Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 22 ஏப்ரல், 2013

பால்வள தொழில்நுட்ப படிப்பு (food and dairy technology)


இந்தியாவின் முக்கிய தொழிலாக பால்வளதுறை விளங்குகிறது. பால் தொடர்புடைய பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு உள் மற்றும் வெளி நாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. பால் பொருட்கள் தயாரிப்பில் இந்தியா சிறந்த இடத்தை வகுக்கின்றது.

பாலின் மூலம் பல்வேறு உணவு பொருட்கள் தயாரிக்கப்படுவதால், அதற்கு அடிப்படையாக விளங்கும் பசுக்களை நல்ல முறையில் பராமரித்து அதற்கு தேவைபடும் சத்தான ஆகாரங்களை சரியான முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. பதப்படுத்தும் பணியில் பாலை நுகர்வோர் பயன்படுத்தும் விதத்தில் அதை மாற்றுவது, தயிர், வெண்ணெய் போன்ற பொருட்களாக மாற்றும் பணிகளும் உள்ளன. பல்வேறு இடங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பாலானது தொழிற்சாலையை அடைந்தபின் பால் மற்றும் பால் பொருட்களாக பதப்படுத்தப் படுகிறது. இதற்கு டெய்ரி டெக்னாலஜிஸ்டுகள் எனப்படும் தொழில் நுட்ப வல்லுனர்கள் பணியில் நியமிக்கப்படுகிறார்கள். தொழில்நுட்பம் மற்றும் தரக்கட்டுப்பாடு போன்ற பணிகளை இவர்கள் செய்கிறார்கள். பதப்படுத்தும் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குதல், கொள்முதல் செய்யப்பட்ட பாலை முழுவதுமாக பதப்படுத்துவது போன்ற கூடுதல் பணிகளை இவர்களே செய்கிறார்கள்.

பால்வளத்துறையை முறையாக நடத்த இதற்கென படிப்புகள் வழங்கப்படுகிறது. இது துவக்கத்தில் பால்வளத் தொழில்நுட்பம் என்பது வெடினரி சயின்சின் ஒரு பகுதியாக மட்டுமே இருந்து வந்தது. இத்துறையின் முக்கியத்துவம் அறிந்து பல கல்வி நிறுவனங்களில் இது தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகிறது. இப்படிப்புகளில் முறைப்படுத்தல், உறையிடுதல், சேமித்தல், பரவல், சந்தைப்படுத்தல், வெண்ணெய், நெய், கோவா, பாலாடைக்கட்டி போன்றவற்றை தயாரித்தல் போன்றவற்றை செய்யும் விதத்தை முறையாக கற்று கொடுக்கப் படுகின்றது. இத்துறையில் டிப்ளமோ, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு படிக்க விரும்புபவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவிலோ அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது விவசாயப் பாடப்பிரிவில் பிளஸ் 2வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துறையில் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் பால்வளத் துறை படிப்புகள் வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

* College of Veterinary Science, Andra Pradesh

* Sanjay Gandhi Institute of Dairy Technology

* Indira Gandhi Krishi Vishwavidyalaya, Chattisgarh

* Seth MC College of Dairy Science. Gujrat

* National Dairy Research Institute, Haryana

* University of Agricultural Sciences, Karnataka

* College of Dairy Technology, Madhya Pradesh

* Maharana Pratap University of Agriculture & Technology, Rajasthan

* College of Dairy Science, Rajasthan

* Faculty of Veterinary Science and Animal Science, West Bengal

* Institute of Food and Dairy Technology, Chennai

மின்சாரவியலில் முதுநிலை மற்றும் டிப்ளமோ


சட்டீஸ்கரில் இயங்கி வரும் ஜிந்தால் மின் தொழில்நுட்ப கல்வி நிலையம் முதுநிலை மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதுநிலை - தெர்மல் பவர் பிளான்ட் டெக்னாலஜி

தகுதி: முழு நேர பி.இ. படிப்பில் மெக்கானிக்கல்/ எலக்ட்ரிகல்/ எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் / கன்ட்ரோல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

முதுநிலை பட்டயம் - தெர்மல் பவர் பிளான்ட் டெக்னாலஜி

தகுதி: மூன்று வருட டிப்ளமோ படிப்பில் மெக்கானிக்கல்/ எலக்ட்ரிகல்/ எலக்ட்ரிகல் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ் / கன்ட்ரோல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து படித்திருக்க வேண்டும்.

வயது: 2013 ஜூலை 01 அன்று 26 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் நடைபெறும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15 மே 2013.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.jipt.org என்ற இணையதளத்தை காணவும்.

கணிதம் படிப்பவர்களுக்கு உதவித்தொகை


சென்னை கணிதவியல் நிறுவனத்தில், கணித துறையில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப் படிப்புகள் வழங்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் வழங்கப்படும் படிப்புகள், இந்தியாவில் மட்டுமின்றி வெளி நாடுகளாலும் அங்கீகரிக்கப்படுகிறது. இந்நிறுவனம் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.

இங்கு வழங்கப்படும் படிப்புகள் அனைத்தும் முழுவதும் கணிதம் தொடர்பான பாடங்களை உள்ளடக்கியதாகும். மற்ற பாடங்கள் எதுவும் இந்த படிப்பில் இடம்பெறுவதில்லை. மேற்படிப்புகளை தொடர்பவர்களுக்கும், முழவதும் கணிதப் படிப்புகளை படிக்க விரும்புபவர்களுக்கும் இப்படிப்பு ஏற்றதாகும்.

இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் கூட இப்படிப்புகளை முடித்தவர்கள் மேற்படிப்புகளைத் தொடர வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம், மேலாண்மை, நிதி கணிதவியல், சாப்ட்வேர் போன்ற நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என கணிதவியல் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகிறார்.

பி.எஸ்சி (ஹானர்ஸ்), கணிதம் மற்றும் கணினி அறிவியல், பி.எஸ்சி (ஹானர்ஸ்) இயற்பியல் ஆகிய இரண்டு இளநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றது. நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழத முடியும். இப்படிப்புக்கான கல்விக் கட்டணம் பருவத்திற்கு ரூ.750 செலுத்த வேண்டும்.

இந்த படிப்பிற்கு உதவித் தொகையாக மாதந்தோரும் ரூ.4000 மும், இதர செலவுகளுக்கு ரூ.1000மும் கூடுதலாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் தேர்வுகளில் பெற்ற தேர்ச்சி விகிதத்தைப் பொருத்து உதவித்தொகை வழங்கப்படும்.

முதுநிலைப் படிப்பில் எம்.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், பயன்பாட்டுக் கணிதம் உள்ளிட்ட மூன்று பட்டப் படிப்புகள் வழங்கப்படுகிறது.

எம்.எஸ்சி., கணிதப் படிப்பில் சேர பி.டெக்., பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைப்பெறும். எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்பில் சேர கணினி துறையில் பி.இ., பி.டெக்., முடித்திருப்பது அவசியமாகும். எம்.எஸ்சி., பயன்பாட்டுக் கணிதப் படிப்பில் சேர பி.எஸ்சி.,யில் கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் பி.இ, பி.டெக்., முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

இந்த படிப்பிற்கு கல்வி உதவித் தொகையாக ரூ.4,800 வழங்கப்படுகிறது. கல்வி உதவித் தொகையுடன் விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்கு மாதந்தோறும் ரூ.5000 கூடுதலாக வழங்கப்படுகிறது.

பிஎச்.டி., படிப்பில் கணிதம், கணினி அறிவியல், இயற்பியல் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகிறது. கணிதப் படிப்பில் சேர எம்.எஸ்சி., கணிதம், பி.இ பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும். இயற்பியல் ஆராய்ச்சி படிப்பில் சேர பி.இ, பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி கணினி அறிவியல் போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

இந்த ஆராய்ச்சிப் படிப்புகளை தொடர்பவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி உதவித் தொகையாக மாதத்திற்கு ரூ.16,000மும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.18,000மும் வழங்கப்படுகிறது. இதை தவிர புத்தகத்திற்கு என தனியாக ஆண்டுக்கு ரூ.10,000 மற்றும் தங்கும் விடுதி செலவுக்கு கல்வித் தொகையில் 30 சதவீதம் கூடுதலாகவும் வழங்கப்படுகிறது.

இந்த கல்வி நிறுவனத்தில் முழநேர படிப்பு மட்டுமல்லாமல் பகுதி நேர ஆராய்ச்சி படிப்புகளும் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்கள் அறிய: www.cmi.ac.in

சனி, 20 ஏப்ரல், 2013

ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் பி.டெக் படிப்பு


இந்திய அரசின் விண்வெளி துறையின் கீழ் இயங்கும் திருவனந்தபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜியில் பி.டெக்., படிப்பிற்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பி.டெக்., ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், ஏவியனிக்ஸ், பிசிகல் சயின்ஸ் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். +2வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜெஇஇ தேர்வில் தகுதி பெற்ற பின் ஜெஇஇ(மெயின்) 2013 தேர்வு நடத்தப்பட்டு அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: +2வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும், ஜெஇஇ மெயின் தேர்வில்  60 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.iist.ac.in என்ற இணையதளத்தில் இருந்து ஆன்லைன் வழியாக மே 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்கள் அறிய கல்வி நிறுவன இணையதளத்தை அணுகலாம்.

இளநிலை ஹோமியோபதி படிப்பு


கொல்கத்தாவில் உள்ள தேசிய ஹோமியோபதி கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்நிறுவனத்தில் இளநிலை பட்டப் படிப்பான பி.எச்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. இதன் கால அளவு ஐந்தரை ஆண்டு ஆகும். அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

பி.எச்.எம்.எஸ் படிப்புக்கு12ம் வகுப்பில் (இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம்) ஆகிய பாடப் பிரிவை எடுத்து படித்திருக்க வேண்டும். மேலும் பொதுப்பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 17 வயது நிரம்பியராகவும், 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் அவசியம்.

விண்ணப்பங்களை கல்வி நிறுவன இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பொதுப்பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் இலவசம்.

மே 10 விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெற உள்ளது.

மேலும் விரிவான தகவல்களுக்கு www.nih.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

இந்திய ரிசர்வ் வங்கி - ன் இளம் மாணவர்கள் பரிசுத்திட்டம்


இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ., ) இந்திய வங்கித்துறை மற்றும் ஆர்.பி.ஐ.,  மீதான ஆர்வத்தையும் , விழிப்புணர்வையும் ஏற்படுத்த ஆர்.பி.ஐ., இளம் மாணவர்கள் பரிசுத்திட்டத்தை துவங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆர்.பி.ஐ.,  நாடெங்கிலுமான  போட்டித் தேர்வு வாயிலாக அதிகபட்சம் இளம் மாணவ மாணவிகளை தெரிவுசெய் தேர்வு செய்து மாணவர் உதவி தொகை வழங்க இருக்கிறது.

தகுதி: 
இந்தியாவில் எந்த அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலும் எந்தப்பாடதிலும் தமது பட்ட படிப்பைத் தொடரும் 18 லிருந்து 23 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் அனைவரும் போட்டித் தேர்வை எழுதத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.

தேர்வு ஆர்.பி.ஐ., மற்றும் இந்திய வங்கிகளின் பங்கு மற்றும் செயல்பாடுகளை மையமாக கொள்ளும். இத்தேர்வு ஆங்கிலத்திலும், பிற முக்கிய பிராந்திய மொழிகளிலும் நடைபெறும்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆர்.பி.ஐ., யின் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகங்களில் 2 முதல் 3 மாதங்களுக்கு செயல் திட்டங்களில் பணியாற்ற வேண்டும், அந்த காலத்தில் தொகுப்பு உதவித்தொகையாக ஒவ்வொரு மாதமும் ரூ 7500/- வழங்கப்படும். வெளியூர் நபர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிக்கு ஆர்.பி.ஐ., உதவும்.

பரிசாளர்களுக்குஆர்.பி.ஐ., யில் பணி நியமனம் கோர எந்தவித உரிமையும் இல்லை . முந்தைய ஆண்டுகள் எதிலும் ஆர்பிஐ இளம் மாணவர்கள் பரிசுத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்று ஆர்.பி.ஐ., யில் பணிபுரிந்தவர்கள் எவரும் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் அல்ல.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
செயல் திட்ட ஒருங்கிணைப்பாளர்,
ஆர்.பி.ஐ., இளம் மாணவர் பரிசுத் திட்டம்,
செயல் திட்டம் எண் 9277
அஞ்சல் பெட்டி எண் 7639
மலாட்(மேற்கு), மும்பை

ஆர்.பி.ஐ., இளம் மாணவர் பரிசு திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் ஆர்.பி.ஐ., இணைய தளம் www.rbi.org.in , "எம்ப்லாய்மென்ட் நியூஸ்" மற்றும் "ரோஜ்கார் சமாச்சார்" பத்திரிக்கைகளிலும் கிடைக்கிறது.

கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேஷன் தேர்வு தமிழகத்தில் ஜூன் 22ம் தேதி ஆரம்பம்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வரும் ஜூன் மாதம் 22ம் தேதி கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேஷன் தேர்வுகள் ஆரம்பமாகிறது.தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டு தோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேஷன் சான்றிதழ் தேர்வு நடத்தப்படுகிறது.

 வரும் ஜூன் மாதத்திற்குரிய தேர்வுகள் 22ம் தேதி மற்றும் 23ம் தேதிகளில் நடக்கிறது. ஜூன் மாதம் 22ம் தேதி முதல் தாள் தேர்வு, 23ம் தேதி இரண்டாம் தாள் தேர்வும் தலா 2 மணி நேரம் நடக்கிறது.இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை வரும் மே மாதம் 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் இளநிலை தமிழ் அல்லது ஆங்கிலம் டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

அரசு துறைகளில் தட்டச்சர்கள், சுருக்கெழுத்து தட்டச்சர்களாக பணியாற்றுபவர்கள் கண்டிப்பாக கம்ப்யூட்டர் ஆபிஸ் ஆட்டோமேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதால் இத்தேர்வுக்கான பயிற்சி மையங்களில் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வருகின்றனர்.இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரும் ஜூன் மாதத்திற்கான தேர்வில் பங்கேற்கின்றனர்.