Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

தி ஹிந்துவின் பார்வையில்...தமிழ்நாடு முஸ்லிம் அரசியலின் மாறிவரும் முகம் ----காயல் மகபூப்.

பேரா. எம்.எச். ஜவாஹிருல்லாஹ் பதிலுக்குப் பதில் :
முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்வு காணும் இயக்கமாக இந்திய யூனியன்முஸ்லிம் லீக் இல்லாத காரணத்தால்தான் த.மு.மு.க தோன்றியதாககூறுகிறார்.

த.மு.மு.க தோன்றிய பின்சமூகத்தில் தீர்த்துக் வைக்கப்பட்டபிரச்சனை தான் என்ன?அந்த அமைப்புஉருவானதற்குபின் தமிழ்நாட்டில் 50அமைப்புகள் உருவாயின.

பள்ளிவாசல் விவாகரங்கள்காவல்நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன.

தொழுகையும், நோன்பும் விவகாரமாக்கப்பட்டன,
மூன்று, நான்கு நாட்கள் பெருநாள்களாக கொண்டாடப்பட்டன.

அப்பாவி இளைஞர்கள் சிறைவாசம்அனுபவித்தார்கள்.

தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு பெறுவதற்கு அடித்தளம்அமைத்தது இந்திய யூனியன் முஸ்லிம்லீக்.1999 ல் இதற்காக ஒற்றை கோரிக்கை மாநாடு நடத்தப்பட்டதும், அதில் கலந்துகொண்ட அன்றைய முதல்வர் கலைஞர் வாக்குறுதி வழங்கியதும் வரலாற்றுப்பதிவுகள்.

‘‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்அடுத்தக் கட்சியின் சின்னத்தில் தான்போட்டியிடுகிறது. த.மு.மு.க வின்அரசியல் அங்கமான ம.ம.க தன் சொந்த சின்னத்தில் நின்று வெற்றிபெற்றுள்ளது. மற்ற சமுதாய மக்களும் எங்களை தான் ஆதரிக்கிறார்கள்’’என பேராசிரியர் ஜவாஹிருல்லா குறிப்பிடுவது வரலாற்றை இருட்டடிப்புசெய்யும் முயற்சி.

2009 நாடாளுமன்ற தேர்தலில் நான்குதொகுதிகளில் போட்டியிட்ட ம.ம.கபெற்ற ஒட்டுக்கள் 68 ஆயிரத்து 346 இதில் மயிலாடுதுறையில் போட்டியிட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லா 19 ஆயிரத்தி814 ஒட்டுக்கள் மட்டுமே பெற்றார்.மத்திய சென்னையில் ஹைதர் அலி13 ஆயிரத்து 160 ம், இராமநாதபுரத்தில் சலீமுல்லாகான் 21 ஆயிரத்து 430ஒட்டுகளும் பெற்றனர்.

ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் 1991லேயே 5 மக்களவை தொகுதிகளிலும், 18 சட்டமன்றதொகுதிகளிலும் ‘‘ஏணி சின்னத்தில்’’தனித்து போட்டியிட்டது மக்களவை தொகுதிகளில் மட்டும் 1 லட்சத்து 29ஆயிரத்து 048 வாக்குளை பெற்றது.

அதே மயிலாடுதுறையில் ஏ.கே.எ.அப்துஸ்ஸமது 37 ஆயிரத்து 677வாக்குகளும், இராமநாதபுரத்தில்எ.எ.அப்துல் ரசாக் 49 ஆயிரத்து442 வாக்குகளும், வேலூரில்முஹம்மதுஇஸ்ஹாக் 31 ஆயிரத்து381 வாக்குகளும் பெற்றது வரலாற்றுச்சாதனை.

ராஜீவ்காந்தி படுகொலைசெய்யப்பட்டு அனுதாப அலை வீசியஅந்த நேரத்தில் எந்த பெரிய கட்சியின் துணையுமில்லாமல் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் இந்த சாதனையைபடைத்தது. வன்னியர் சங்கம் அப்போதுதான் பட்டாளி மக்கள் கட்சியாகஅரசியலில் பிரசவித்தது. முஸ்லிம்லீக் போட்டியிட்ட இடங்களில் அதற்குபலமும் இல்லை அதற்கு களமும் இல்லை.

அந்த காலகட்டங்களில் ‘அரசியல்ஹாரம், ஒட்டுப்போடுவதும், ஜனநாயகமும் இஸ்லாத்திற்கு விரோதமானது’ எனபரப்புரை செய்தவர்களுக்கு இந்தவரலாற்று பதிவுகள் தெரிந்திருக்க நியாயமில்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறது;சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபடுகிறது; முஸ்லிம்களின் காலச்சாரதனித்தன்மைகளை காப்பாற்றபோராடுகிறது; தீவிரவாதமும் &வன்முறையும் கூடாது என போதிக்கிறது.அதனால் முஸ்லிம் சமுதாயம் இந்த இயக்கத்தை நேசிக்கிறது.

‘இந்திய யூனியன் முஸ்லிம் லீகின்பழைய நல்ல நாட்கள் அரசியலில்மீண்டும் வராதா’ என்ற சமுதாயஎதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும்.

தமிழகத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைகழக கிளை மற்றும் "காயிதெ மில்லத் பல்கலைக் கழகம் " - முஸ்லிம் மாணவர் பேரவை

திருச்சிக்கு வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ,முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில அமைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய அளவில் அங்கீகரிக்கப் பட்ட நான்கு அமைப்புகளில் ஒன்றாகும். மற்ற மூன்றும் முஸ்லிம் யூத் லீக், சுதந்திர தொழிலாளர் யூனியன், முஸ்லிம் மகளிர் அணி ஆகியவைகளாகும்.

முஸ்லிம் மாணவர் பேரவை யின் மாநில மாநாடு ஏற்கனவே நெல்லை மாவட்டம் குற்றா லத்தில் நடைபெற்றுள்ளது. தற்போது எதிர்வரும் அக்டோபர் 5- ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

பல்லாயிரக்கணக்கான சீருடையணிந்த மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில், கல்வி சம்பந்தமான பிரச்சினைகள் குறித்தும், கல்விக்கடன் துரிதமாக கிடைக்கவும் -அதற்கான வட்டியை ரத்து செய்யவும் மத்திய - மாநில அரசுகளை கேட்டுக் கொண்டும், சிறு பான்மை மாணவர்களுக்கு மாவட்டத் தலைநகரங்களில் விடுதிகள் அமைக்க கோரியும்,

அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் கிளையை தமிழ் நாட்டில் அமைக்க கோரியும், சிறுபான்மையினருக்கென மத்திய அரசு அமைக்கும் 5 பல்கலைக்கழகங்களில் ஒன்றை தமிழ்நாட்டில் அமைக்க வலியுறுத்தியும், காயிதெ மில்லத் பெயரில் ஒரு பல்கலைக் கழகத்தை உருவாக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

மாணவச் சமுதாயம் சாதி, மத, கல்லூரி அடிப்படையிலும் மோதிக் கொள்ளாமலும், ஒழுக்க மாண்புகளுக்கு உட் பட்டு தலைசிறந்த எதிர்கால பிரஜைகளாக உருவாக்கப்படும் முயற்சியாக செயல் திட்டங் கள்அறிவிக்கப்பட உள்ளன. வன்முறை, தீவிரவாதம், போதை மற்றும் குற்றப் பழக்க வழக்கங்கள் பக்கம் தலை காட்டாமல் மாணவச் சமுதாயம் தற்காத்து கொள்ளும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இம் மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசி யப் பொருளாளரும், கேரள அமைச்சருமான பி.கே. குஞ்ஞாலிகுட்டி, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

போலீஸ் ஸ்டேஷன்களில் காத்திருப்பதை தவிர்க்க ஆன்லைனில் புகாரை அனுப்பி வைக்கும் வசதி

சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, அதிகாரிகளுக்காக காத்திருக்காமல்,ஆன்-லைனில் புகாரை அனுப்பி ரசீது, எப்.ஐ.ஆர்., பெற்றுக்கொள்ளும் புதிய திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய அளவில் அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து ஆன்லைனில் குற்றவாளிகள் பற்றிய தகவலை தெரிந்து கொள்வதற்கான நவீன தொழில் நுட்பம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. தமிழகம் உட்பட நான்கு மாநிலங்கள் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கம்ப்யூட்டரை இயக்குவது தொடர்பான சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், சிவகங்கை, கோவை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், சேலத்தில் இத்திட்டத்தின் அனைத்து சிறப்பு அம்சங்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.


அமல்: திருச்சி மற்றும் திண்டுக்கல்லில் நேற்று முதல் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டிருந்த அனைத்து எப்.ஐ.ஆர்., குற்றவாளிகள் தொடர்பான விபரங்கள், அவர்களின் கைரேகை, கண்விழி பார்வை போன்ற அனைத்து தகவல்களும் ஆன்லைனில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.


சிறப்பு பயிற்சி: மாவட்டத்தில் உள்ள 42 போலீஸ் ஸ்டேஷன்களில் புதிதாக பதிவு செய்யப்படும் எப்.ஐ.ஆர்.,கள். இனி கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதற்கான ரசீது, நகல் போன்றவை வழங்கப்படும். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் 3 போலீசாருக்கு இதற்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.


ஆன்லைன் பதிவேற்றங்களை கண்காணிக்கவும், போலீஸ் ஸ்டேஷன்களின் பதிவுகளை பார்வையிட்டு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் வீடுகளில் அமர்ந்தவாறு ஆன்லைனில் புகாரை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைக்கலாம். பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்.,கள், கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் குற்றபத்திரிக்கை, சாட்சிகள் தொடர்பான விசாரணை அனைத்தையும் இணையதளத்தில் பார்க்கலாம். வழக்கு தொடர்பான போலீசாரின் புலன் விசாரணை தொடர்பான தகவல்கள், இந்த இணையதளத்தில் இடம்பெறாது. இத்திட்டத்தை, ஜெயச்சந்திரன் எஸ்.பி.,நேற்று துவக்கி வைத்தார். நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
""பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அதிக அளவில் புகார்கள் பெறுவதற்கான வாய்ப்பு இந்த திட்டத்தின்மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டுபிடிப்பது, காணாமல் போனவர்கள் குறித்து எளிதில் தகவல்களை பெறுவது போன்ற நன்மைகள் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும்,''என்றார்.

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

பள்ளி மூடப்பட்டதால் சம்பளமின்றித் தவித்த ஆசிரியருக்கு நிலுவை சம்பளம் முழுவதையும் வழங்கிட உயர் நீதிமன்றம் உத்தரவு

பணியாற்றிய பள்ளி மூடப்பட்டதால் வேறு பள்ளியில் பணி அமர்த்தப்படாமலும், சம்பளம் கிடைக்காமலும் தவித்த ஆசிரியருக்கு நிலுவை சம்பளம் முழுவதையும் வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கீழ்ஆசாரிப்பள்ளம் செயின்ட் மேரீஸ் தொடக்கப் பள்ளியில் 1.8.2005 அன்று சூசை மகேஷ் என்பவர் இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அந்தப் பள்ளி மூடப்பட்டதால், செண்பகராமன்புட்டன்துறையில் செயின்ட் ஆண்டனிஸ் பள்ளியில் அவரை மறு பணியமர்த்துமாறு 9.3.2013 அன்று கன்னியாகுமரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். எனினும் பள்ளியில் காலியிடம் இல்லை எனக் கூறி அவரை அங்கு பணியமர்த்த பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது.

இதனையடுத்து திருநெல்வேலி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு கன்னியாகுமரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஒரு கடிதம் எழுதினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்தப் பள்ளியிலும் சூசை மகேஷ் மறு பணியமர்த்தப்படாததால், அவரை திருநெல்வேலி மாவட்டத்தில் ஏதேனும் ஒரு பள்ளியில் பணியமர்த்தலாம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சூசை மகேஷ் ஒரு மனுவை தாக்கல் செய்தார். பள்ளி மூடப்பட்ட 2012 ஆகஸ்ட் மாதம் முதல் எனக்கு சம்பளம் வழங்கப்படாததால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.

ஆகவே நிலுவையில் உள்ள ஊதியம் முழுவதையும் எனக்கு வழங்கிடவும், கன்னியாகுமரி மாவட்டத்திலேயே ஏதேனும் ஒரு பள்ளியில் என்னை மறுபணியமர்த்திடவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் சூசை மகேஷ் கோரியிருந்தார்.

இந்த மனு மீது நீதிபதி டி.ஹரிபரந்தாமன் விசாரணை மேற்கொண்டார். 2012 ஆகஸ்ட்முதல் மனுதாருக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை ஊதியம் முழுவதையும் கல்வித் துறையினர் வழங்கிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ஏதேனும் ஒரு பள்ளியில் அவர் மறுபணியமர்த்தப்படும்வரை மாதந்தோறும் அவருக்கான ஊதியத்தை தவறாமல் வழங்கிட வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

உயிரி தகவல் தொழில்நுட்பவியல் படிப்பு


ஹைதராபாத், ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இக்கல்வியாண்டில் முழுநேர டிப்ளமோ படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 வழங்கப்படும் படிப்புகள்: முதுகலை பட்டயப் படிப்பில் (கம்ப்யூட்டர் புரோக்ராமிங், பயாலாஜிக்கல் டேட்டாபேஸ், பயோ - கெமிஸ்ட்ரி) உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: இப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பொறியியல், மருத்துவம், கணினி உள்ளிட்ட படிப்புகளில் 50 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பிக்கும் மாணவர்கள் ரூ.100க்கான வரைவோலை வழங்கி படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் பெற ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்வு முறை: மாணவர்கள் இளைநிலையில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். நுழைவுத்தேர்வு கிடையாது.

செப்டம்பர் 22 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் ரூ.100 அபராத தொகை செலுத்தி  விண்ணப்பிக்கலாம். 

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

கரும்பலகை கூட இல்லாத பள்ளிகள்

ஒரு பக்கம், டேப்ளட், ஸ்மார்ட்ஸ் ஸ்கிரீன் என்று சில பள்ளிகள் செயல்பட, இன்னும் இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு பள்ளிகள், கரும்பலகை கூட இல்லாமல் செயல்படுகின்றன.

"சைல்டு ரிலிப் அண்டு யு" என்ற அரசு சாரா அமைப்பு, "லேர்னிங் பிளாக்ஸ்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து, இன்னும் இந்தியாவில் உள்ள ஆரம்ப, உயர்நிலைப் பள்ளிகளில், அடிப்படை வசதிகள் சரிவர நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உள்பட, 13 மாநிலங்களில் செயல்படும் 750 பள்ளிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 75 சதவீத பள்ளிகளில் டேபிள், சேர், பெஞ்ச் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. 41 சதவீத பள்ளிகளில் உள்ள மாணவர்கள், பள்ளி கட்டடங்கள் இல்லாமல் திறந்தவெளியில் படிக்கின்றனர். 11 சதவீத பள்ளிகளில், டாய்லெட் வசதி இல்லை. 34 சதவீத பள்ளிகளில் டாய்லெட்கள் இருந்தும் பயன்படுத்த முடியாமல் உள்ளன.

இரண்டில் ஒரு பங்கு பள்ளிகளில் டாய்லெட் அருகே தண்ணீர் இல்லை. வட மாநிலங்களில் உள்ள 70 சதவீத பள்ளிகளில், டாய்லெட் அருகே தண்ணீர் வசதி இல்லை. பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில், டாய்லெட் பயன்படுத்திய பிறகு கையை சுத்தம் செய்ய சோப்புகள் இல்லை என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் 80 சதவீத பள்ளிகளில், டாய்லெட் சுத்தம் செய்ய ஊழியர்கள் இல்லை. இதனால் மாணவர்கள் சுத்தம் செய்ய வற்புறுத்தப்படுகின்றனர். 44 சதவீத பள்ளிகளில் மின்வசதி இல்லை. குறிப்பாக கிழக்கு பகுதியில் உள்ள 74 சதவீத பள்ளிகளில் மின்வசதி இல்லை. இந்தியாவில் உள்ள பள்ளிகளின் தற்போதைய நிலை குறித்த இந்த ஆய்வு, அதிர்ச்சி அடைய வைக்கிறது.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி‌யே ஆட்சி அமைக்கும் :சரத் பவார்

வரும் 2014-ம் ஆண்டு நடைபெற உள்ள ‌லோக்சபா ‌தேர்தலில் ஆறு மாநிலங்களை சேர்ந்த மாநில கட்சிகளே பிரதமரை தேர்வு செய்யும் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தேர்வில் மாநில கட்சிகள்:
‌தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் வேட்பாளர் என நரேந்திர மோடியை அடையாளம் காட்டினாலும் தேர்தல் முடிந்த பின்னர் ஆறு மாநிலங்களை சேர்ந்த மாநில கட்சிகள் மட்டுமே பிரதமரை தேர்வு செய்யும். மேற்குவங்க மாநிலத்தை சேர்‌ந்த திரிணமுல் காங்கிரஸ், உ.பி., மாநிலத்தை சேர்ந்த சமஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஒடிசா மாநிலத்தின் பிஜூ ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தமிழகத்‌தை சேர்ந்த அ.தி.மு.க, ஆகிய ஆறு கட்சிகளே பிரதமர‌ை தீர்மானிக்கும் கட்சிகளாக அமையும்.
மேற்கண்ட கட்சிகள் ஆட்சி அமைக்‌க முடியாவிட்டாலும் அக்கட்சிகளின் துணையின்றி பிரதமர் தேர்வு நடைபெற சாத்தியம் இல்லை எனவும், தேர்தலுக்கு முன்னர் மம்தா , நவீன், முலாயம்சிங், மாயாவதி, நிதிஷ் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் முக்கிய காரணியாக விளங்குவர் என தெரிவித்தார்.

பிரதமர் பதவிக்கு இன்னார்தான் தகுதி என்று தேர்தல் வருவதற்கு நீண்ட காலம் முன்னதாகவே அறிவித்தால், அந்த நபருக்கும் கட்சிக்கும் தேவையற்ற பிரச்னைகள் உருவாகும். தற்போது, நரேந்திர மோடிக்கும் பா.ஜ.,வுக்கும் இந்த நிலைதான் ஏற்பட்டுள்ளது என்று கூறிய பவார், ராகுல் குறித்து கூறுகையில், அவருடைய திறமை குறித்து எனக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் தெரியாது; ஆனால் அவருடைய குடும்ப பின்னணி காரணமாக அவர் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது என்றார்.

வரும் தேர்தலில் தன்னுடைய தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடர்ந்து காங்கிரஸ் உடனான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீடிக்கும் எனவும், மீண்டும் காங்கிரஸ் கட்சி‌யே ஆட்சி அமைக்கும். வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை; ஆனால் ராஜய்சபா எம்பி.,யாக வருவேன் எனவும் தெரிவித்தார்.