Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி‌யே ஆட்சி அமைக்கும் :சரத் பவார்

வரும் 2014-ம் ஆண்டு நடைபெற உள்ள ‌லோக்சபா ‌தேர்தலில் ஆறு மாநிலங்களை சேர்ந்த மாநில கட்சிகளே பிரதமரை தேர்வு செய்யும் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தேர்வில் மாநில கட்சிகள்:
‌தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் வேட்பாளர் என நரேந்திர மோடியை அடையாளம் காட்டினாலும் தேர்தல் முடிந்த பின்னர் ஆறு மாநிலங்களை சேர்ந்த மாநில கட்சிகள் மட்டுமே பிரதமரை தேர்வு செய்யும். மேற்குவங்க மாநிலத்தை சேர்‌ந்த திரிணமுல் காங்கிரஸ், உ.பி., மாநிலத்தை சேர்ந்த சமஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஒடிசா மாநிலத்தின் பிஜூ ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தமிழகத்‌தை சேர்ந்த அ.தி.மு.க, ஆகிய ஆறு கட்சிகளே பிரதமர‌ை தீர்மானிக்கும் கட்சிகளாக அமையும்.
மேற்கண்ட கட்சிகள் ஆட்சி அமைக்‌க முடியாவிட்டாலும் அக்கட்சிகளின் துணையின்றி பிரதமர் தேர்வு நடைபெற சாத்தியம் இல்லை எனவும், தேர்தலுக்கு முன்னர் மம்தா , நவீன், முலாயம்சிங், மாயாவதி, நிதிஷ் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் முக்கிய காரணியாக விளங்குவர் என தெரிவித்தார்.

பிரதமர் பதவிக்கு இன்னார்தான் தகுதி என்று தேர்தல் வருவதற்கு நீண்ட காலம் முன்னதாகவே அறிவித்தால், அந்த நபருக்கும் கட்சிக்கும் தேவையற்ற பிரச்னைகள் உருவாகும். தற்போது, நரேந்திர மோடிக்கும் பா.ஜ.,வுக்கும் இந்த நிலைதான் ஏற்பட்டுள்ளது என்று கூறிய பவார், ராகுல் குறித்து கூறுகையில், அவருடைய திறமை குறித்து எனக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் தெரியாது; ஆனால் அவருடைய குடும்ப பின்னணி காரணமாக அவர் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது என்றார்.

வரும் தேர்தலில் தன்னுடைய தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடர்ந்து காங்கிரஸ் உடனான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீடிக்கும் எனவும், மீண்டும் காங்கிரஸ் கட்சி‌யே ஆட்சி அமைக்கும். வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை; ஆனால் ராஜய்சபா எம்பி.,யாக வருவேன் எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக