Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 17 டிசம்பர், 2012

மோட்டாரோலாவின் சென்னை பிரிவு மூடப்படுகிறது

மோட்டாரோலா மொபிலிட்டி நிறுவனம், சென்னையில் அதன் அலைபேசி சாதனங்களை ஒருங்கிணைக்கும் தொழிற்பிரிவை, வரும் 2013ம் ஆண்டு பிப்ரவரியில் மூட உள்ளது.பதிவேற்றும் பணி கடந்த 2008ம் ஆண்டு, 172 கோடி ரூபாய் முதலீட்டில் துவக்கப்பட்ட இப்பிரிவில், அலைபேசி சாதனங்களில் மென்பொருள்களை பதிவேற்றுவது மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இனி, அலைபேசி தயாரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து நேரடியாக, வாடிக்கையாளர்களுக்கு அலைபேசி சாதனங்களை விற்பனை செய்ய, இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கூகுள் நிறுவனம், மோட்டோரோலா குழுமத்தின் அலைபேசி சாதன பிரிவை கையகப்படுத்தியது.தென்கொரியா சர்வதேச அளவில், மோட்டரோலா மொபிலிட்டி நிறுவனத்தில், 20 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இதில், 4,000 பணிகளை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், மொத்தம் உள்ள, 90 தொழிற்பிரிவுகளில், மூன்றில் ஒரு பங்கை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதன்படி, 500 பேரைக் கொண்ட தென்கொரிய பிரிவை மூடப்போவதாக, நேற்று முன்தினம் இந்நிறுவனம் அறிவித்தது.

சென்னை தொழிற்பிரிவில், 72 பேர் பணிபுரிகின்றனர். அலைபேசி சாதனங்கள் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் உரிய நிவாரண தொகையும், பிற நிறுவனங்களில் பணி வாய்ப்பு வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இனி, புதுமையான, லாபகரமான அலைபேசி சாதனங்களை தயாரிக்க மோட்டாரோலா மொபிலிட்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக