Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 11 பிப்ரவரி, 2013

சூரிய ஒளி மின்சக்தியில் 1 லட்சம் தெரு விளக்குகள்


 "தமிழகத்தில், சூரிய ஒளி மின்சக்தி மூலம், 1 லட்சம் தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,'' என, எரிசக்தித் துறை செயலர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். தூத்துக்குடியில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் நடந்த, சூரிய மின்சக்தி விழிப்புணர்வு கருத்தரங்கில் அவர் பேசியதாவது: அரசின் பசுமை வீடுகள் திட்டத்தில், 3 லட்சம் வீடுகளில், சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற, திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், 60 ஆயிரம் வீடுகள், 1 லட்சம் தெரு விளக்குகளுக்கு, சூரியஒளி மின்சக்தி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தொழிற்சாலைகள், தங்களது மொத்த மின் தேவையில், 6 சதவீ தத்தை, சூரிய ஒளி மின்சக்தி மூலமே பெற வேண்டும். இதற்கு தேவையான உபகரணங்களை ஒருமுறை அமைத்தால், அது, 25 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இதனால், தொழிற்சாலைகள், சூரிய ஒளி மின்சக்தி மூலம், கண்டிப்பாக மின் உற்பத்தி செய்ய வேண்டும். இவ்வகையில், மின் உற்பத்தி செய்ய, மானியம் கேட்டு, 2,000 தொழிற்சாலைகளிடமிருந்து அரசிற்கு மனுக்கள் வந்துள்ளன. அவற்றில், 1,000 மனுக்கள் திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களைச் சேர்ந்தவை. பிற மாவட்டங்களில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலேயே, இதற்கான மனுக்கள் வந்துள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக