Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

மோடியின் பேச்சு முஸ்லிம்களுக்கு விடப்பட்ட சவால் : பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

திருச்சி மாநகர் நத்தர் ஷா தர்கா பகுதி 12 வது வட்ட இ.யூ.முஸ்லிம் லீக் செயலாளர் ஜே.கே.வஜீர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசியதாவது ,

இன்றைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரளா, தமிழகத்தில் மட்டுமின்றி எல்லா மாநிலங்களிலும் எழுச்சி பெற்ற இயக்கமாக வளர்ந்து கொண்டி ருக்கிறது.

இளைஞர்கள், தொழிலாளி கள், மகளிர், மாணவர் என்று எல்லா தரப்பினர்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகி றார்கள். வரும் அக்டோபர் 5-ம் தேதி சென்னை பெரியார் திடலில் காலையில் மாநில முஸ்லிம் லீகின் பொதுக்குழு கூட்டமும், மாலை 3 மணி முதல் 8 மணி வரை எம்.எஸ். எஃப். - முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாடு - குற்றாலத்தில் நடந்த மாநாட் டுக்குப் பிறகு -நடக்கிற மாநாடாக ஏற்பாடாகியிருக்கிறது.

தமிழகம் முழுவதிலுமி ருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். திருச்சி மாவட் டத்திலிருந்து பன்னூற்றுக் கணக்கில் பங்கேற்க உள்ளார் கள் என அறியும் போது மிகுந்த மகிழ்ச் சியை தருகி றது.

இந்திய முஸ்லிம்களாகிய நாம் நமது உண்மையான அடையாளங்களை பாதுகாப்ப தற்கே, இத்தகைய நிகழ்ச்சிகள் - மாநாடுகளையெல்லாம் நடத் துகிறோம்.

சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்கள் தங்களின் கலாசார தனித்தன்மையை பாதுகாக்கும் முயற்சியாகவே முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை வலுப்படுத்த வேண்டும் - பலப்படுத்த வேண்டும். முஸ்லிம் லீகை பலப்படுத்துவதோடு தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசியலில் முக்கியத்துவம் பெற்று செயல் பட்டுக் கொண்டிருக்கிற பிற முஸ்லிம் இயக்கங்களையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையில் ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்ப டையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற கருத்து இப்போது பிறந்திருக்கிறது. இத்தகையதொரு ஐக்கி யத்தை உருவாக்கிக் கொண்டு, தேசிய அளவில் உள்ள ஜன நாயக, சமயசார்பற்ற, சமூக நீதிக் கொள்கைகளை நிலை நிறுத்துகிற அரசியல் சக்திக ளுடன் இணைந்து பாடு படுதல் வருங்கால இந்தியா விற்கு வலிமையும், வளமும் சேர்ப்பதாகும் என்னும் எண்ணம் சமுதாய மக்களிடம் பரவலாகி வருகிறது.

வகுப்புக் கலவரங்களை தூண்டும் பா.ஜ.க.
இத்தகைய சிந்தனை ஏற் படுவதற்கு 26-9-2013 அன்று இதே திருச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திரமோடி அவர்களின் பேசிய கூட்டம் மட்டுமல்ல, தேசத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க. கூட்டங்களும் அதில் பேசப்படும் கருத்துக்களும் முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன.

இந்திய நாடு அதன் அரசியல் சாசனப்படி ஜன நாயக நாடு - சமயசார் பற்ற நாடு - சமூக நீதியை நிலை நிறுத்தும் மக்கள் ஆட்சியில் உள்ள நாடு. இந்த நாட்டை பாரதீய ஜனதா கட்சி இந்து ராஷ்ட்ரம் என்னும் இந்துக்கள் நாடாக்க முயற்சிக்கிறது. இந்தியாவில் வாழும் முஸ்லிம் கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்று அழைக்கப்பட வேண் டும் என்றால் முஸ்லிம்கள் எல் லோரும் தங்களுடைய மூதாதைகள் இந்துக்கள் என்று அறிவிக்க வேண்டும் என்கிறார் கள்.

முஸ்லிம்களின் அடையாள மாக உள்ள முஸ்லிம் தனியார் சட்டம் இருக்கக் கூடாது. எல்லோருக்கும் ஒரேவிதமான சிவில் சட்டம் - பொது சிவில் சட்டம் ஒன்று தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

கஷ்மீருக்குள்ள தனி அந்தஸ்து ஒழிக்கப்பட வேண் டும் என்று பிரச்சாரம் செய்கிறார் கள். இவற்றிற்கெல்லாம் மேலாக குஜராத்தில் வகுப்பு கலவ ரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல் லப்பட்டதிலும், அஸ்ஸாமில் 5 லட்சம் முஸ்லிம்களை அகதி முகாம்களில் தங்க வைத்து வேடிக்கை பார்ப்பதிலும், இப் போது உ.பி.மாநிலம் முசாபர் நகர் கலவரத்தில் பல்லா யிரக்கணக்கான முஸ்லிம் களை ஊரை விட்டும் வெளி யேற்றி கொடுமைப் படுத்தி வருவதிலும் பி.ஜே.பி. யை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சிய டைந்து கொண்டிருக்கிறார் கள்.

முஸ்லிம்களை அடையா ளங்களே இல்லாமல் ஆக்க நினைப்பதோடு அவர்களை அழிக்கவும் முடிவு செய்திருப் பதைப் போல தொடர்ச்சியாக கலவரங்கள் தூண்டப்பட்டு வருகின்றன. கலவரத்தில் மாண்டு போன முஸ்லிம்கள், அவர்களின் பார்வையில் நாய்க் குட்டிகளாக தெரிகிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகுப்பு கலவரங்கள் நடந்துள்ளன என பத்திரிகைகள் செய்தி தருகின்றன. சென்ற வாரம் டெல்லியில் நடந்த ஒருமைப் பாட்டு கவுன்சில் கூட்டத்தில் 2013 ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் நடந்து வகுப்புக் கலவரங்களின் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதில் பாதிக்கப் பட்டவர்களில் முஸ்லிம்கள் அதிகம் என்னும் தகவலும் தரப்பட்டிருக்கிறது.

இதேபோலத்தான் 13 ஆயிரம் வகுப்பு கலவரங்களி லும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் - சொத்து இழந்த வர்கள் முஸ்லிம்கள் - எல்லா விதமான சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் ஆளான வர்கள் முஸ்லிம்கள். ஆனால், இவ்வளவு காலமும் இவ்வாறாக பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமுதாயம் அமைதி யாகவே இருந்து அரசியல் ரீதியான தீர்வுகளுக்கு குரல் கொடுத்து வருகிறது.

இன்னல்லாஹ் ம அஸ் ஸாபிரீன் - நிச்சயமாக பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கிறான் - என்பதில் நம் பிக்கை கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள்.

தங்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் கொடு மைகளை பற்றி உலகிலுள்ள 57 முஸ்லிம் நாடுகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பிய தில்லை. ஐ.நா. சபையின் மனித உரிமை கமிஷனுக்கு பெட்டிஷன் போட்ட தில்லை.

ஆனால், சுதந்திர இந்தியா வில் 1984-ல் திருமதி இந்திரா காந்தி அம்மையாரை ஒரு சீக்கியர் கொன்றார் என்பதற் காக 2 ஆயிரத்திற் கும் மேற் பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட் டனர். அந்த ஒரே ஒரு கலவரத் திற்காக நிவாரணங்கள் தரப்பட்டன. சீக்கியரான மன் மோகன்சிங் இருமுறை நாட்டின் பிரதமராக ஆக்கப்பட்டிருக் கிறார். பலரும் குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்டிருக்கி றார்கள். இவை மூலம் சீக்கிய சமுதாயம் இன்னமும் திருப் தியடையவில்லை. சர்வதேச நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்போம் என்கிறார்கள். அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக் கிறார்கள்.

திருமதி சோனியாகாந்தி மருத்துவம் செய்ய அமெ ரிக்கா சென்ற போது அவரிடம் கோர்ட் சம்மன் தரப்படுகிறது. இப்போது ஐ.நா. சபை கூட்டத் தில் பங்கேற்கச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக் கும் கோர்ட் சம்மன் காத்தி ருக்கிறது.

சீக்கியருக்கு எதிராக நடந்த ஒரே ஒரு கலவரத்திற்கு நியாயம் கோரி சர்வதேச அளவில் சீக்கிய சமுதாயம் வழக்கு தொடுக்கிறது. ஆனால், 13 ஆயிரத்திற் கும் மேற்பட்ட வகுப்பு கலவ ரங்களால் பாதிக்கப்பட்டும், இந்திய முஸ்லிம் சமுதாயம் அமைதி வழியில் - அறவழி யில் - அரசியல் ரீதியில் - நாட்டுக்கு உள்ளேயே நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக் கையில் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள்.

இதைப்பற்றி நாட்டிலுள்ள நல்லவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற வேண்டு கோளைத்தான்நாம் முன் வைக்கிறோம்.

நாட்டுப் பிரிவினையின் போது காயிதெ மில்லத் முஹம் மது இஸ்மாயில் சாஹிப் அவர் கள் கராச்சியில் பாகிஸ்தான் பிரதமர் நவாப் லியாகத் அலிகான் அவர்களிடம் விடை பெற்றார். அப்போது லியாகத் அலிகான் சொன்னார்:

இந்தியாவில் முஸ்லிம்க ளுக்கு எதிராக இந்துக்கள் செயல்பட்டால் எங்களின் உதவிகளை நீங்கள் உடனே பெற்றுக் கொள்ளலாம். என்றார்.

அதற்கு காயிதெ மில்லத் சொன்ன பதில் இதுதான்:


`நவாப் அவர்களே! பாகிஸ் தானில் உள்ள சிறுபான்மை மக்களாகிய இந்துக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது உங்கள் கடமையாகும். இந்தியா எங்கள் நாடு. அதில் முஸ்லிம் களுக்கு எதிராக யார் எதை செய்தாலும் தடுக்கவும், எங்க ளைக் காப்பாற்றி கொள்ளவும் எங்களுக்கு அல்லாஹ் உதவி புரிவான். அதைப் பற்றிய கவலை உங்களுக்குத் தேவை யில்லை’’ என்றார்கள்.

அதனால்தான் காயிதெமில்லத் அவர்களை ஜிந்தா வலியுல்லாஹ் என்று சமுதாயம் போற்றியது.

அல்லாஹ்வின் பேரருள் கொண்டு இந்திய முஸ்லிம்க ளாகிய நாம் நமது அடையாளங் களை பாதுகாப்போம் - நமது கலாசார தனித்தன்மையை நிலை நிறுத்துவோம்.

இதற்கு உகந்த ஒரே ஒரு வழி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எனும் இந்த பேரியக்கத்தை கட்டிக் காப்பதுதான். இந்தியா வின் பெருமையை உலக அரங் கில் உயர்த்தவும், இந்திய முஸ்லிம்களின் தனித்தன் மையை பாதுகாக்கவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செல்லும் பாதைதான் என்றும் வெல்லும் பாதை. -இதை வரலாறு நிச்சய மாக சொல்லும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.


தமிழக அரசியலில் திடீர் திருப்பங்கள்!

தமிழக அரசியலில் திடீர் திருப்பங்கள் ஏற்படுவது சாதாரண நிலை ,அதே போல் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருவதாக கட்சிகளின் மேலிடத்தகவல்கள் கூறுகின்றன .

அதிமுக தலைமையில் வாசன் காங்கிரஸ் அதோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ,இடதுசாரி கட்சிகள் ,விடுதலை சிறுத்தைகள் என்று ஒரு அணி உருவாகி வருகிறது .

திமுக தலைமையில் பாஜக ,தேமுதிக , பாமக ,மதிமுக என்று மற்றொரு அணி உருவாகி வருகிறது .

அதிமுக கதவை தட்டும் சில கட்சிகளை அதிமுக நீங்கள் துரோகம் செய்தவர்கள் உங்களுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்று கதவை சாத்தி விட்டது .அப்படி கதவு சாத்தப்பட்ட கட்சிகளை இணைத்துக் கொண்டு காங்கிரஸ் களம் காண நேரிடும் நிலை உருவாகிவருகிறது .

மேற்கண்ட  விசயங்களுக்கான சத்திய கூறுகள் அதிகம் என்றும் , அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டதாகவும் அரசியல் கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் உறுதி பட கூறுகிறார்கள் .

புதன், 25 செப்டம்பர், 2013

உலக பல்கலைக்கழகங்களுக்கு நிகராக இந்திய பல்கலைக்கழகங்கள் தரம் உயரவில்லை: ஜனாதிபதி பிரணாப் வேதனை

புதுவை பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பேசியதாவது:–

மாணவர்கள் பட்டங்களை பெற்று தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்கி உள்ளீர்கள். இனிமேல் மாணவர்கள் தங்களுடைய கல்வியை வாழ்க்கையில் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மாணவர்கள் அர்ப்பணிப்பையும், முயற்சியையும் வாழ்க்கை பயணத்துக்கு துணையாக கொண்டால் சரியான பாதைக்கு செல்ல முடியும்.

மாணவர்கள் தங்கள் பெற்ற கல்வியை நாட்டின் வளர்ச்சிக்கு கொண்டு செல்ல உதவ வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டத்தை தற்போது அமுல்படுத்தி உள்ளோம். கட்டாய கல்வி தரமான கல்வியாக இருக்க வேண்டும். நான் பொதுச்சேவைக்கு வருவதற்கு முன்பு ஆசிரியராக பணிபுரிந்து உள்ளேன். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கும்போது மனதில் சந்தேகமும், திருப்தியும் ஏற்படும். அதனை நானும் பெற்றுள்ளேன்.

மாணவர்கள் இங்கு கல்வி கற்றதோடு நின்று விடாமல் ஒவ்வொரு நாளும் அறிவை மேம்படுத்தி கொள்ள வேண்டும். 6–ம் நூற்றாண்டில் இந்தியாவில் நாளந்தா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது பிற உலக நாடுகளுடன் நாம் கல்வியில் போட்டியிட்டோம். ஆனால் இன்று நாம் பல வசதிகளை பெற்றிருந்தும் உலக அளவில் தரமான 200 பல்கலைக்கழகங்களில் இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெற முடியவில்லை. இது எனக்கு வேதனையை அளிக்கிறது. புதிராகவும் உள்ளது.

12–வது ஐந்தாண்டு திட்டத்தில் கல்விக்கென்று அதிக நிதியை ஒதுக்கி உள்ளோம். சமூகத்தில் அறிவியல், தொழில் நுட்பமே ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே ஆராய்ச்சி தரத்தை உயர்த்த வேண்டும். புதிய கண்டு பிடிப்புகளை தினசரி வாழ்க்கைக்கு உதவுவதாக இருக்க வேண்டும். ஆராய்ச்சி சாலைகளை கிராமப்புறங்களிலும் அமைக்க வேண்டும்.

மாணவர்கள் தாங்கள் பெற்ற கல்வியை கடமையை உணர்த்து நாட்டின் மேம்பாட்டுக்காக உதவ வேண்டும்.

இவ்வாறு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பேசினார்.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

இந்திய முஸ்லிம்களே! நமது தனித்தன்மையை காக்க தயாராகுங்கள் ! ------- பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனாபா பத்ரு சயீது அவர்கள் ஒரு பொது நல வழக்குத் தொடுத்திருக்கிறார் என்பதும், அதில் அவர் காஜிகளுக்கு மார்க்க ரீதியாக சான்றிதழ் வழங்குவதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றும், தலாக் என்னும் விவாகரத்து செய்வது, கோர்ட் மூலம் தான் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் என்பதும் எல்லோரும் அறிந்திருக்கும் விஷயமாகும்.

ஜனபா பத்ரு சயீது அவர்களைப் பின்பற்றி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜனாபா சுல்தானா ரிஸ்வானா பானு (வயது 29) ஒரு பொது நல வழக்கை தொடுத்திருக்கிறார்.

தலாக் என்னும் மணமுறிவு ஏற்பட்டுள்ளதற்கு காஜிகள் சான்றிதழ் தருவதற்குத் தடை விதிக்கக்கோரியும் மனுவில் கூறியி ருக்கிறார்.

இந்திய முஸ்லிம் பெண்களின் கணவர்கள் தன்னிச்சையாக தலாக் சொல்லி விடுகிறார்கள். மனைவிகளுக்கு தெரியாமலேயே தலாக் கொடுக்கிறார்கள். இத்தகைய பாதகமான ஆண்களின் போக்குகளை காஜிகள் தலாக் சான்றிதழ் அளித்து ஊக்கு விக்கிறார்கள்.

காஜிகளுக்குஇவ்வாறு தலாக் பற்றிய சான்றிதழ் கொடுப்பதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றும் அந்த மாது, தனது வழக்கில் கூறியிருக்கிறார். இதனை டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கில நாளிதழ்கள்  செய்தி பிரசுரித்துள்ளன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்கு தொடரப் பட்டுள்ளதால், மதுரை கிளை, இந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய (24.9.13) தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் ஷரீயத் கோர்ட்டுகளை எதிர்த்து போடப்பட்டுள்ள பொது நல வழக்கை உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்திருக்கிறது என்னும் செய்தி வெளியாகியிருக்கிறது. அதில் பிரசுரமாகியுள்ள செய்தியின் விவரமாவது:

நான்கு மாதங்களுக்கு முன்பு (ஓய்வு பெற்ற) உச்சநீதிபதி அல்தமஸ் கபீர் தலைமையிலான பெஞ்சின் முன்பு ஷரீயத் கோர்ட்டுகள் பத்வாகள் அளித்து வருவதன் மூலம் தேசத்தில் உள்ள நீதித்துறைக்கு பகரமானதொரு நீதித்துறையாக ஷரீஅத் கோர்ட்டுகள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த வழக்கைத் தொடுத்திருந்த வக்கீல் விஸ்வலோசன் மதன், நீதிபதி சி.கே.பிரசாத் தலைமையிலான பெஞ்சின் முன்பு, செப்,11 ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த வழக்கு மே மாதம் 10 ம் தேதி விசாரணைக்கு வந்த போது, தனது தாயார் உடல்நலமில்லாமல் ஆகிவிட்டபடியால் தான் ஆஜராக முடியவில்லை என்று கூறி தனது வழக்கை ஏற்கும்படி கோரினார்.

அட்வகேட் மதன், தனது வாதத்தின் போது ஷரீஅத் கோர்ட் டுகள், தேசத்தில் உள்ள கோர்ட்டுகளுக்கு சமமான பகரமான கோர்ட்டுகள் போல் செயல்படுகின்றன. முஸ்லிம்களின் சமூக, மத விவகாரங்கள் பற்றி தீர்ப்புகள் கூறுகின்றன. இது, இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும் என்று கூறினார்.

மத்திய அரகின் சார்பில், அட்வகேட் மதன் கூறிய வாதங்க ளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஷரீஅத் கோர்ட்டுகள் பற்றிய மத்திய அரசின் அணுகுமுறைகளை வெளிப்படுத்தும் படி இந்த வழக்கின் மூலம் கட்டாயப்படுத்துவதாக இருக்கிறது என்று கூறி வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்று மத்திய அரசின் சார் பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டுள்ள நீதிபதி சி.கே.பிரசாத் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்சு, வழக்கை மீண்டும் விசார ணைக்கு ஏற்று, வரும் நவ.11 ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தி ருக்கிறது.

இந்தச் செய்திதான் ஆங்கில நாளிதழில் இன்றைக்கு வெளிவந்திருக்கிறது.

சமுதாய மக்களுக்கு ஓர் எச்சரிக்கை! 

 இந்திய முஸ்லிம்கள், தங்களை முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்துவதற்கு உரிய ஆதாரமும் அத்தாட்சியும் அவர்கள் பின்பற்றி வரும் ஷரீஅத் சட்டத்தின் குடும்பச் சட்டப் பகுதி மட்டும் தான்.

அந்த குடும்பச் சட்டத்தில் கூட ஷரீஅத் படி நடக்கும் வழி அடைக் கப்படுமானால், முஸ்லிம்கள் என்று பெயர் மட்டும் இருக்கும் ஆனால் உண்மையில் முஸ்லிம்களாக இருக்க முடியாது.

தேசம் முழுவதிலும் ஷரீஅத் சட்டத்திற்கு எதிரான அரசியல் ரீதியாகவும், நீதிமன்றத்தின் மூலமும், சட்டமன்றத்தின் மூலமும், பாராளுமன்றத்தின் மூலமும் வருவதற்கான சூழ்நிலைகள் இப்பொ ழுது பெருகி வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், இந்திய முஸ்லிம் சமுதாயம் தன்னை ஒருமுகப்படுத்தி, தனது மார்க்கத் தனித் தன்மையை நிலைநிறுத்தியாக வேண்டும். இதற்கு எந்தத்தியாகமும் ஒரு பொருட்டாகாது.

திங்கள், 23 செப்டம்பர், 2013

நரேந்திர மோடி திருச்சி வருகையையொட்டி முஸ்லிம்களை கொடுமை படுத்தப்படுவதை வேடிக்கை பார்க்க மாட்டோம் : தமிழக காவல்துறைக்கு பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் எச்சரிக்கை

சேலத்தில் செப்டம்பர் 22 மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்  பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் கூறியதாவது ,

இலங்கை வடக்கு மாகாண முதல்வருக்கு வாழ்த்து
இலங்கையில் தேர்தல் நடைபெற்று வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று சி.வி. விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

அவருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

காஷ்மீரில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடை பெற்று அங்கு ஒரு மக்களாட்சி அமைக்கப் பட்டுள்ளதை போல் இலங்கையின் வடக்கு மாகாணத்திலும் ஜனநாயக ஆட்சி அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு நல்ல அறிகுறி.

ராஜீவ்காந்தி-ஜெயவர்த் தனா ஒப்பந்தத்தின் அடிப்படை யில் உறுதியாக இருந்து இத்தேர்தல் நடத்தப்பட்டுள் ளது. ஒன்று மட்டும் நிச்சயம் இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடப்பதுதான் இலங்கைக்கு நல்லது. 13ஏ திருத்த சட்டத்தின்படி நடந்தால்தான் இலங்கைக்கு விடிவு காலம் இதை அதிபர் ராஜபக்சே உணர வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.

மோடி வருகை: முஸ்லிம்கள் மீது அடக்குமுறை
நரேந்திர மோடி வரும் 26ம் தேதி திருச்சி வருகிறார். அவரது வருகையையொட்டி பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தைச்சுற்றியுள்ள வட்டாரங்களிலுள்ள முஸ்லிம் களை போலீசார் அச்சுறுத்தி கொடுமைப்படுத்தி வருகிறார் கள்.

தமிழ்நாட்டில் காவல் துறையினரின் இந்த நடவடிக்கை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் களை தனிமைப்படுத்தி அச் சுறுத்துவது என்பது ஜனநாயக நாட்டில் ஏற்றுக் கொள்ள முடியாது. இதை தமிழக முதல்வரின் கவனத் திற்கு கொண்டு வருகிறோம்.

திருச்சியில் முஸ்லிம் வீடுகளில் சோதனை யிடுவதும், விவரங்களை சேகரிப்பதும் ஜனநாயக நாட்டில் கேள்வி படாத விஷயங்கள்.

ஏழைகளாகவும், கூலித்தொழிலாளர்களாகவும் உள்ள முஸ்லிம்களை ஒரு பொது கூட்டத்தின் பெயரால் வரம்பு மீறி காவல்துறை நசுக்குகிறது என்றால் அதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதை நாட்டு மக்களுக்கு கொண்டு செல்வோம்.

ஐதராபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் கூட நிரபராதிகளான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு 7,8 ஆண்டுகள் சிறையில் அடைக் கப்பட்டு உண்மை யான குற்றவாளிகள் கைது செய்யப் பட்டதற்குப்பின் முஸ்லிம் இளைஞர்கள் அப்பாவிகள் என விடுவிக்கப்பட்டனர். அவர் களுக்கு ஆந்திர அரசு நஷ்ட ஈடு அறிவித்தது.

இதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்றார்கள். இப்படி நஷ்ட ஈடு வழங்கியது செல்லாது என அறிவித்த நீதிமன்றம் அந்த தீர்ப்பை திரும்பப் பெற்றுக் கொண்டது. இது எந்த தமிழ் பத்திரிகை யிலும் வரவில்லை. தி ஹிந்து ஆங்கில நாளேடு மட்டுமே இது பற்றி தலையங்கம் எழுதியது. அதை மணிச் சுடரில் நாங்கள் வெளியிட்டி ருந்தோம்.

தமிழ்நாட்டில் இப்படி நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டதில்லை. அது வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

முஸ்லிம்களின் தியாகம்
இந்த நாட்டிற்காக முஸ்லிம் கள் எவ்வளவோ தியாகங்கள் செய்திருக்கிறார்கள். தேச எல்லையை காப்பாற்ற லட்சக் கணக்கானவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளார் கள். சுதந்திரத்திற்காக உடல், பொருள் தியாகம் செய்த முஸ்லிம்கள் கணக்கில் அடங்காது.

ஆனாலும் எங்களை ஏன் பகைமை உணர்வோடு பார்க்கிறார்கள். குஜராத்தில் கலவரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உயிரிழந்தார்கள். ஆனால் இறந்த முஸ்லிம் களை காரில் அடிப்பட்ட நாய் குட்டியோடுதான் ஒப்பிட்டார் நரேந்திர மோடி.

அப்படிப்பட்ட ஒருவர் நாட்டில் பிரதரானால் நாடு என்ன ஆவது. ஒரு கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பொது கூட்டம் ஒன்றில் பேச வரும்போதே முஸ்லிம்களுக்கு இவ்வளவு பெரிய சோதனை கள் என்றால் தப்பித் தவறி இவர் பிரதமராகி விட்டால் எவ்வளவு பெரிய கொடுமை கள் நடக்கும் என்பதை நாட்டு மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

65 ஆண்டுகளில் 13 ஆயிரம் வகுப்பு கலவரங்கள்
நாடு விடுதலையடைந்த இந்த 65 ஆண்டு காலத்தில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட வகுப்பு கலவரங்கள் நடை பெற்றுள்ளன. பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் பலியாகியுள்ளனர். அவர் களின் பலநூறு கோடி ரூபாய் சொத்துக்கள் சூரையாடப் பட்டுள்ளன.

இதை எந்த ஒரு முஸ்லிமும் ஐ.நா. சபைக்கு எடுத்து செல்லவில்லை. உலகில் 57 முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன. கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களுக்கு உதவுங்கள் என்று நாங்கள் கோரிக்கை மனு தூக்கி அலையவில்லை.

இந்தியாவில் சீக்கியர் களுக்கு எதிராக இந்திரா காந்தி கொல்லப்பட்ட சமயத் தில் ஒரே ஒரு கலவரம்தான் நடந்தது. அதை சர்வதேச நீதிமன்றத்திற்கு சீக்கியர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

திருமதி சோனியா காந்தி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற போது அவரிடத்தில் இதற்கான சம்மனை கொடுப் பதற்கு முயற்சித்திருக் கிறார்கள்.

சீக்கிய சமூகத்தை சேர்ந்த மன்மோகன்சிங் 2 முறை பிரதமராக்கப்பட்டு சீக்கியர் களுக்கு எதிரான கலவரத் திற்கு மன்னிப்பு கேட்டதற்கு பின்பும் சீக்கியர்கள் விடுவ தாக இல்லை.

ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஐ.நா. சபைக்கு எடுத்து சென்றார்கள். இந்திய முஸ்லிம்கள் இப்படியெல்லாம் எதாவது செய்தார்களா? அப்படி இருந்தும் ஏன் முஸ்லிம்கள் மீது மட்டும் துவேஷம் கொள்கிறார்கள்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதை தானே நாங்கள் வலியுறுத்துகிறோம். இதைத் தவிர இந்திய முஸ்லிம்கள் என்ன பாவத்தை செய்து விட்டார்கள்?

இவ்வாறு தலைவர் பேராசிரியர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

தமிழக அரசின் அரசாணைப்படி 1அ படிவம் அடிப்படையில் இஸ்லாமிய திருமணங்களை பதிய மறுக்கும் சார்பதிவாளர்கள் மீது சட்ட நடவடிக்கை : பேராசிரியர் கே.எம்.கே. எச்சரிக்கை

தமிழக அரசின் அர சாணைப்படி 1A படிவம் அடிப்படையில் இஸ்லாமிய திருமணங்களை பதிய மறுக்கும் சார்பதிவாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி அக்டோபர் 5ம் தேதி நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்டத்தில் முடிவு அறிவிக்கப்படும் என பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர் களிடம் அவர் தெரிவித்ததாவது:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இஸ்லாமிய திருமண சட்ட விளக்க நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதன் நோக்கம் ஷரீஅத் சட்டத்தை முஸ்லிம்களும் விளங்கி மற்றவர்களுக்கும் விளக்க வேண்டும் என்பதுதான். அஇஅதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. திருமதி பதர் சயீத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள பொது நல வழக்கால் எங்களுக்கு இந்த நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

திருமணங்கள் செய்து வைப்பதற்கும், குடும்ப விவ காரங்களை பேசி தீர்ப்பதற் கும், மணமுறிவு சான்றிதழை வழங்குவதற்கும், காஜி களுக்கு உரிமை இல்லை என்று பதர் சயீத் தமது வழக்கில் குறிப்பிட்டுள் ளார்.

பள்ளிவாசலை மையமாக கொண்டு மஹல்லா ஜமாஅத் இயங்குகிறது. அந்த பகுதியில் வாழக்கூடிய முஸ்லிம்கள் அனைவரும் இந்த மஹல்லா ஜமாஅத்திற்கு கட்டுப்பட்ட வர்கள்.

இந்த ஜமாஅத்துக்குட்பட்ட பள்ளிவாசலின் இமாம் அந்த மஹல்லாவின் காஜி ஆவார். 1880ம் ஆண்டு காஜி சட்டப்படி இவரது பதவி நாயிப் காஜி என்று அழைக்கப்படும்.

இஸ்லாமிய திருமணங்கள் பரம்பரை பரம்பரையாக பள்ளி வாசல் இமாம்களை கொண்டு நடத்தப்பட்டு பள்ளிவாசல் திருமண பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன.

இஸ்லாமிய திருமண சட்டம் என்பது உலகம் முழுவதும் ஒரே சட்டம்தான். இந்தத் திருமண சட்டம் செல்லாது என்று சொல்லு வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

கஸ்டமரிலா என்று சொல்லக்கூடிய வழக்கப்படி யான நடைமுறை சட்டங்களை நீதிமன்றங்களை தவறு என்று சொல்லுவதில்லை. குடும்ப விவகாரங்களை நீதிமன்றத்தில்தான் தீர்க்க முடியும் என்றால் அது இந்த ஜென்மத்தில் முடியாது. உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரே இன்றுள்ள வழக்குகளை தீர்ப்பதற்கு 400 வருடங்கள் ஆகும் என்று சொல்லியுள் ளார்.

காஜிகள் அவசரப்பட்டோ, ஒரு தலை பட்சமாகவோ குடும்ப விவகாரங்களில் ஒரு போதும் தீர்ப்பு அளிக்க மாட்டார்கள்.

சில முஸ்லிம் ஆண்கள் தவறு செய்கிறார்கள் என்பதற் காக இஸ்லாமிய சட்டத்தையே குறை சொல்ல முடியாது.

அது 1500 ஆண்டு கால மாக நடைமுறையில் உள்ள சட்டம் இறைவன் புறத்திலி ருந்து வந்த அந்த சட்டத்தை மனிதர்களால் மாற்ற முடியாது. இதுதான் முஸ்லிம்களின் நிலைபாடு.

திருமண கட்டாய பதிவு சட்டம்
உச்சநீதிமன்ற வழி காட்டுதலின் அடிப்படையில் திருமண கட்டாய பதிவு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.

நாங்கள் அன்றுள்ள திமுக அரசோடு நேரில் தொடர்பு கொண்டு உரிய விளக்கங் களை அளித்ததன் பலனாக முஸ்லிம் திருமணங்களை பதிவு செய்வதற்கு 1-ஏ என்ற தனிப் படிவம் உருவாக்கப் பட்டது.

இந்த 1-ஏ படிவத்தின் அடிப் படையில் அமைந்துள்ள பள்ளிவாசல் திருமண பதி வேட்டின் நகலை அப்படியே ஏற்றுக்கொண்டு சார்பதி வாளர்கள் முஸ்லிம் திரு மணங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் இன்றைய ஆட்சியில் பல சார்பதி வாளர்கள் இப்படி திருமணங் களை பதிவு செய்யமால் மணமக்கள், சாட்சிகள், திருமணம் நடத்தி வைத்தவர் வரவேண்டும் என்று நிர்பந் திருப்பது அரசு ஆணைக்கு விரோதமானது.

இன்னும் பல இடங்களில் முஸ்லிம் திருமணங்களை சிறப்பு விவாக சட்டப்படி (ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட்)த் தான் பதிவு செய்ய முடியும் என்று சொல்கிறார்களாம்.

இந்த சட்டப்படி திருமணம் செய்வதற்கு கணவன் மனைவி இருவருக்கும் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

முஸ்லிம்களை பொருத்த வரையில் தந்தை, தாயுடன் உடன் பிறந்தவர்களின் மக்களை திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் விஷேச விவாக சட்டத்தில் அப்படி செய்ய இயலாது.

திருமணங்களை சார்பதி வாளர் அலுவங்களில்தான் நடத்த வேண்டும் என்பது இஸ்லாத்திற்கு உடன்பாடாக இருக்காது ஏனெனில் எங்களை பொருத்தவரை அக்கா மகளை திருமணம் செய்ய முடியாது.

சார்பதிவாளர் அலுவலங் களில் அப்படி திருமணம் நடந்தால் அதை எப்படி கண்டுபிடிப்பது.

எனவேதான் இஸ்லாமிய திருமண விவகாரங்களில் நாங்கள் இவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கிறோம்.

அக். 5 பொதுக்குழுவில் நடவடிக்கை
வரும் அக்டோபர் 05ம் தேதி காலை சென்னை பெரியார் திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இப்பொதுக்குழுவில் நாங்கள் கலந்து பேசி 1-ஏ படிவத்தின் அடிப்படையில் திருமணங்களை பதிவு செய்ய மறுக்கின்ற சார்பதிவாளர்கள் யார்? யார்? அவர்கள் மீது சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை அறிவிக்க உள் ளோம்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார்.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

மயானமாக்கப்பட்ட உ.பி. மாநிலம் முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் துடைப்போம் ! ---- பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் ஆகஸ்ட் கடைசி மற்றும் செப்டம்பர் முதல் வாரங்களில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களில் 57 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந் துள்ளதாக அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

முசாபர்நகர் மற்றும் ஷாம்லி மாவட்டங்களில் உள்ள 94 கிராமங்களிலிருந்து 42 ஆயிரம் பேர் சொத்து சுகங்களையெல்லாம் விட்டு விட்டு இடம் பெயர்ந்துள்ளதாக அம் மாநில அரசே உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த எண்ணிக்கைகள் பல மடங்கு அதிகம் என்பதே உண்மை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமான மாண்புமிகு இ.அஹமது சாஹிப் தலைமையிலான குழுவினர் இம் மாதம் 16, 17 தேதிகளில் கலவரம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு தாவ்லி, காண்ட்லா, ஷாம்லி, மத்ரஸா, ரஷிதியா உள்ளிட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, ஆறுதல் கூறி ஆதரவு தெரிவித்து தைரியமூட்டியதோடு அம் மாவட்டங்களின் மாஜிஸ்திரேட்டுகளையும் நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். செப்டம்பர் 18ம் தேதி உ.பி. மாநில முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்து முஸ்லிம்களின் பாதிப்பு குறித்து முறையிட்டு உரிய நிவாரணம் வழங்கவும், சொந்த இடங்கள் திரும்பவும், பாதுகாப்பு அளிக்கவும், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவும், கலவரம் குறித்து விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழுவினர் மனு அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தலைநகர் லக்னோவில் செய்தியாளர் களிடம் பேசிய இ.அஹமது சாஹிப், """"50 முகாம்களில் 55 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. முசாபர்நகர் மாவட்டம் மயான பூமியாக மாறிவிட்டது. கலவரத்தில் உறவு களையும், உடமைகளையும் இழந்தவர்கள் நிர்க்கதியாக தவிக் கின்றனர். அவர்களுக்கு அரசு அறிவித்த எந்த உதவியும் இது வரை போய் சேரவில்லை"" என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பி நிம்மதியுடன் வாழ மத்திய -மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் வலியுறுத்தி வருகிறோம்.

அதேசமயம் இப்போதைய நம்முடைய கடமை வகுப்புவாதிகளின் கோரத் தாண்டவத்திற்கு இரையான முசாபர் நகர் மாவட்ட முஸ்லிம்களின் துயர் துடைக்க உடனடி முயற்சிகள் மேற்கொள்வதுதான்.

கடந்த ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் போடோ தீவிரவாதிகளால் முஸ்லிம்கள் மிகப் பெரும் பாதிப்புகளுக்கு ஆளான போது, லட்சக்கணக்கில் தங்கியிருந்த அகதி முகாம்களுக்கு நேரில் சென்று அடிப்படை வசதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் செய்து கொடுத்ததோடு, அஸ்ஸாம் முஸ்லிம்கள் பின்தங்கி இருப்பதற்கு கல்வி அறிவு பெற இயலாமல் போனதே காரணம் என அறிந்து தாருல் ஹுதா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நிரந்தர கல்விக்கு பெரும் பங்களிப்பை செய்துதது.

அதே போன்று உத்திரபிரதேச கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் களம் இறங்கியுள்ளது. இப்பணிக்கு தாராளமாக வாரி வழங்க வேண்டியது சமுதாயத்தின் கடமையாகும்.

இதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் முற்கூட்டியே அறிவிப்பு செய்து பள்ளிவாசல், மஹல்லா ஜமாஅத்துகள், மற்றும் வீடு வீடாக சென்று சிறுகச் சிறுக நிதி திரட்டி கீழ்காணும் முகவரிக்கு உடனடியாக அனுப்பி உதவிட வேண்டுகிறோம்.

இந்நிதியை, IUML RELIEF FUND State Bank of India Current Account No: 32476975149 Thousand Lights Branch Code No:3207 Chennai என்ற வங்கி கணக்கிலோ,

காயிதே மில்லத் மன்ஸில், 36, மரைக்காயர் லெப்பைத் தெரு, சென்னை -600 001 என்ற முகவரிக்கும் காசோலை/வரைவோலை/பணவிடையாகவோ அனுப்பி தர வேண்டுகிறோம்.

கலவரத்தில் பாதிக்கப்பட்டோரின் கண்ணீர் துடைக்க முன் வருவோம்; காவலன் அல்லாஹ்வின் பெரும் கருணை பெறுவோம்.