Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 29 மே, 2013

திருநெல்வேலியில் பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் துவக்கம் குப்பை கிடங்கில் கலெக்டர் ஆய்வு

பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் விரைவில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் துவக்கப்படுகிறது.

நெல்லை மாநகராட்சி ராமையன்பட்டியில் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இங்குள்ள குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக கலெக்டர் சமயமூர்த்தியிடம், புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ராமையன்பட்டி குப்பை கிடங்கை நேற்று நேரில் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது:
குப்பை கிடங்கில் வருங்காலங்களில் இதுபோன்ற தீ எரிவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குப்பைகள் பகுதி, பகுதிகளாக பிரிக்கப்பட்டு கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குப்பை கொட்டும் பகுதிகளை சுற்றி தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கப்படும். இதன் மூலம் திடீர் தீ விபத்துக்கள் தடுக்கப்படும்.

குப்பைகளில் வரும் கழிவுகள் பிரிக்கப்பட்டு பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக கொட்டப்படும். மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உள்ளது. குப்பை கிடங்கில் பணியாற்றும் பணியாளர்கள் கவனத்துடன் பணியாற்றி தீ ஏற்படாத வகையில் தடுக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இதில் மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மோகன், பி.ஆர்.ஓ மாரியப்பன், தீயணைப்பு அலுவலர் பத்மகுமார், உதவி தீயணைப்பு அலுவுவலர் குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக