Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 18 டிசம்பர், 2012

தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 800 மயக்கவியல் நிபுணர் பணியிடங்கள் காலி

 "தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில், 800 மயக்கவியல் நிபுணர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், நோயாளிகளுக்கு அவசர கால சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை' என, சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் 1615 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 8700 உதவி சுகாதார மையங்களும் உள்ளன. இங்கு, அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு முதலுதவி அளிக்கப்படுகிறது. அவசியம் ஏற்பட்டால், அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.

மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஒரு மயக்கவியல் நிபுணர் பணியிடம் உள்ளது. ஆனால், பல இடங்களில், இப்பொறுப்புகளுக்கு மயக்கவியல் டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: பெரும்பாலான சுகாதார நிலையங்களில், போதுமான எண்ணிக்கையில், மயக்கவியல் நிபுணர்கள் கிடையாது. தமிழகம் முழுவதும் 800 மயக்கவியல் நிபுணர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், அவசர சிகிச்சை, அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு, உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியவில்லை. நோயாளிகளுக்கு மயக்க மருந்து அளிக்கும் நிபுணர் இல்லாமல், எதுவும் செய்ய முடியாது. தமிழக அரசு, மாநிலம் முழுவதும் தீவிரமாக ஆராய்ந்து, காலியாக இருக்கும் மயக்கவியல் நிபுணர் பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக