Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 17 டிசம்பர், 2012

லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி


"நேரு யுவகேந்திரா அமைப்பு, ஒரு லட்சம்
இளைஞர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க உள்ளது,'' என, இந்த அமைப்பின் பொது இயக்குனர் சலீம் அகமது கூறினார்.

இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய விளையாட்டுத் துறையின், நேரு யுவகேந்திரா அமைப்பு, வரும், 2013ம் ஆண்டு, வெள்ளி விழா கொண்டாடுகிறது.

இதையொட்டி, கன்னியாகுமரி மற்றும் நாமக்கலில், இளைஞர்களுக்கான தொழில் பயிற்சி மையங்கள் துவங்கப்பட உள்ளன. நாடு முழுவதும், அனைத்து கிராமங்களிலும், இளைஞர் மன்றம் ஏற்படுத்தப்படும்.
வரும் 2013ம் ஆண்டு, பிப்., 13ம் தேதி, டில்லி, பல மாநிலங்களைச் சேர்ந்த, ஒரு லட்சம் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டு பயிற்சி, அளிக்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு, தமிழகத்தில், 4,350 பெண்களுக்கு, கணினி, தையல் உள்ளிட்ட பல தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு சலீம் அகமது கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக