Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 11 பிப்ரவரி, 2013

சூரிய ஒளி மின்சக்தியில் 1 லட்சம் தெரு விளக்குகள்


 "தமிழகத்தில், சூரிய ஒளி மின்சக்தி மூலம், 1 லட்சம் தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,'' என, எரிசக்தித் துறை செயலர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். தூத்துக்குடியில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் நடந்த, சூரிய மின்சக்தி விழிப்புணர்வு கருத்தரங்கில் அவர் பேசியதாவது: அரசின் பசுமை வீடுகள் திட்டத்தில், 3 லட்சம் வீடுகளில், சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற, திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், 60 ஆயிரம் வீடுகள், 1 லட்சம் தெரு விளக்குகளுக்கு, சூரியஒளி மின்சக்தி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தொழிற்சாலைகள், தங்களது மொத்த மின் தேவையில், 6 சதவீ தத்தை, சூரிய ஒளி மின்சக்தி மூலமே பெற வேண்டும். இதற்கு தேவையான உபகரணங்களை ஒருமுறை அமைத்தால், அது, 25 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இதனால், தொழிற்சாலைகள், சூரிய ஒளி மின்சக்தி மூலம், கண்டிப்பாக மின் உற்பத்தி செய்ய வேண்டும். இவ்வகையில், மின் உற்பத்தி செய்ய, மானியம் கேட்டு, 2,000 தொழிற்சாலைகளிடமிருந்து அரசிற்கு மனுக்கள் வந்துள்ளன. அவற்றில், 1,000 மனுக்கள் திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களைச் சேர்ந்தவை. பிற மாவட்டங்களில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலேயே, இதற்கான மனுக்கள் வந்துள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.

டாக்டர் மன்மோகன் சிங் ஸ்காலர்ஷிப் விருது


பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 2008ம் ஆண்டு முதல் டாக்டர் மன்மோகன் சிங் ஸ்காலர்ஷிப் என்ற விருதை வழங்கி வருகிறது. இவ்விருது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பெயரில் வழங்கப்படுகிறது. இவர், இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விருது பொருளாதாரத்தில் பின்தங்கிய, அதே நேரத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் இந்திய மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்வதற்காக வழங்கப்படுகிறது. விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் அங்கீகரிக்கபட்ட பல்கலைக்கழகத்தில், முதுகலை பட்டம் பெற்று ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள விரும்புவோர், இந்த ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொருளாதாரம், சமூக அறிவியல், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், மரைன் இன்ஜினியரிங் மற்றும் எனர்ஜி ஸ்டடிஸ் ஆகிய துறைகளில் இவ்விருது வழங்கப்படுகிறது.

தகுதிகள்:
* பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும் போது, 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட எதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* தலைமைப் பண்புக்கான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
* ஆங்கில அறிவில் எழுதுவதிலும், பேசுவதிலும் புலமை பெற்றிருக்க வேண்டும்.
* கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., படிப்பதற்கு விருப்பமானவராக இருக்க வேண்டும்.
* மேலும் பல்கலைக்கழகம் எதிர்பார்க்கும் சில தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.

விருதின் மதிப்பு:
படிப்புக் கட்டணம், சர்வதேச விமானக் கட்டணம், தங்குவதற்கான மாதக் கட்டணம் மற்றும் பிரிட்டன் விசா ஆகியவை இவ்விருதுக்கு தேர்வாகும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு: http://www.cambridge-india.org/studying/scholarships.html

வெளிநாட்டில் படிப்பு - சாதக பாதகங்கள்


வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வியை மேற்கொள்வதென்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. அதுவும் தான் விரும்பும் ஒரு புகழ்பெற்ற பல்கலையில், விரும்பும் படிப்பில் இடம் கிடைத்துவிட்டால், ஒரு மாணவரின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை.

ஆனால், அவற்றிலுள்ள சாதக-பாதகங்களையும் பார்க்க வேண்டியுள்ளது. வெளிநாட்டிற்கு உயர்கல்வி மேற்கொள்ள செல்லும் முன்பாக, கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள் உள்ளன. இது மாணவர் தொடர்பானது மட்டுமல்ல, பெற்றோர் தொடர்பானதும்தான்.

நிதி தொடர்பானவை
வெளிநாட்டுப் படிப்பில், அதுவும் குறிப்பாக, முன்னேறிய மேற்கத்திய நாடுகளில் கல்வி கற்க செல்கையில், அதிகம் செலவாகும். ஆசைக்காக கால்வைத்து விட்டு, பின்னர் சமாளிக்க முடியாமல் திண்டாடுவது கூடாது. தகுதி அடிப்படையில், வெளிநாட்டு மாணவர்களுக்கான பல உதவித்தொகை திட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், சிலரால் மட்டுமே அதைப்பெற முடியும்.

மேலும், நாம் தேர்ந்தெடுக்கும் நாட்டிற்கும், நம் நாட்டிற்குமுள்ள பண மதிப்பு வேறுபாடுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், சில நாடுகளில் வாழ்க்கைச் செலவுகள் கட்டுபடியாகக்கூடிய வகையில் இருக்கும். ஆனால், சில நாடுகளிலோ, மிக அதிகமாக இருக்கும். அனைவருக்குமே, பல்கலை விடுதிகளில் இடம் கிடைத்துவிடாது. அதற்கேற்ப, மாணவர்களும், பெற்றோர்களும் தெளிவாக திட்டமிட வேண்டும்.

நீங்கள் படிக்கச் செல்லும் நாட்டிற்கு சென்று வருவதற்கான விமானப் பயண கட்டணம், பல்கலை அல்லது கல்லூரி கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவுச் செலவு மற்றும் பராமரிப்பு செலவு ஆகிய அனைத்தைப் பற்றியும் தெளிவான மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு
கடந்த ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவில், இந்திய மாணவர்கள் இனவெறி தாக்குதலுக்கு தொடர்ச்சியாக ஆளானது, வெளிநாட்டுக் கல்வியின் பாதுகாப்பு குறித்த பல்வேறான கேள்விகளை இந்தியாவில் எழுப்பியது. மேலும், இங்கிலாந்தில், சில இந்திய மாணவர்களின் மரணச் செய்திகளும் அடிபட்டன. இதனால், வெளிநாட்டிற்கு உயர்கல்வி கற்க, தங்களின் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரின் பீதி அதிகரிக்கத் தொடங்கியது.

பல பெற்றோர்கள், தங்களின் உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் இருக்கும் நாடுகளுக்கே, தங்களின் பிள்ளைகளை அனுப்ப விரும்புகின்றனர். இதுவும் ஒரு பாதுகாப்புக் காரணமே. பாதுகாப்பு விஷயத்தில், மாணவர்களைவிட, பெற்றோர்களுக்கே அதிக கவலை. குறிப்பிட்ட நாட்டில், தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றி தங்களால் இயன்றவு விசாரித்து, அதனடிப்படையில் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அதேசமயத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக, தங்கள் பிள்ளைகளின் வெளிநாட்டுக் கல்வியை தடைசெய்ய, பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புவதில்லை.

பழகிக் கொள்ளுதல்
ஒரு புதிய நாட்டின், பழக்கமில்லா கலாச்சார சூழலுக்கு, ஒரு மாணவர் பழகிக்கொள்வது இந்த வகையில் சேரும். அந்நாட்டின் காலநிலை, வாழ்க்கைச் சூழல், உணவுப் பழக்கவழக்கம் மற்றும் உடனிருப்பவர்களுடன் சரியான உறவாடலை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்றவை முக்கியமானவை.

ஏனெனில், சிலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம். சிலருக்கு உணவு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். சிலருக்கு, நீண்டதூரம் பெற்றோரைவிட்டு, உறவினர்களைவிட்டு பிரிந்து வந்தது தாங்க முடியாததாய் இருக்கலாம். குடும்பத்தாரின் அரவணைப்பிலேயே இருந்தவர்கள், தனித்து வாழ கஷ்டப்படலாம்.

வெளிநாட்டிற்கு சென்று படித்தல் என்ற நிலை வரும்போதே, இந்த அம்சங்கள் அனைத்தையும், பெற்றோரும், மாணவர்களும் யோசிக்க வேண்டும். இவற்றையெல்லாம் சமாளித்துவிடலாம் என்ற மனோதைரியத்தை உருவாக்கிய பின்னர், உங்களின் ஏற்பாடுகளை தொடங்கலாம்.

உங்களின் அனுபவம் இனிதாகும்! அறிவு வளமாகும்!

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை உடனடியாக விடுதலை செய்யகோரி மார்ச் மாதம் நாடுதழுவிய பேரணி - பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் பேரவையின் 2 நாள் பயிலரங்கம் சென்னை கிழக்கு கடற்கரைசாலை முட்டுக்காட்டில் அமைந்துள்ள மசூதி தோட்டத்தில் நடை பெற்றது. அதனில் கலந்துகொண்ட பின் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலா ளரும், மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது,

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் துணை அமைப்புகளாக தேசிய அளவில் முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திரத் தொழிலாளர் யூனி யன், மகளிர் அணி ஆகியவை கள் உள்ளன. அதில் ஒன்றான முஸ்லிம் மாணவர் பேரவையை (எம்.எஸ்.எஃப்.) தமிழகத்தில் பலப்படுத்தும் நோக்கத்தோடு 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்
டுள்ளன.

சென்னை மண்டலத்தில் அடங்கிய வட சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், விழுப்புரம் கிழக்கு, மேற்கு, வேலூர் கிழக்கு, மேற்கு, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் புதுவை ஆகிய மாவட் டங்கள் அடங்கிய சென்னை மண்டலத்திற் கான 2 நாள் பயிலரங்கம் நடைபெறுகிறது.

இதில் 458 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். ஒவ்வொ ருவரும் 50 ரூபாய் நுழைவு கட்டணம் செலுத்தி தங்களது சொந்த செலவில் வந்து பங் கேற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தஞ்சை மண்டலம் சார்பில் தரங்கம்பாடியிலும், நெல்லை மண்டலம் சார்பில் குற்றாலத்திலும், மதுரை மண்டலம் சார்பில் கொடைக் கானலிலும் பயிலரங்கங்கள் நடைபெற உள்ளன.

அதனைத்தொடர்ந்து மாநில அளவிலான முஸ்லிம் மாணவர் பேரவை மாநாடு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது.

இந்த பயிலரங்கத்தில் மாணவர்களின் ஒழுக்கம், யோகா பயிற்சி, தீவிரவாத எதிர்ப்பு, மது, பாலியல் வன் கொடுமை, கல்லூரிகளில் ஆயுதம் ஏந்தி வன்முறை உள்ளிட்டவை நுழைய விடக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வும், பயிற்சியும் அளிக்கப்பட்டது.

பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டுப் பயணம் செய்யாத மாணவ சமுதாயத்தை உருவாக்குவது நமது லட்சியமாக இருக்க வேண்டும் என்றும் மாணவர்க ளுக்கு வலியுறுத்தப்பட்டது.. தலைவர்கள், அறிஞர் பெருமக் கள் பங்கேற்று பயிற்சி அளித்த னர்.

மத்திய - மாநில அரசுகள் மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கி வருகிறது. அவைகளை முழுமையாக பயன்படுத்தக் கூடிய வழி முறைகள் குறித்தும் மாணவர் களுக்கு அறிவுறுத்தப்பட்டன.

இந்த பயிலரங்கத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. 

அவை, 1. கல்விக் கடன் பெறும் வழிமுறையை இலகு வாக்க வேண்டும்.

 2. கல்விக் கடனுக்கான வட்டியை உடனடி யாக ரத்து செய்ய வேண்டும்

 3. மாவட்ட தலைநகரங்களில் சிறுபான்மையின ருக்கான விடுதிகள் அமைக்கப்பட வேண்டும்.

  4. வன்முறை, மது, ஆபாசம், பாலியல் கொடுமை, திரைப்பட தீவிரவாதம் உள் ளிட்டவைகளிலிருந்து இளைய சமுதா யத்தை காப்பது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.

இந்த தீர்மானங்களை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பிரசாரத்தை முஸ்லிம் மாணவர் பேரவையினர் தமிழகம் முழுவ தும் செய்ய வேண்டும் என இந்த பயிலரங்கத்தில் பயிற்றுவிக் கப்பட்டது.

மாணவர்களுக்கான கல்விக்கடன் பெறுவதில் ஏற்படும் இடையூறு களை யப்பட்டு கடன் பெறும் நடை முறைகள் இலகுவாக்கப்பட வேண்டும் என்றும், கடனுக் கான வட்டியை ரத்து செய்ய வலியுறுத்தியும் முஸ்லிம் மாண வர் பேரவை சென்னையில் பேரணி நடத்த உள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு களின்படி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனில் இந்தியாவில் சிறு பான்மையினர் 18 சதவீதம் வாழ்கிறார்கள் என்றும், அந்த சிறுபான்மையினரில் பெரும் பான்மையினர் முஸ்லிம்கள் என்று தெரிவித்து, கல்வி வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் தனி இடஒதுக்கிடு இஸ்லாமி யர்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந் துரை செய்துள்ளது. அந்த பரிந் துரையை வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள மாநிலத் தலைநகரங் களில் கவன ஈர்ப்பு பேரணி நடை பெற உள்ளது.

தமிழகத்தில் இப் பேரணி நடைபெறும் இடமும், தேதியும் வரும் 16-ம் தேதியன்று திண்டுக்கல்லில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு வில் முடிவு செய்து அறிவிக்க உள்ளோம்.

இப்பேரணியில் நாடு முழுவதும் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்த உள்ளோம்.

இந்தியாவில் 4 மாநிலங்கள் தான் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படுகி றது. தமிழ்நாட்டில் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு கலைஞர் முதல்வராக இருந்தபோது சட்ட சிக்கல் இல்லாமல் வழங்கினார்.

கேரளாவில் 12 சதவீதம் வழங்கப்படுகிறது. கர்நாட காவில் 4 சதவீதம் வழங்கப் படுகிறது. ஆந்திராவில் அறி விக்கப்பட்டு நீதிமன்றம் தடை செய்து விட்டது. மணிப் பூரில் 4 சதவீதம் வழங்கப்படுகிறது. அனைத்து மாநிலங்க ளும் இதனை பின்பற்றி முஸ்லிம் களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதிர் மொகிதீன் பேட்டியில் தெரிவித்தார்.

15 இடங்களில் பசுமை 'ஏர்போர்ட்' மத்திய அமைச்சர் அஜித்சிங் தகவல்


"இந்தியா முழுவதும், 15 இடங்களில் பசுமை விமான நிலையம் கொண்டு வரப்பட உள்ளது' என, மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர், அஜித்சிங் கூறினார். புதுச்சேரி விமான நிலையத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள, பயணிகள் முனையக் கட்டடத் திறப்பு விழா, நேற்று நடந்தது. புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி, முன்னிலை வகித்தார்.

மத்திய அமைச்சர் நாராயணசாமி, மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வேணுகோபால், வாழ்த்திப் பேசினர். பயணிகள் முனையக் கட்டடத்தை திறந்து வைத்து, சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித்சிங் பேசியதாவது: இந்தியாவில், கடந்த பத்தாண்டுகளில், விமான சேவை வேகமான வளர்ச்சி கண்டுள்ளது.

உள்நாட்டு விமான சேவையில், சிறிய விமானங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தியாவில், 2003-04ம் ஆண்டில், சிறிய ரக விமான சேவையின் பயன்பாடு, 1 சதவீதமே இருந்தது. தற்போது, சிறிய விமான சேவைகளின் பயன்பாடு, 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், பெரிய விமான நிறுவனங்கள் கூட, உள்ளூரில் சிறியரக விமான சேவை துவங்குவதில், ஆர்வம் காட்டுகின்றன.

வெகு தொலைவில் இருக்கும் உள்ளூர் நகரங்களுக்கு, போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுப்பதில் சிக்கல் உள்ளது. இந்த இடங்களுக்கு, விமான சேவை பொருத்தமானதாக இருக்கும். இதனால், இந்தியா முழுவதும், 15 இடங்களில் பசுமை விமான நிலையம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பசுமை விமான நிலையங்களில், எந்த வகை சிறிய ரக விமான இயக்குவது என பரிசீலிக்கப்படுகிறது. இதன் மூலம், உள்ளூர் நகரங்கள் ஒன்றொடு ஒன்று இணைக்கப்பட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். இவ்வாறு அமைச்சர் அஜித்சிங் பேசினார்.

எம்ப்ளாய்மென்ட் நியூஸ் செய்தித்தாள் இனி இ-வெர்சனிலும்...


 வாரந்தோறும் வெளிவரும் மத்திய அரசின் வேலைவாய்ப்பு செய்தித்தாளான எம்ப்ளாய்மென்ட் நியூஸ், இனிமேல், இணையதளத்திலும் "இ-வெர்சன்" வடிவில் கிடைக்கும்.

அந்த செய்தித்தாளின் சந்தாதாரர்கள், இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான User ID மற்றும் Password போன்றவை, சந்தாதாரரின் பதிவு எண்ணாகவே இருக்கும்.

விரிவான விபரங்களை அறிய http://www.employmentnews.gov.in/ and http://www.employmentnews.gov.in/signon.asp ஆகிய வலைத்தளங்களுக்கு செல்க.

அனைத்து பள்ளிகளுக்கும் இணையதள வசதி


தமிழக அரசின் அனைத்து அலுவலகங்கள், அரசு நிறுவன அலுவலகங்கள், பள்ளிகளில் இணையதள வசதி செய்ய, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ஒப்பந்த அடிப்படையில், தொலைத் தொடர்பு, பிராட்பேண்ட் இணைப்பை பெற, எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.

50 கோடி ரூபாய் மதிப்பிலான இப்பணிகள், மூன்று மாதங்களில் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் நிர்வாகப் பணிகள் அனைத்தும், மின்னணு முறையில் மாற்றப்பட்டு வருகிறது. இதனால், அரசின் தகவல் பரிமாற்றங்களைக் கூட, மின்னணு முறையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, தமிழக ஏரியா நெட்வொர்க், தமிழக டேட்டா மையம், மின்னணு மாவட்டத் திட்டம், மாநில சேவைகளை வழங்கும் வழித் தடம் ஆகிய திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்களை, மாநில அரசு அலுவலர்கள் பயன்படுத்த வேண்டும் என்றால், அலுவலகங்களை இணையதளத்தில் இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்தின் அன்றாடப் பணிகளை, மின்னணு முறைக்கு மாற்ற வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

பல சேவைகளை, ஆன்-லைனில் செய்ய வேண்டி இருப்பதால், இணையதள இணைப்புகள் அவசியமாகின்றன. எனவே, தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களிலும், இணையதள வசதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவற்றோடு, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், இணையதள வசதி ஏற்படுத்தப்படுகிறது. இணையதள வசதியோடு, ஒவ்வொரு துறை அலுவலகங்களும், வங்கிகளைப் போல, கணினி நெட்வொர்க்கில் இணைக்கப்படுகின்றன.

இதற்காக, அரசு மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்கும், ஒப்பந்தப் புள்ளியை, எல்காட் நிறுவனம் கோரியுள்ளது.ஒவ்வொரு அலுவலகத்துக்கும், தரை வழி தொலைபேசி இணைப்புடன், பிராட்பேண்ட் இணைப்புகள் வழங்குதல், தரை வழி தொலைபேசிக்கு, இலவச உள் அழைப்பு வசதி மட்டும் இருக்கும் வகையில், இணைப்புகள் அளிக்கப்படுகின்றன.

இதுகுறித்து, தமிழக அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து அலுவலகங்களும், இணையதள வசதி பெறும் போது, தகவல் பரிமாற்றம் எளிதாவதோடு, அரசின் அனைத்து செயல் மற்றும் தகவல்களை, இணைய தளம் மூலம், உடனுக்குடன் அறிய முடியும்.

நாட்டின் கடை கோடியில் இருக்கும் அலுவலகங்கள் கூட, மக்களுக்கு உடனுக்குடன் சேவையை அளிக்க முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஒப்பந்தப் புள்ளிகள் முடிவு செய்யப்பட்டு, மூன்று மாதங்களில், அனைத்து அலுவலகங்களிலும், இணையதள வசதி அளிக்கப்படும் என, எல்காட் வட்டாரங்கள் கூறுகின்றன.