Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 8 ஜனவரி, 2013

அதிகம் லாபம் தரும் கொய்யா மரம் பயிர் செய்வதில் விவசாயிகள் தீவிரம்


 கொய்யா பயிர் செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதாக திண்டிவனம் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
திண்டிவனம் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கொய்யா மரம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து மாமண்டூரை சேர்ந்த செல்வா என்ற விவசாயி கூறிய
தாவது:
கொய்யா மரம் நடவு செய்த இரண்டு ஆண்டில் காய் காய்க்கத் துவங்கிவிடும். இந்த மரம் ஒன்றிற்கு 1 கிலோ பொட்டாஷ், டி.ஏ.பி., மற்றும் பாக்டம்பாஸ் உள்ளிட்ட உரங்கள் போடப்படுகிறது.
கொய்யா மரத்தை சப்பாத்தி பூச்சி தாக்காமல் இருக்க மருந்து அடிக்க வேண்டும். இதில் லக்கோனா ரகம் கொய்யாக் காய் ஆடி, ஆவணி, புரட்டாசி உள்ளிட்ட மாதங்களில் அதிகமாக காய்க்கும்.
காய் அறுவடையின் போது கொய்யா தோட்டத்திற்கு வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் போது ஒரு கிலோ 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் விழாக்காலங்களில் ஒரு கிலோ காய் 40 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படும்.

நான் தற்போது 7 அரை ஏக்கர் பரப்பளவில் கொய்யா மரத் தோப்பு குத்தகை எடுத்து பயிர் செய்துள்ளேன்.
இந்த பரப்பளவில் ஒரு ஆண்டிற்கு 10 கிலோ எடையுள்ள பெட்டியில் 10 ஆயிரம் பெட்டி காய் அறுவடை செய்வேன். இதனால் எனக்கு ஆண்டு ஒன்றிற்கு செலவுகள் போக 4 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
கொய்யா மரத்தை சரியாக பராமரித்தால் 12 ஆண்டுகள் வரை விடாமல் காய் காய்க்கும். கொய்யா பயிர் செய்வதன் மூலம் எப்போதும் லாபம் மட்டுமே கிடைக்கும் என்று விவசாயி செல்வா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக