Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 8 ஜனவரி, 2013

சினிமா ஆசை காட்டி ரூ.2 கோடி மதிப்பு சொத்து அபகரிப்பு


 சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மோசடி செய்து அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர் திருவண்ணாமலை எஸ்.பி., முத்தரசியிடம் புகார் மனு கொடுத்தார்.

வந்தவாசி அடுத்த தூசி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் கோபு, 42. இவர் நேற்று முன்தினம் (டிச.,31) மாலை தனது சகோதரி உஷாராணி மற்றும் உறவினர்கள் சிலருடன் வந்து திருவண்ணாமலை எஸ்.பி., முத்தரசியிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரத்தில் உள்ள எனது அக்கா உஷாராணி வீட்டில் தங்கி என்னை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி தூசி கிராமத்தை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் ஒருவர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகரிடம் அழைத்து சென்றார்.

இருவரும் சேர்ந்து என்னை "டிவி' தொடர் ஒன்றில் சில காட்சிகளில் நடிக்க வைத்தனர். ஒரு நாள் திருத்தணியில் தங்கியிருந்த போது, எனக்கு மது வாங்கிகொடுத்து என்னிடம் வெற்று பேப்பர்களில் கையெழுத்து வாங்கினர்.
வெற்று பேப்பர்களில் கையெழுத்து போட்டால்தான் சினிமாவில் நடிக்க முடியும் என கூறி, அரை மயக்கத்தில் இருந்த என்னிடம் பல வெற்று தாள்கள், பாண்டு பத்திரங்களில் கையெழுத்து வாங்கி கொண்டு தனியே விட்டு விட்டு சென்றுவிட்டனர்.

கஷ்டப்பட்டு காஞ்சிபுரம் திரும்பி வந்தேன். சந்தேகத்தின்பேரில் என் பெயரில் உள்ள சொத்துக்கள் குறித்த விசாரித்த போது, வீடு நிலங்களை போலியான ஆவணம் மூலம் வேறு நபர்களுக்கு விற்று இருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு, 2 கோடி ரூபாயாகும். எனவே அபகரிக்கபப்ட்ட எனது சொத்துக்களை மீட்டு தந்து, மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.மனு மீது எஸ்.பி., முத்தரசி விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக