Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 11 ஜூலை, 2012

வீடிழந்து வீதிக்கு வந்த சிறுவர்கள் பள்ளி செல்ல முடியாமல் தவிப்பு

தென் மாவட்டத்தில் வற்றாத ஜீவநதி தாமிரபரணி என அழைக்கப்படுகிறது. தாமிரபரணியில் ஆலை கழிவு, சாக்கடை கழிவுகள், பிளாஸ் டிக் கழிவுகளால் தாமிரபரணி தோன்றும் பகுதியிலிருந்து முடிவடையும் பகுதிவரை தண்ணீர் மாசுபட்டு காணப்படுகிறது. 
மணல் மாபியாக்களால் தாமிரபரணி தண்ணீரும் பல்வேறு நோய்களை பரப் பும் காரணியாக மாறியது. இதனால் சமூகநல ஆர்வலர்கள் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை பொதுமக்களை சந்தித்து தாமிரபரணியை பாது காக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து நெல்லை மாநகர கொக்கிர குளம் ஆற்றின் கரைகளை மறைத்து அடர்ந்து வளர்ந்துள்ள முள் செடி களை காவல்துறை உதவியுடன்அகற்றி தூய்மை படுத்தப்பட்டது. இந்நிலையில் தாமிரபரணி ஆற்றின் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 791 வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை சிரம்மேல் ஏற்று வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் வரிந்து கட்டிக்கொண்டு பணியை செம்மையாக முடித்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் 791 வீடு களில் சுமார் 600க்கும் மேற் பட்ட வீடுகளை மட்டுமே இடித்து அப்புறப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகாரிகள் மீதி வீடுகளை இடிக்க வில்லையென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இடிக்கப்பட்ட வீடு களில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வந்துள்ளனர். இங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட பள்ளி சிறுவர்கள் உள்ளனர். வீடுகள் இடிக்கப்பட்டதால் பயன்படுத்திய பொருட் களை அப்பகுதியில் உள்ள கோயில்களிலும், சாலை ஓரங்களிலும் வைத்து பொதுமக்கள் பாதுகாத்து வருகின்றனர். விதியின் வசத்தால் வீதிகளில் வசிக்கும் நிலை ஏற்பட்டதால் பள்ளி செல்ல முடியாத நிலையில் சிறுவர்கள் உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புலம்பி தவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக