Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 8 ஜனவரி, 2013

நசிந்து வரும் சுண்ணாம்பு கல் தயாரிப்பு தொழில்


வெள்ளை அடிக்க சுண்ணாம்பு பொடிகள் மற்றும் பெயிண்ட் பயன்பாடு அதிகரிப்பதால், சுண்ணாம்பு கல் தயாரிக்கும் தொழில் நசிந்து வருதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

தமிழக மக்கள், பொங்கல் பண்டிகையை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.இத்திருநாளையொட்டி, பொதுமக்கள் இல்லங்களை சுத்தப்படுத்தி, சுண்ணாம்பு அடித்து, கோலமிட்டு அலங்கரிப்பர். நவீன பெயிண்ட்கள் மற்றும் சுண்ணாம்பு பொடிகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதை அடுத்து, சுண்ணாம்பு கல் விற்பனை குறைந்துள்ளது.

இது குறித்து தர்மபுரி சுண்ணாம்புகாரத் தெருவை சேர்ந்த காவேரியம்மாள், 55 கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில், சுண்ணாம்பு கல் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்தது தர்மபுரி சுண்ணாம்பகாரத்தெரு. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பொதுமக்கள் மத்தியில் சுண்ணாம்பு கல்லுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இத்தொழிலில் இப்பகுதியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தோம். பெயிண்ட், மற்றும் சுண்ணாம்பு பொடி வரத்தால், சுண்ணாம்பு கல்லுக்கு சந்தையில் மவுசு குறைய துவங்கியது.

இதனால், இத்தொழில் ஈடுபட்டிருந்தவர்கள் படிபடியாக வேறு தொழிலுக்கு செல்லத் துவங்கினர். பரபரம்பரை தொழிலை விட முடியாமல், சுண்ணாம்பு கல் தயாரிக்கும் தொழில் இப்பகுதியில் உள்ள, மூன்று குடும்பங்களை சேர்ந்தவர்கள் மட்டும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.
தர்மபுரியை அடுத்த அரியகுளம் பகுதியில் தனியார் நிலங்களில் இருந்து சுண்ணாம்புகல்கள் வெட்டி எடுக்கப்பட்டு டிராக்டர்கள் மூலம் இங்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு டிராக்டர் சுண்ணாம்பு கல் வெட்டி எடுத்து, தர்மபுரி கொண்டு வர, 2,000 ரூபாய் செலவகிறது. ஒரு டிராக்டர் லோடு சுண்ணாம்பு கல்லில், 200 கிலோ சுண்ணாம்பு தயாரிக்க முடிகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நவம்பர் மாதம் இருந்து சுண்ணாம்பு கல் உற்பத்தி துவங்கும். மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லதால், இந்தாண்டு கடந்த, 10 தினங்களுக்கு முன் தான் பணிகள் துவங்கியது.
கிராமக்கள் மட்டும் வீடுகளை வெள்ளை அடிக்க சுண்ணாம்பு கல்கலை வாங்கி செல்வதால், ஐந்து டிராக்டர் லோடு சுண்ணாம்பு கல் மட்டும் வாங்கி சூளை வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆயிரம் கிலோ வரை சுண்ணாம்பு கல் கிடைக்கும். ஒரு கிலோ சுண்ணாம்பு கல், 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் சீஸன் முடிந்தும் வேறு வேலைகளுக்கு சென்று விடுவோம்.இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக