Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 11 ஜூலை, 2012

களை கட்டியது குற்றாலம் ..............




குற்றாலத்தில் இரவு நேரங்களில் சாரல் நன்றாக பெய்வதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சீசன் ‘களை’ கட்ட துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். குற்றாலத்தில் ஜூலை மாத துவக்கத்தில் சாரல் நன்றாக இருந்தது. அதன்பிறகு 5 நாட்கள் சாரல் இல்லாமல் வெயில் அடித்த நிலையில் கடந்த 2 தினங்களாக மீண்டும் சாரல் மழை பெய்கிறது. நேற்று பகலில் சாரல் சற்று ஓய்வெடுத்து இருந்தாலும் இரவில் பெய்தது.
தொடர்ந்து 2 தினங்களாக சாரல் நன்றாக இருப்பதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 

ஐந்தருவியில் 5 பிரிவுகளிலும் தண்ணீர் விழுகிறது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் பரந்து விரிந்து கொட்டுகிறது. புலியருவி, பழையகுற்றாலம் ஆகியவற்றிலும் ஓரளவு தண்ணீர் விழுகிறது. இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலே தெரியாமல் அவ்வப்போது சாரல் பொழிந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக