Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 15 ஜனவரி, 2013

சிறுபான்மையோர் அதிகம் வசிக்கும் மாவட்டங்கள் பின்தங்கியுள்ளன


கோவை கிளையின் இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கம் சார்பில், மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர், ரகுமான்கானுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது.

அப்போது, மத்திய அமைச்சர் ரகுமான்கான் நிருபர்களிடம் கூறியதாவது : "2ஜி' ஸ்பெக்ட்ரம் மற்றும் நிலக்கரி ஊழல் தொடர்பான, மத்திய கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கை, இறுதியானது இல்லை; தற்காலிகமானது. பாராளுமன்ற கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கையே இறுதியானது. மத்திய கணக்கு தணிக்கை குழுவின் அதிகாரத்தை குறைக்க, மத்திய அரசு, எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.நம்நாட்டில், ஐந்து பிரிவுகளில், மொத்தம், 22 கோடி சிறுபான்மையினர் மக்கள் உள்ளனர். இதில், சிறுபான்மையினர் வசிக்கும், 90 மாவட்டங்கள் பின்தங்கியுள்ளன.

இதை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாவட்டங்களில், குழந்தைகளுக்கான கல்வி, பெண்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி, மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. வக்பு வாரிய மசோதாவை, வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வக்பு வாரியத்திற்கு சொந்தமான, நான்கு லட்சம் ஏக்கர் ஆக்கிரமிப்பு மீட்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு மத்திய அமைச்சர் ரகுமான் கான் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக