Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை உடனடியாக விடுதலை செய்யகோரி மார்ச் மாதம் நாடுதழுவிய பேரணி - பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் பேரவையின் 2 நாள் பயிலரங்கம் சென்னை கிழக்கு கடற்கரைசாலை முட்டுக்காட்டில் அமைந்துள்ள மசூதி தோட்டத்தில் நடை பெற்றது. அதனில் கலந்துகொண்ட பின் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலா ளரும், மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது,

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் துணை அமைப்புகளாக தேசிய அளவில் முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திரத் தொழிலாளர் யூனி யன், மகளிர் அணி ஆகியவை கள் உள்ளன. அதில் ஒன்றான முஸ்லிம் மாணவர் பேரவையை (எம்.எஸ்.எஃப்.) தமிழகத்தில் பலப்படுத்தும் நோக்கத்தோடு 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்
டுள்ளன.

சென்னை மண்டலத்தில் அடங்கிய வட சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், விழுப்புரம் கிழக்கு, மேற்கு, வேலூர் கிழக்கு, மேற்கு, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் புதுவை ஆகிய மாவட் டங்கள் அடங்கிய சென்னை மண்டலத்திற் கான 2 நாள் பயிலரங்கம் நடைபெறுகிறது.

இதில் 458 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். ஒவ்வொ ருவரும் 50 ரூபாய் நுழைவு கட்டணம் செலுத்தி தங்களது சொந்த செலவில் வந்து பங் கேற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தஞ்சை மண்டலம் சார்பில் தரங்கம்பாடியிலும், நெல்லை மண்டலம் சார்பில் குற்றாலத்திலும், மதுரை மண்டலம் சார்பில் கொடைக் கானலிலும் பயிலரங்கங்கள் நடைபெற உள்ளன.

அதனைத்தொடர்ந்து மாநில அளவிலான முஸ்லிம் மாணவர் பேரவை மாநாடு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது.

இந்த பயிலரங்கத்தில் மாணவர்களின் ஒழுக்கம், யோகா பயிற்சி, தீவிரவாத எதிர்ப்பு, மது, பாலியல் வன் கொடுமை, கல்லூரிகளில் ஆயுதம் ஏந்தி வன்முறை உள்ளிட்டவை நுழைய விடக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வும், பயிற்சியும் அளிக்கப்பட்டது.

பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டுப் பயணம் செய்யாத மாணவ சமுதாயத்தை உருவாக்குவது நமது லட்சியமாக இருக்க வேண்டும் என்றும் மாணவர்க ளுக்கு வலியுறுத்தப்பட்டது.. தலைவர்கள், அறிஞர் பெருமக் கள் பங்கேற்று பயிற்சி அளித்த னர்.

மத்திய - மாநில அரசுகள் மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கி வருகிறது. அவைகளை முழுமையாக பயன்படுத்தக் கூடிய வழி முறைகள் குறித்தும் மாணவர் களுக்கு அறிவுறுத்தப்பட்டன.

இந்த பயிலரங்கத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. 

அவை, 1. கல்விக் கடன் பெறும் வழிமுறையை இலகு வாக்க வேண்டும்.

 2. கல்விக் கடனுக்கான வட்டியை உடனடி யாக ரத்து செய்ய வேண்டும்

 3. மாவட்ட தலைநகரங்களில் சிறுபான்மையின ருக்கான விடுதிகள் அமைக்கப்பட வேண்டும்.

  4. வன்முறை, மது, ஆபாசம், பாலியல் கொடுமை, திரைப்பட தீவிரவாதம் உள் ளிட்டவைகளிலிருந்து இளைய சமுதா யத்தை காப்பது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.

இந்த தீர்மானங்களை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பிரசாரத்தை முஸ்லிம் மாணவர் பேரவையினர் தமிழகம் முழுவ தும் செய்ய வேண்டும் என இந்த பயிலரங்கத்தில் பயிற்றுவிக் கப்பட்டது.

மாணவர்களுக்கான கல்விக்கடன் பெறுவதில் ஏற்படும் இடையூறு களை யப்பட்டு கடன் பெறும் நடை முறைகள் இலகுவாக்கப்பட வேண்டும் என்றும், கடனுக் கான வட்டியை ரத்து செய்ய வலியுறுத்தியும் முஸ்லிம் மாண வர் பேரவை சென்னையில் பேரணி நடத்த உள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு களின்படி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனில் இந்தியாவில் சிறு பான்மையினர் 18 சதவீதம் வாழ்கிறார்கள் என்றும், அந்த சிறுபான்மையினரில் பெரும் பான்மையினர் முஸ்லிம்கள் என்று தெரிவித்து, கல்வி வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் தனி இடஒதுக்கிடு இஸ்லாமி யர்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந் துரை செய்துள்ளது. அந்த பரிந் துரையை வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள மாநிலத் தலைநகரங் களில் கவன ஈர்ப்பு பேரணி நடை பெற உள்ளது.

தமிழகத்தில் இப் பேரணி நடைபெறும் இடமும், தேதியும் வரும் 16-ம் தேதியன்று திண்டுக்கல்லில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு வில் முடிவு செய்து அறிவிக்க உள்ளோம்.

இப்பேரணியில் நாடு முழுவதும் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்த உள்ளோம்.

இந்தியாவில் 4 மாநிலங்கள் தான் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படுகி றது. தமிழ்நாட்டில் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு கலைஞர் முதல்வராக இருந்தபோது சட்ட சிக்கல் இல்லாமல் வழங்கினார்.

கேரளாவில் 12 சதவீதம் வழங்கப்படுகிறது. கர்நாட காவில் 4 சதவீதம் வழங்கப் படுகிறது. ஆந்திராவில் அறி விக்கப்பட்டு நீதிமன்றம் தடை செய்து விட்டது. மணிப் பூரில் 4 சதவீதம் வழங்கப்படுகிறது. அனைத்து மாநிலங்க ளும் இதனை பின்பற்றி முஸ்லிம் களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதிர் மொகிதீன் பேட்டியில் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக