Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 13 ஏப்ரல், 2013

தமிழக அரசு சமூக நலத் துறைக்கு உயர்நீதிமன்றம் "நோட்டீஸ்"


நாமக்கல் மாவட்டம், என்.புதுப்பட்டியில் உள்ள, "த்ரீ ஸ்டார்' கோழிப்பண்ணை நிறுவனம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு: நாங்கள் உற்பத்தி செய்யும் முட்டைகள், தரமானவை. முட்டைகள் அழிந்து போகும் தன்மை உடையதால், மாவட்ட அளவில், கொள்முதல் செய்யப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாதம் தோறும், முட்டை கொள்முதல் செய்யும் வழக்கம் இருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு, அக்டோபரில், சமூகநலத் துறை, ஒரு அரசாணையை வெளியிட்டது. அதில், "மாவட்ட வாரியாக கொள்முதலுக்குப் பதில், ஒரே டெண்டர் மூலம், மாநிலம் முழுவதற்கும், முட்டை கொள்முதல் செய்யப்படும்; ஓராண்டுக்கு என, டெண்டர் வெளியிடப்படும்' என, கூறப்பட்டுள்ளது. டெண்டர் நிபந்தனைகள், சென்னையைச் சேர்ந்த, இரண்டு நிறுவனங்களுக்கு பொருந்தும் விதத்தில் உள்ளது.

டெண்டரை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. அதையடுத்து, கடந்த ஆண்டு, அக்டோபரில், புதிதாக டெண்டர் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும், ஒரு நாளைக்கு, 60 லட்சம், முட்டைகள் "சப்ளை' செய்ய வேண்டும். ஒரே "கான்ட்ராக்ட்' மூலம், இவ்வளவு முட்டைகளை சப்ளை செய்ய முடியாது. முட்டை விலை, ஏதாவது ஒரு மாதத்தில் குறைந்தால், ஓராண்டு அடிப்படையிலான டெண்டரால், அரசுக்கு தான் இழப்பு ஏற்படும். எனவே, டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி என்.பால்வசந்தகுமார் அடங்கிய "முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமி ஆஜரானார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி, சமூக நலத் துறைக்கு "நோட்டீஸ்' அனுப்ப, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக