Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 15 டிசம்பர், 2012

வேலியே பயிரை மேய்ந்த கதை : கேவலப்படும் ஆசிரிய சமுதாயம்

தேவகோட்டை அருகே பள்ளி மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 ஆசிரியர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த அனுமந்தம்பட்டியிலுள்ள அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் கடந்தாண்டு கேரளா சுற்றுப்பயணம் சென்றனர். அப்போது உடற்கல்வி ஆசிரியர் வேதமாணிக்கம், மாணவியரிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது.

ஆனால் அப்போது விஷயம் அமுக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், சொக்கர் என்பவர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு அனுப்பிய புகாரில் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அக்குழுவினர் நடத்திய விசாரணையில், வேத மாணிக்கம் தவிர, சீனிராஜ் என்ற ஆசிரியரும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிய வந்தது. இதையடுத்து, கலெக்டருக்கு அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், அவரது உத்தரவின் பேரில், இருவர் மீதும் தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக