Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வில் அரசியல் : மத்திய அமைச்சர் ஆதங்கம்


"நாட்டில் உயர்கல்வித்துறை வளர்ச்சி பெற, தகுதி, திறமை அடிப்படையில் தான், பல்கலை துணைவேந்தர்கள், தேர்வு செய்யப்பட வேண்டும்; அரசியல் தலையீடு கூடாது,'' என, மத்திய இணை அமைச்சர் தாமஸ், பேசினார்.

அகில இந்திய பல்கலைக்கழக அமைப்பு சார்பில், தெற்கு மண்டல பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு, கோவை காருண்யா பல்கலையில் நேற்று துவங்கியது. மாநாட்டில் மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத்துறை இணை அமைச்சர், தாமஸ் ,பேசியதாவது:இந்தியாவில், 62 மில்லியன் டன் உணவு தானியங்கள், உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், 80 சதவீதம் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் பங்களிப்பு உள்ளது. வரும் 2020ல் உணவு தானியங்களின் உற்பத்தியை 82 மில்லியன் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நாட்டின் மக்கள் தொகை, தற்போது 120 கோடியை எட்டியுள்ள நிலையில், உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற்றுள்ளோம்; இப்பெருமை விவசாயிகளுக்கே சேரும்.உயர்கல்வித்துறை வளர்ச்சியில் பல்கலை துணைவேந்தர்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது. உண்மையான தகுதி, திறமை அடிப்படையில் மட்டுமே, துணைவேந்தர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அரசியல் கட்சியினர் தலையீடு, இருத்தல் கூடாது. உயர்கல்வித்துறை வளர்ச்சிக்கு உதவும் வகையில், துணைவேந்தர்கள் சுதந்திரமாக செயல்படவேண்டும்.இவ்வாறு, தாமஸ் பேசினார்.

மாநாட்டில் சமுதாய மாற்றத்தில், பல்கலையின் பங்கு, என்ற தலைப்பில் கருத்தரங்கு, நடந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த, 23 துணைவேந்தர்கள், பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக