Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 29 மே, 2013

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் அணைகளில் தண்ணீர் தட்டுப்பாடால் விவசாயிகள் அவதி

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் அணைகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டு வரும் நிலையில் கார்சாகுபடி மேற்கொள்வதில் விவசாயிகள் பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர். பிசான சாகுபடியும் ஏமாற்றிவிட்ட நிலையில் கார் சாகுபடியும் பொய்த்துவிடுமோ என்ற ஏக்கத்தினால் விவசாயிகள் பெரும் ஆதங்கத்துடன் காணப்பட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கோடை மழை பொய்த்துவிட்ட நிலையில் வறட்சி மாவட்டமாக நெல்லை மாவட்டமும் அறிவிக்கப்பட்டது. இதனிடையில் கடையநல்லூர் தொகுதியை பொறுத்தவரை சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பிசான சாகுபடி நிலங்கள் போதுமான பருவமழையின்றி தரிசாக விடப்பட்டன. இத்தொகுதியில் உள்ள கருப்பாநதி, அடவிநயினார், குண்டாறு ஆகிய அணைகளுக்குட்பட்ட பாசன விவசாயிகள் பிசான சாகுபடியை போதுமான முறையில் மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அணைப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகள் கூட விளைந்த பயிரை அறுவடை செய்ய பெரும்பாடுபட்டனர்.

இதனிடையில் தற்போது இத்தொகுதியில் உள்ள கருப்பாநதி அணை முற்றிலுமாக வறண்டு வரும் ‹ழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அடவிநயினார் அணைக்கட்டின் நீர்மட்டமும் இதே நிலையில் தான் காணப்பட்டு வருகிறது. குண்டாறு அணைக்கட்டை பொறுத்தவரை கார்சாகு போதுமான தண்ணீர் இல்லாத நிலைதான் இருந்து வருகிறது. இதனால் கடையநல்லூர் பகுதியில் கார் சாகுபடி செய்ய விவசாயிகள் பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனை மேற்கொள்ள முதற்கட்ட பணியாக துவங்கவேண்டிய நாற்றுபாவும் பணிகள் கூட ஒரு சில இடங்களில்தான் காண முடிகிறது.

பருவழையும் கைகொடுக்காத நிலையில், கார் சாகுபடிக்கான மழையும் இல்லாததால் விவசாயிகள் பெரும் ஏக்கத்துடன் இருந்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக