Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 13 ஏப்ரல், 2013

கிராமப்புற மேலாண்மைக்கான கல்வி நிறுவனம்


கிராமப்புற மேலாண்மைக்கான கல்வி நிறுவனம், கடந்த 1979ம் ஆண்டு, குஜராத் மாநிலத்தின் ஆனந்த் என்ற இடத்தில் தோற்றுவிக்கப்பட்டது. கூட்டுறவு மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைப்புகளுக்கு, மேலாண்மை கல்வி, பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை உதவி ஆகியவற்றை வழங்குவது இக்கல்வி நிறுவனத்தின் நோக்கம்.

நிர்வாக மேம்பாட்டு பயிற்சிகள்
கிராமப்புற மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டிருக்கும் நிபுணர்களுக்காக, பலவிதமான மேலாண்மைத் துறைகளில், 1 நாள் காலஅளவு தொடங்கி, 4 வாரங்கள் காலஅளவு வரையிலான நிர்வாக மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் Workshop -களை நடத்துகிறது.

கூட்டுறவு சங்கங்கள், லாபநோக்கமற்ற அமைப்புகள், கிராமப்புற மேம்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அரசு மற்றும் quasi - government அமைப்புகளில் பணிபுரியும் நிபுணர்களுக்கு மேற்கூறிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதுவரை, 675க்கும் மேற்பட்ட பயிற்சிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில், 14,500க்கும் மேற்பட்ட நிபுணர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றுள்ளனர்.

உள்கட்டமைப்பு வசதி

இக்கல்வி நிறுவன வளாகத்தில், பல்லாயிரக்கணக்கான புத்தகங்களையும், பல நவீன வசதிகளையும் கொண்ட நூலகம், சிறப்பான கணினி மையம், மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்ட விடுதிகள், பிரமாண்ட கலையரங்கம் மற்றும் பல்வேறு விளையாட்டுக்களுக்கான மைதான வசதிகள் போன்றவை உள்ளன.

இக்கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகள்

* கிராமப்புற மேலாண்மைக்கான முதுநிலை டிப்ளமோ

இது 2 வருட முழுநேர ரெசிடென்ஷியல் படிப்பாகும். இப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பிற்கு சமமாக, இந்திய பல்கலைகள் அசோசியேஷனால்(AIU) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும் இப்படிப்பை அங்கீகரித்துள்ளது.

இப்படிப்பை மேற்கொள்வோர், உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேசிய கூட்டுறவு அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மேம்பாட்டு அமைப்புகள் மற்றும் நிதி வழங்கும் அமைப்புகள் ஆகியவற்றில் நல்ல பணி வாய்ப்புகளை, கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக பெறுவார்கள்.

* கிராமப்புற மேம்பாட்டில் பெல்லோ ப்ரோகிராம்

இது ஒரு டாக்டோரல் படிப்பு. குறைந்தபட்சம் 3 வருடங்களைக் கொண்ட இப்படிப்பு, அதிகபட்சம் 6 வருடங்கள் வரை நீளும். ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் கிராமப்புற மேலாண்மை கல்வி நிறுவனங்களில், குறிப்பிட்ட அறிவுசார் துறையின் பணியை எதிர்பார்ப்போர் ஆகியோருக்கு, இப்படிப்பு ஏற்றது.

ஒரு வலுவான கோர்ஸ்ஒர்க்(coursework) மற்றும் டாக்டோரல் தீசிஸ்(thesis) ஆகிய இரண்டும்தான் இப்படிப்பின் இரண்டு முக்கிய அம்சங்கள். இந்த டாக்டோரல் படிப்பை முடிக்க ஒருவர், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள், கல்வி நிறுவன வளாகத்தில் தங்கியிருக்க வேண்டும். கோர்ஸ்ஒர்க் முடிந்தபிறகு, ஒவ்வொருவரும், ஒரு விரிவான தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும். அத்தேர்வானது, தீசிஸ் ஆராய்ச்சிக்கு முந்தையது. கூடுதலாக, ஒவ்வொரு ஆராய்ச்சியாளரும், குறிப்பிட்ட காலஅளவிற்கு, கற்பித்தல், ஆராய்ச்சி அல்லது எடிட்டோரியல் உதவியாளர் போன்ற பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

மாணவர் சேர்க்கை
மேற்கூறிய 2 படிப்புகளிலும், மாணவர் சேர்க்கை மற்றும் இதர விஷயங்களை அறிந்துகெள்ள https://www.irma.ac.in/admissions/admissions.php என்ற வலைத்தளம் செல்க.

பழைய மாணவர் அமைப்பு
இக்கல்வி நிறுவனம், வலுவான பழைய மாணவர் அமைப்பினை பெற்றுள்ளது. இரண்டாண்டு படிப்பில் பட்டம் பெற்றவர்கள், தங்களுக்கென அமைப்பினை வைத்துள்ளனர். மேலும், பழைய மாணவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், இக்கல்வி நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கவும், Institute of Rural Management Alumni Association என்ற பெயரில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, பதிவுசெய்யப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்தமாக, இக்கல்வி நிறுவனம் பற்றி அனைத்து அம்சங்களையும் அறிந்துகொள்ள https://www.irma.ac.in என்ற இணையதளம் செல்லவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக