை கல்லூரிகளில் பி.எஸ்சி., மற்றும் பி.எப்.ஏ., படிப்பாக வழங்கப்படுகிறது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூன்று ஆண்டு பி.எஸ்சி., ஓர் ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ படிப்புகளாக வழங்குகின்றன. கோவை அவினாசிலிங்கம் பல்கலை பி.எஸ்சி., ஹோம் சயின்ஸ் உடன் இன்டீரியர் டிசைன் பாடப்பிரிவை வழங்குகிறது.


கல்வி தகுதி: மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருப்பதே, உட்புற அலங்கார படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி. பலவித கல்வி நிறுவனங்களில், உங்களின் வரைதல் மற்றும் வடிவமைப்பு திறனை சோதிக்கும் வகையில், நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எனவே, இத்தேர்வுகளில் உங்களின் திறமைகளை நிரூபிக்க வேண்டும்.

இப்படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்கள்:

Madras University
AvinashilingamUniversity, Coimbatore
Mangalore University
University of Mumbai
Arch Academy of Design, Jaipur
Amity School of Design, Delhi
Guru Nanak Dev University, Amristar


கடையநல்லூரில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை :தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா ?


தாண்டவமாடும் தண்ணீர் பிரச்னையால் கடையநல்லூர் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பெரியாற்று படுகையில் முற்றிலுமாக நீர்பிடிப்பு குறைந்துவிட்டது. இப்பகுதியில் குடிநீருக்காக அமைக்கப்பட்ட கிணறுகளிலும் நீர்மட்டம் முழுவதும் குறைந்துவிட்ட நிலையில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாக வரக்கூடிய தண்ணீர் வினியோகம் தான் தற்போது பரவலாக மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடுமையான குடிநீர் பற்றாக்குறையை அடுத்து கடையநல்லூர் நகராட்சியில் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாளொன்றிற்கு நான்கு லாரிகள் மூலமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் நகராட்சி மூலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த குடிநீர் வினியோகம் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் என்ற நிலையும் இருந்து வருகிறது. லாரி மூலம் வினியோகம் செய்யப்படுகின்ற தண்ணீரும் பொதுமக்களுக்கு தட்டுப்பாடான நிலையிலேயே கிடைத்து வருகிறது.
இதனிடையில் குடிநீர் முறையாக வழங்கிட கோரி நகராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வலியுறுத்தி வரும் போராட்டங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வறட்சி நிவாரணத்தின் சிறப்பு நிதி மூலம் கடையநல்லூர் நகராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்திற் கொண்டு போர்க்கால அடிப்படையில் முறையான ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை மக்கள் மத்தியில் ஒட்டுமொத்தமாக எழுந்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெயிலின் தாக்கம் இதேநிலையில் தொடர்ந்தால் அடுத்த வாரம் தற்போது வழங்கப்பட்டு வரும் தண்ணீரை கூட பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய முடியாத நிலைதான் இருக்கக்கூடும். இருப்பினும் குடிநீர் வினியோகம் பற்றாக்குறையை தவிர்த்திட லாரிகள் மூலம் வழங்க எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
குடிநீர் பற்றாக்குறை கடையநல்லூரில் தாண்டவமாடும் நிலையில் மாவட்ட நிர்வாகம் வறட்சி நிவாரண சிறப்பு நிதியினை ஒதுக்கீடு செய்து லாரிகள் மூலம் கூடுதலான வகையில் அனைத்து வார்டு மக்களுக்கும் குடிநீர் கிடைத்திட ஏற்பாடு செய்திட வேண்டும் என்பதே நகராட்சி மக்களின் உடனடி எதிர்பார்ப்பாகும்.

புதன், 19 செப்டம்பர், 2012

முஸ்லிம்களின் போராட்டங்கள் தொடரும் - பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன்

முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கையை கொச்சை படுத்தி எடுக்கப்பட்ட படத்திற்கு தடை வித்தித்து ,அதனை எடுத்தவர்களின் மீது நடவடிக்கைகள் எடுக்கும் வரை முஸ்லிம்களின் போராட்டங்கள் தொடரும் - பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன் 


இஸ்லாத்தை இழிவுப்படுத்தி அமெரிக்க யூதரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்துவ பாதிரியாரால் விளம்பரப் படுத்தப்பட்டுள்ள ‘இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ திரைப்படத்தை அதன் விளம்பர காட்சிகளை தடை செய்து அதற்கு காரணமானவர்கள் மீது அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்காத வரை உலக முஸ்லிம்களின் கொந்தளிப்பு அடங்காது. யாராலும் அடக்கவும் முடியாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு விளம்பரப் படுத்தப்பட்டுள்ள ‘இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்"என்ற திரைப்பட முன்னோட்ட காட்சிகள் உலக முஸ்லிம்களை கொந்தளிக்க செய்து அமெரிக்க துhதரகங்களுக்குமுன்னால் ஆர்ப்பாட்டம் போராட்டம் என வீரியமடைந்து வருகிறது. சென்னையில் அமெரிக்க துணைத்துhதரகத்துக்கு முன்னால் கடந்த 5 நாட்களாக நடைபெறும் முற்றுகை போராட்டங்கள் துhதரக செயல்பாடுகளையே முடக்கிப் போட்டுவிட்டன.

இன்று (18-09-2012) மாலை நான்கு மணிக்கு நடைபெற்ற போராட்டம் சென்னையின் பிரதான பகுதிகளை செயலிழக்கச் செய்து விட்டது. பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணிவரை அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் திக்கு முக்காடிப் போயின போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் களைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்த போராட்டம் முடிந்ததற்கு பிறகு ஒளிபரப்பு செய்யப்பட்ட கலைஞர் செய்திகள் இரவுப் பதிப்பு செய்தி அறிக்கையில் நேர்க்கானலுக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அளித்த பதில்களும்:-

கேள்வி:- சென்னையின் பிரதான சாலையான அண்ணாசாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிக்கும் வகையில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. வாகனங்களில் வருவோருக்கு ஏன் எதற்கு இந்த போராட்டம் என்றே தெரியவில்லை இந்த போராட்டம் தேவைதானா? என்பதே முதல் கேள்வி எதற்காக இந்த போராட்டம்?

பேராசிரியர் பதில்:- போராட்டம் தேவை தானா என்ற கேள்வியே இப்போது இல்லை. போராட்டம் தேவை என்ற உணர்வே முஸ்லிம்கள் மனதில் உள்ளது. மற்ற விஷயங்களாக இருந்தால் தேவையா? தேவையில்லையா என்ற கேள்வி எழும். இப்பொழுது நடைபெறுவதில் அந்த பிரச்சனையே இல்லை.

இது தேவைதான் என்ற அளவுக்கு முஸ்லிம்களின் உணர்வு உள்ளது. அதற்கு என்ன காரணம் என்றால் நபிகள் நாயகத்தை பற்றி அவதூறான  செய்தி அருவருக்கத்தக்க படங்கள் வெளியிடப்பட்டுள்ளன!

என்னை பொருத்தவரை மிதவாதி, இதவாதி என்று சொல்வார்கள். நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னால் அந்த காட்சிகளை என்னிடத்தில் சொல்லிக் காட்டினார்கள். என்னாலேயே தாங்க முடியவில்லை. ஆனால் அதைப்பார்க்கின்ற இளைஞர்கள், வாலிப பிள்ளைகள் நிச்சயமாக கொந்தளிப்பார்கள்.

அதனுடைய வெளிப்பாடுதான் இப்பொழுது நடந்துக்கொண்டு இருக்கிறது. இது உலகம் முழுவதும் நடக்கும்.

தமிழ்நாட்டில் கடந்த 5 நாட்களாக நடக்கின்ற கொந்தழிப்புகளை நாம் செய்தியாக பார்க்கிறோம். ஆனால் வெளிநாடுகளில் என்ன நடக்கிறது என்று முழுமையாக நமக்கு தெரிவதில்லை. இதை விட பன்மடங்கு கொந்தளிப்பு வெளிநாடுகளில் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இஸ்லாமிய மார்க்கத்தைப்பற்றி குற்றம் குறை சொல்வது என்பது- முஸ்லிம்களைப் பற்றி விமர்சனம் செய்வது என்பது வேறு. ஆனால் நபிகள் நாயகத்தைப் பற்றி அவதூறு பரப்புவது என்பதை எந்த ஒரு முஸ்லிம்களும் தாங்கிக்கொள்ள மாட்டான். அதற்கு காரணம் என்னவென்றால், யாரை விடவும், தன்னை விடவும், தன்னுடைய தாய்,தந்தயரை விடவும் எதை விடவும் மிக உயர்வாக முஸ்லிம்கள் மதிப்பது நபிகள் நாயகத்தை தான்.

இஸ்லாத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தான் அந்த உணர்வுகளின் ஆழம் தெரியும். இதை நான் சொல்லும் போது இவருக்கு என்ன இவ்வளவு வெறியா? என்று எண்ணத் தோன்றும் இது இதயத்தில் ஏற்றுக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு கொள்கை.

அப்படிப்பட்ட நபிகள் நாயகத்தைப் பற்றி ‘ இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ என்ற பெயரில் அமெரிக்காவில் உள்ளகலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாம் பேசில் என்ற யூதர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இவர் சர்ச்சைக்குரிய ஆபாச படங்களை நிறைய தயாரித்துள்ளார். இதற்காக இவர் மீது பல கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இப்படிபட்டவர் சமீபத்தில் ‘டெசட் வாரியர்’ பாலைவன வீரர் என்ற பெயரில் ஒரு படம் தயாரித்து 60 நடிகர் நடிகைகளை நடிக்க செய்து அந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு 50 லட்சம் டாலர்களை 100 யூதர் செல்வந்தர்களிடம் இருந்து வசூலித்துள்ளார் 35 பேருடைய ஒத்துழைப்போடு 3 மாதங்களில் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஜார்ஜ் என்று ஹீரோவிற்கு பெயர் வைத்தார். இந்த படத்தை எடுத்து முடித்ததும் ஹீரோவின் பெயரை முஹம்மது என்றும், படத்தின் பெயரை ‘இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ என்றும் மாற்றியுள்ளார்.

இப்படி மாற்றியதோடு மட்டுமில்லாமல் இந்த வசனங்களையும் தன் இஷ்டத்துக்கு மாற்றியுள்ளார் இதற்காக அந்த நடிகர், நடிகைகள் இவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆக ஒரு மிகப்பெரும் மோசடி செய்து இந்தப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முஸ்லிம்களை மோசடிகாரர்கள், கள்ளக்கடத்தல்காரர்கள், இஸ்லாம் மார்க்கம் புற்று நோய் என்று சித்தரிக்கப்பட்டுள்ளன.

இவைகளைக் கூட ஒரு முஸ்லிம் பொறுத்துக்கொள்வான். நபிகள் நாயகத்துக்கு உருவமில்லை. நபி உருவப்படத்தை வெளியிடுவதுமில்லை. ஆனால் நபிகள் என்று ஒரு உருவத்தை அமைத்து முஹம்மது என்று பெயர் சூட்டி, தாடி வைத்து ஒருவிளைமாதுடன் உறவு கொள்வதாக காட்சி அமைத்து, இன்றைக்கு வரையில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அதை யார் பொருத்த கொள்ள முடியும்? இந்தியாவில் இதை தடை செய்திருக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் ஏன் தடை செய்யவில்லை என்பதுதான் கேள்வி.

கேள்வி:- உங்களுடைய தெளிவான விளக்கத்தில் இருந்து இந்தத் திரைப்படம் முஸ்லிம்களின் உள்ளங்களை காயப்படுத்துவதற்காக வேண்டும் என்றே எடுக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உங்களுடைய உலக முஸ்லிம்களுடைய கோரிக்கை இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்பது தானே?

பேராசிரியர் பதில்:- உலக இஸ்லாமியர்களின் கோரிக்கை என்பதை நான் தெளிவுப்படுத்துகிறேன் அமெரிக்காவின் கொள்கை என்பது, இஸ்லாத்தை முஸ்லிம்களை எதிர்க்கும் கொள்கை என்ற பொதுவான நம்பிக்கையே உலக முஸ்லிம்களிடம் உள்ளது. அது இல்லை என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவையே சார்ந்தது.

அடுத்து புனித திருக்குர்ஆனை எரிக்கக்கூடிய நிகழ்ச்சிகள் அங்கு தொடர்ந்து நடந்து வருகின்றன. முதலில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ராணுவ வீரர்கள் அதைச் செய்தார்கள். அதற்கு மறுப்பு, மன்னிப்பும் அமெரிக்கா தெரிவித்தது. அதே போன்று அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈராக்கில் அவமரியாதை செய்தனர். அதற்கு பிறகு அமெரிக்காவில் ஒரு பாதிரியார் அவர் பெயர் டெர்ரி ஜோன்ஸ் திருக்குரானை எரிக்கும் போராட்டத்தை முன் கூட்டியே அறிவித்து, அவர் எரித்ததை அமெரிக்க தொலைக்காட்சிகள் உலகம் முழுவதும் ஒளிபரப்பு செய்தன.

அமெரிக்க அரசு அதை தடுக்கவும் இல்லை அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் இல்லை. அதைத்தொடர்ந்து இப்பொழுது நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் திரைப்படத்தை எடுத்து இப்பொழுது ஒளிபரப்பு செய்கின்றார்கள். அதை இன்று வரை தடை செய்ய வில்லை.

இது உலகலாவிய முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துகிறது. உள்ளங்களை காயப்படுத்துகிறது என்று கருதி அமெரிக்க அரசு இதை தடை செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை செய்யவில்லை. அப்படியானால் குர் ஆனை எரிப்பதற்கு அவர்கள் உடன்படுகிறார்களா? அதனுடைய தொடர்ச்சிதான் இது. எனவே முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்துவதுதான் அமெரிக்காவின் நோக்கமா? என்பதே முஸ்லிம்களின் கேள்வி.

எனவே தான் இந்த போராட்டங்கள் தொடர்கின்றன. என்னை இந்த போராட்டத்திற்கு அழைத்தார்கள். நான் செல்ல வில்லை என்னை போன்று வயதானவர்கள் நடுநிலையாக சிந்திக்க கூடியவர்கள் பொறுமையாக இருக்கலாம் ஆனால் வாலிபனாக உள்ளவன் இந்த காட்சிகளைப் பார்க்கிறான் கொந்தளிக்கிறான் உணர்வுகளை வெளிப்படுத்த என்ன செய்வதென்று தெரியாமல்தான் இப்படிப்பட்ட செயல்களை செய்கிறான்.

கேள்வி:- உலகம் முழுவதும் இது போன்ற போராட்டங்கள் நடைபெறுகின்றன அமெரிக்காவிலும் நடைபெறுகின்றன. அமெரிக்காவில் இந்த அளவிற்கு இல்லை. சென்னையில் அதிகம் நடைபெறுகின்றன. சென்னையில் நடைபெறும் போராட்டம் அமெரிக்காவில் எட்டுமா?

பேராசிரியர் பதில்:- நிச்சயம் எட்டும் அமெரிக்காவில் முஸ்லிம்கள் அதிகம் இல்லை. முஸ்லிம்கள் அதிகம் உள்ள நாடுகளில் போராட்டம் தீவிரமாக நடைபெறுகிறது. குறைந்த பட்சம் அமெரிக்கா இணைய தளத்தில் உள்ள படங்களை தடைசெய்து இருக்கலாமே! அதை ஏன் நிறுத்தவில்லை? முதலில் இணையதளங்களில் உள்ள படங்களை நிறுத்தட்டும் அதற்கு பிறகு படம் எடுத்தவன், வெளியிட்டவன் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும்

அமெரிக்கா இதை செய்யும் வரை இந்த போராட்டங்கள் ஓயாது. இதை  நிறுத்தவும் யாராலும் முடியாது, மிதவாதிகள் வயதானவர்கள் அதை எரிக்க வேண்டாம், இதை செய்ய வேண்டாம் என சொல்லலாம் ஆனால் உணர்வு என்பது மிக ஆழமானது அந்த உணர்வை நாம் நிறுத்த முடியாது அது வெளிப்பட்டே தீரும். இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்