Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

தேசிய நதிநீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வற்றாத நதியான தாமிரபரணியை மேம்படுத்த நடவடிக்கை

தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் மற்றும் மாநகர காவல் துறையினர் இணைந்து கடந்த ஆண்டு சனிக்கிழமை தோறும் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தினர். இந்த ஆண்டு முதற்கட்டமாக தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம், பாளை., சேவியர் கல்வியியல் கல்லூரி சார்பில் தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணி சிந்துபூந்துறையில் நேற்று துவங்கியது.

 நிகழ்ச்சிக்கு பாளை., சேவியர் கலைமனைகளின் அதிபர் பிரிட்டோ வின்சென்ட் தலைமை வகித்தார். நெல்லை தாமிரபரணி பாதுகாப்பு இயக்க தலைவர் ஜோசப் கென்னடி முன்னிலை வகித்தார். கலெக்டர் சமயமூர்த்தி தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணியை துவக்கி வைத்து பேசியதாவது;
தாமிரபரணி தென் தமிழகத்தின் புண்ணிய நதியாகும். இந்த நதி பெரிய பொதிகையில் உற்பத்தியாகி நீண்ட தூரம் பயணம் செய்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தாமிரபரணி ஆற்றில் 8 அணைகள் உள்ளன. இதில் 7 அணைகள் சங்க காலத்திலும், ஒரே ஒரு அணி பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலும் கட்டப்பட்டதாகும். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்க 7 அணைகள் கட்டப்பட்டன. இத்தகைய பெருமைமிக்க நதியை தூய்மையாக பராமரிக்க வேண்டியது மாநகர மக்களின் பொறுப்பாகும். தாமிரபரணியை 3 நாட்களில் 5 முதல் 10 ஏக்கர் வரை சுத்தப்படுத்த முடியும். ஆற்றை சுத்தப்படுத்துவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தாமிரபரணி நதியை அனைவரும் ஒன்றுபட்டு பாதுகாக்க வேண்டும்.

கங்கை நதியை தேசிய நதிநீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்து பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதுபோல் தாமிரபரணி நதியை தேசிய நதி நீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பாதுகாக்க திட்ட விவர அறிக்கை தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தாமிரபரணியை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. எதிர்கால ஆசிரியர்களான நீங்கள், கிராமம் கிராமமாக சென்று அங்குள்ள மக்களிடையே சுகாதாரம் குறித்து கல்வி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் அனைவரும் சுகாதாரத்தை மேம்படுத்தி நலமுடன் வாழ முடியும்.இவ்வாறு கலெக்டர் சமயமூர்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் சேவியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் தாமஸ் அலெக்ஸ், மாநகர போலீஸ் உதவி கமிஷனர் லோகநாதன், பொதுப்பணித்துறை இன்ஜினியர் முத்துபாண்டி, கவுன்சிலர் பரணி சங்கரலிங்கம், நெல்லை டவுன் அடைக்கல மாதா ஆலய பங்கு தந்தை அந்தோணி குரூஸ், தாமிரபரணி பாதுகாப்பு இயக்க துணை தலைவர் ஜாண்சன், தே.மு.தி.க., நெல்லை தொகுதி பொறுப்பாளர் ஆனந்தமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து சேவியர் கல்வியியல் கல்லூரி மாணவர்கள், பெண்கள் மற்றும் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் தாமிரபரணி ஆற்றில் உள்ள குப்பை, புதர், முட்செடி போன்றவற்றை அகற்றி, ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை 9ம் தேதி மதியம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன் பணியை நிறைவு செய்து வைக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக