Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 5 நவம்பர், 2012

குஜராத்தில் கப்பலில் விஷ வாயு தாக்கி 6 மாலுமிகள் பலி


அரபிக் கடல் குஜராத் எல்லையில் எல்.பி.ஜீ. சமையல் எரிவாயு ஏற்றிய மகரிஷி கிருஷ்னேத்ரேயா என்ற கப்பல் துபாய் செல்வதற்காக நின்றிருந்தது. இந்த கஅரபிக் கடல் குஜராத் எல்லையில் எல்.பி.ஜீ. சமையல் எரிவாயு ஏற்றிய மகரிஷி கிருஷ்னேத்ரேயா என்ற கப்பல் துபாய் செல்வதற்காக நின்றிருந்தது. இந்த கப்பலின் கம்ப்ரசர் அறை வாயுக்குழாயில் இன்று கசிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக கப்பல் தலைமை அலுவலர், கேஸ் என்ஜினியர் உட்பட மற்ற 4 மாலுமிகள் அந்த அறைக்குள் இறங்கி கசிவை சரிசெய்துள்ளனர். அப்போது வெளியேறிக்கொண்டிருந்த அந்த விஷ வாயுவில் சிக்கிய 6 பேரும் வெளியேற முடியாமல் மூச்சு திணறி உயிர் இறந்துள்ளனர்.

செய்தி அறிந்த மீட்புக்குழுவினர் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடலையும், அந்த கப்பலிலிருந்த மற்றவர்களையும் மீட்டுள்ளனர். உதவிக்காக இந்திய கப்பல்படை கப்பலும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஜீன் ஆண்டியின் கருணை இல்லம் ....!

ஊர் சுற்றிப் பார்க்க வந்த வெளிநாட்டுப் பெண்மணி, இன்று எண்ணற்ற ஏழைக் குழந்தைகளுக்கு உதவும் கரமாகத் திகழ்கிறார்

ஜீன் வாட்சன் (79)நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதி ஏழைக் குழந்தைகளுக்காக ‘கருணை இல்லம்’ என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றை ஆரம்பித்து பல வருடங்களாக சேவை செய்து வருகிறார்.

சமீபத்தில் வெள்ளி விழா கண்டுள்ளது இந்தக் கருணை இல்லம். தாய்,தந்தையற்ற மற்றும் ஏழைக் குழந்தைகள் 598 பேர் இந்தக் கருணை இல்லத்தினால் பயனடைந்துள்ளனர். கல்வி கற்க வசதியில்லாத ஏழை மாணவர்கள் கருணை இல்லத்தின் உதவியால் பட்டதாரிகளாகி வருகின்றனர்.

அண்மையில் நிலக்கோட்டை வந்திருந்தார் ஜீன் வாட்சன். அவரைச் சந்திக்க கருணை இல்லத்துக்குச் சென்றோம். ‘ஜீன் ஆன்ட்டி... ஜீன் ஆன்ட்டி’ என குழந்தைகள் பாசத்தோடு அவரைக் கொஞ்சிக்கொண்டிருந்தனர். அந்த மலர்ச்சியோடு நம்மிடமும் பேசினார்...

நான் முதன்முதலில் 1984ம் ஆண்டு இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன். கன்னியாகுமரி பகுதி எனக்கு மிகவும் பிடித்துப்போனதால், மீண்டும் 1986ம் ஆண்டு கன்னியாகுமரிக்கு வந்து அப்பகுதி மக்களிடம் பழக ஆரம்பித்தேன். அங்குள்ள குழந்தைகள் இல்ல நிர்வாகி ஒருவர் மூலமாக நிலக்கோட்டை பகுதிக்கு வந்தேன். முதன்முதலாக என்னைப் பார்த்த நிலக்கோட்டை மக்கள், நான் ஒரு மருத்துவர் என நினைத்துக்கொண்டனர். தங்களுடைய குழந்தைகள் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், வைத்தியம் பார்க்கச் சொல்லியும் என்னிடம் வேண்டுகோள் வைத்தனர்.

அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை. அதற்காக ரொம்பவே வருந்தினேன். அந்த எண்ணம்தான் இதோ இந்த கருணை இல்லமாக உருமாறியிருக்கிறது. போதிய மருத்துவ வசதிகளின்றி தவிக்கிற இவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என முடிவு செய்தேன்."

மீண்டும் நியூசிலாந்து சென்றார் ஜீன். கருணை இல்லம் தொடங்க எங்கெங்கோ நிதிதிரட்ட முயற்சி செய்தும் அந்த சமயத்தில் போதிய நிதி கிடைக்கவில்லை. நியூசிலாந்தில் உள்ள தன்னுடைய பூர்வீக வீட்டை விற்று கொஞ்சம் பணத்தை ஏற்பாடு செய்தார். கையிலிருந்த சொற்பத் தொகையோடு இந்தியா வந்து, 1987ம் ஆண்டு ஏழு ஏழைக் குழந்தைகளுடன் கருணை இல்லத்தை தொடங்கியிருக்கிறார்.

ஆரம்பத்தில் எவ்வித அடிப்படை வசதியும் கருணை இல்லத்தில் கிடையாது. கையிலும் போதிய நிதியில்லை. செய்வதறியாது திகைத்து நின்றவருக்கு நியூசிலாந்திலிருந்த சில நண்பர்கள் உதவ முன்வந்தனர். பலரிடமிருந்து சிறிய நன்கொடைகளும் கிடைத்தன.

‘’1991ம் ஆண்டு. கருணை இல்லம் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான நிலம் விற்கப்பட்ட போது அதிர்ச்சியடைந்தோம். நமக்கென்று சொந்தமாக இடம்வேண்டும் என முடிவெடுத்து, கருணை இல்லம் டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து நிதி திரட்டினோம். பல்வேறு இடையூறுகள், சிக்கல்கள் அனைத்தையும் சமாளித்தோம்" என்று நினைவு கூர்கிறார் ஜீன்.

குழந்தைகளின் ஏழ்மை நிலை நன்கு ஆராயப்பட்ட பின்பே அவர்களுக்கு கருணை இல்லத்தில் இடமளிக்கப்படுகிறது. கருணை இல்லத்தை சேராத மாணவர்களுக்கும் உதவி செய்கின்றனர். வேறு பள்ளிகளில் நல்ல மதிப்பெண்களுடன் படித்து முடித்து,மேற்கொண்டு படிக்க முடியாத ஏழை மாணவர்கள் அணுகும் பொழுது முடிந்த நிதியுதவியை செய்துகொடுக்கிறார்கள்.

வாய்ப்புகள்,வசதிகள் இல்லாதவர்களுக்கே கருணை இல்லத்தில் இடம் கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக செயல்படுகிறோம்" என்கிறார் தானம் அறக்கட்டளையைச் சேர்ந்தவரும் கருணை இல்ல பொறுப்பாளர்களில் ஒருவருமான காதர்.

என்னோட அம்மா நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது ரத்தப் புற்றுநோயால் இறந்துட்டாங்க. அப்பா விவசாயக் கூலியா வேலை பார்த்தார். 2 அக்கா, 3 அண்ணன்னு எனக்கு பெரிய குடும்பம். படிக்க பணவசதி இல்லாததால அண்ணன்கள் எல்லாரும் படிப்பை நிறுத்திட்டு வேலைக்கு போயிட்டாங்க.

ஆனா என் அப்பா ‘குடும்பத்துல ஒரு பெண் குழந்தையாவது படிக்கணும்’னு ஆசைப் பட்டு என்னையும், என் அக்காவையும் கருணை இல்லத்துல சேர்த்து விட்டாங்க. இப்போ நானும் அக்காவும் B.E. படிச்சுட்டு இருக்கோம். படிச்சு முடிச்சதும் ஜீன் ஆண்ட்டி என்ன சொல்றாங்களோ, அதைச் செய்வேன்" என பெருமிதத்தோடு பேசுகிறார் கருணை இல்லத்தில் 6ம் வகுப்பில் இருந்து, தங்கிப் படித்த தனலட்சுமி.

இவரைப்போலவே எண்ணற்ற குழந்தைகள் இங்கே படித்து சமூகத்தின் உயர் பொறுப்புகளில் பணியாற்றுகின்றனர். என் கனவு, அக்கறை, சகலமும் இந்தப் பிள்ளைகளின் நல்வாழ்வுதான். அது நான் எதிர்பார்த்தமாதிரியே நிறைவேறி வருவதில் எனக்கு கிடைக்கும் ஆத்மதிருப்தியை சொல்ல வார்த்தையே இல்லை" என்கிறார் ஜீன் ஆன்ட்டி.

தேசங்களைக் கடந்த அன்பின் சின்னம் இந்த ஜீன் ஆன்ட்டி!



---எம். செந்தில்குமார்

பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்யக்கோரி மருத்துவ மாணவர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்


சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் 05.11.2012 அன்று மாலை தமிழ்நாடு மருத்துவ மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் புதிய விதிமுறைப்படி வெளியிட்டுள்ள முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகளை எம்சிஐ விதிமுறைப்படி திருத்தி வெளியிட வேண்டும்.

கிராமப்புற மாணவர்கள் தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரவே தயங்கும் வகையில் கடுமையான புதிய விதிமுறைகளை புகுத்தியுள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது. சமூக நீதிக்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

மருத்துவ படிப்பில் முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரை எம்சிஐ விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

முதலாம் ஆண்டில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தால்கூட, ஆறு மாதம் கழித்து தனி பேட்ச்சாகத்தான் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் என்றி பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூடுகிறது : புதிய நிர்வாகிகள் தேர்தல்


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுக்குழு எதிர்வரும் டிசம்பர் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம் கோழிக்கோடு கிழக்கு நடக்காவுவில் உள்ள ஹோட்டல் ஈஸ்ட் அவென்யூ வில் மிகச்சிறப்பாக நடை பெறுகிறது. தேசியத் தலைவரும், மத்திய வெளியுறவு மற்றும் மனிதவள மேம்பாட் டுத் துறை இணையமைச்ச ருமான இ.அஹமது சாஹிப் இதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டம் 2008 செப்டம்பர் 14-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற போது தலைவராக இ.அஹமது சாஹிபும், தேசிய பொதுச் செயலாளராக பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனும் ஒருமனதாக தேர்ந்தெடுக் கப்பட்டனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அம் மாநில பெயர்களோடு முஸ்லிம் லீக் அமைப்புகள் செயல்படுவதற்கு பதில், ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ என்ற ஒரே பெயரில் தேசிய அளவில் செயல் படுவது என முடிவெடுக் கப்பட்டது. இதற்கு கேரள ராஜ்ஜிய முஸ்லிம் லீக் கமிட்டி முழுமையான ஒத்துழைப்பு அளித்து அதற்கான சட்டப்பூர்வ மான பணிகளில் ஈடுபட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது.

தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
வரலாற்றுப் பெருமை கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 2012 மார்ச் 3-ம் தேதி அங்கீகரித்து ‘ஏணி’ சின்னத்தையும் ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தது.இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைமைச் செயலகமாக சென்னை காயிதெ மில்லத் மன்ஸில் செயல்படும் எனவும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்திய நாடாளுமன்றமும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்கின்ற பெயரை அங்கீகரித்து 2012 ஜூன் 27-ல் லோக்சபா செய்தி வெளியீட்டில் வெளியிட்டது.

முதல் கவுன்சில் கூட்டம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாற்றில் மாநில அளவில் பொதுக்குழு கூட்டங் களோடு தேசிய அளவில் செயற் குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்டங்களே இது வரையிலும் நடைபெற்று வந்துள்ளன. ஆனால், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்று அகில இந்திய அளவில் ஒரே பெயரில் - ஒரே சட்ட திட்டத்தில் செயல்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது சட்டத் திட்டங்களின்படி தேசிய கவுன்சில் கூட்டத்தை நடத்துகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்றில் இது முதல் கவுன்சில் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய கவுன்சில் மற்றும் செயற்குழு
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டத்திட்டங்களின்படி பத்தாயிரம் உறுப்பினர் களுக்கு ஒரு கவுன்சில் உறுப்பினர் என்ற அடிப்படையிலும், சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து 400 பேர் கவுன்சில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் புதிய தேசிய கவுன்சில் கூட்டம் வரும் டிசம்பர் மாதம் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு கேரள மாநிலம் கோழிக்கோடு கிழக்கு நடக்காவுவில் உள்ள ஹோட்டல் ஈஸ்ட் அவென்யூவில் நடைபெறு கிறது.

இதற்கான அழைப்பிதழை தேசிய கவுன்சில் உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அனுப்பியுள்ள தேசியத் தலைவர் இ.அஹமது சாஹிப், ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சுல் உறுப்பினராக தாங்கள் தேர்வு செய்யப்பட் டுள்ளதற்கு மனமார்ந்த வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள் கிறேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டத் திட்டம் விதி - 7(ஏ)-யின்படி அமைக்கப்பட்ட முதல் கூட்டம் 2-12-2012 காலை 10 மணிக்கு கோழிக்கோடு ஹோட்டல் ஈஸ்ட் அவென்யூவில் நடைபெறு கிறது. இக்கூட்டத்தில் தேசிய நிர்வாகிகள் தேர்தல் ஜனநாயக அடிப்படையில் நடைபெறுகிறது. எனவே, தாங்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்’ என அதில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய செயற்குழு கூட்டம்- பேராசிரியர் அழைப்பு
தேசிய கவுன்சிலுக்கு முன்னதாக,  1.12.2012 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டம் தலைவர் இ.அஹமது சாஹிப் தலைமை யில் கோழிக்கோடு ஹோட்டல் ஈஸ்ட் அவென்யூவில் நடைபெறும் என்றும், அக்கூட்டத்தில்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நான்கு ஆண்டு ஆண்டறிக்கை, வரவு செலவு அறிக்கை, மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டு அனுப்பப் பட்டுள்ள தேசிய கவுன்சில் உறுப்பினர்களுக்கு அங்கீகாரம், தேர்தல் நடைபெறாத மாநிலங்களுக்கு தேசியத் தலைமையால் நியமிக்கப்பட்ட கமிட்டிகளுக்கான அங்கீகாரம், தேசிய கவுன்சில் கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன் ஆலோசனை ஆகியவை நடை பெறும் என்றும் முக்கியமான இக்கூட்டத்திற்கு தேசிய செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய கவுன்சில், செயற்குழு கூட்டங்களில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காள, உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், குஜராத், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், அஸ்ஸாம், உத்தர காண்ட், டெல்லி, கோவா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலி ருந்து பிரதிநிதிகள் பங்கேற்கின் றனர்.

தேசிய கவுன்சில், செயற்குழு கூட்டங்களுக்கான மிகச் சிறப்பான ஏற்பாடுகளை கேரள மாநிலத் தலைவர் பானக்காடு செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்கள் ஆலோசனையில் கேரளமாநில நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தேசிய கவுன்சில், செயற்குழு கூட்டங்களில் பங்கேற்க உள்ளவர்கள் தங்கள் வருகை குறித்து கேரள மாநில பொதுச் செயலாளர் கே.பி.ஏ. மஜீத் 09447109014 மற்றும் கேரள மாநிலச் செயலாளர் டி.பி.எம். ஜாஹீர் 09846183344, கோழிக் கோடு லீக் ஹவுஸ் 0495 2365969, 2366090 ஆகிய எண்களில் ஏதாவது ஒன்றுக்கு தகவல் தெரிவிக்கும்படியும், இது தேர்தல் கூட்டமாக இருப்பதால் கண்டிப்பாக அழைப்பு உள்ளவர்கள் மட்டுமே இக் கூட்டத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

தேசிய கவுன்சிலும் - செயற்குழுவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சியையும், புதிய சகாப்தத்தையும் உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது.

ஞாயிறு, 4 நவம்பர், 2012

30 மாணவருக்கு ஒரு ஆசிரியர் நியமனம்

நாடு முழுவதும் கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டு 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி தரத்தை உறுதி செய்யும் வகையில் 5ம் வகுப்பு வரை 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், 6ம் வகுப்பில் இருந்து 8ம் வகுப்பு வரை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் நியமிக்க கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்தப்போவதாக ஏற்கனவே தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும் அறிவித்திருந்தார்.

அடுத்த கல்வியாண்டில் இருந்து அனைத்து அரசு ஆரம்ப பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் விகிதாச்சாரம் அமல்படுத்தும் நடவடிக்கை துவங்கியுள்ளது. தற்போது பல பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விகிதாச்சாரத்திற்கு ஏற்ற ஆசிரியர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சில பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிரியர் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது.

இதை சரி செய்வதற்கு பள்ளிகள் வாரியாக வகுப்புகள்தோறும் மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை குறித்த விவரங்கள் சேகரிக்கும் பணி துவங்கியுள்ளது. இந்த விவரங்களை சேகரித்து விரைவில் அனுப்பி வைக்க தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நடுநிலைப்பள்ளிகளில் பாடங்களுக்கு ஏற்பவும் ஆசிரியர்கள் நியமிக்கவேண்டியுள்ளது. கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அடுத்த ஆண்டில் விகிதாச்சாரப்படி நியமனம் அமலுக்கு வரும். இதற்கான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிடும்‘ என்றனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் புதிதாக 5 துறைகள்


சென்னைப் பல்கலைக்கழகத்தில் புதிதாக 5 துறைகளை தொடங்குவதற்கு பல்கலைக்கழக செனட் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

 இதையடுத்து, சமூகப் பணி, மகளிரியல், பயோ-இன்ஃபர்மேடிக்ஸ், நெட்வொர்க் சிஸ்டம்ஸ் அண்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெட்டீரியல் சயின்ஸ் ஆகிய துறைகள் தொடங்கப்பட உள்ளன. இதன்மூலம் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளின் எண்ணிக்கை 78 ஆக அதிகரிக்கிறது.

 சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் கூட்டம் உயர் கல்வித் துறைச் செயலாளரும், சென்னைப் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் குழுவின் அமைப்பாளருமான டி.எஸ். ஸ்ரீதர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்களும் செனட் குழுவின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்பட்டன.

 இதில் பல முடிவுகளுக்கு ஒப்புதலும் வழங்கப்பட்டது.

சி.ஆர்.பி.எப்.(CRPF ), - ல் கான்ஸ்டபிள்கள் பணி வாய்ப்பு


சி.ஆர்.பி.எப்., என்ற பெயரில் அறியப்படும் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் 1949ல் நிறுவப்பட்டது. தற்போது 60 ஆண்டு சேவையைக் கடந்து இந்தியாவின் முக்கியமான ஒரு படையாக முத்திரை பதித்து வருகிறது.

இந்தப் படைக்கு 207 பட்டாலியன்களும், 37 குழு மையங்களும், 11 பயிற்சி நிறுவனங்களும், 17 மருத்துவமனைகளும் உள்ளன. இந்தப் படையில் கான்ஸ்டபிள் பிரிவிலான 167 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்

மத்திய சேமக் காவல் படையின் கான்ஸ்டபிள் பதவி தமிழகத்தைப் பொறுத்தவரை டிரைவர் பிரிவில் 51 இடங்களும், பிட்டர் பிரிவில் 16 இடங்களும், பக்ளர் பிரிவில் 14 இடங்களும், டெய்லர், வாட்டர் கேரியர், வாஷர் மேன் பிரிவுகளில் தலா 9 இடங்களும், காப்ளர் மற்றும் பெண் ஹேர் டிரஸ்ஸர் பிரிவில் தலா 4 இடங்களும், கார்பென்டர் பிரிவில் 3 இடங்களும், பிராஸ் பேண்டு, மகளிர் குக் பிரிவுகளில் தலா 2 இடங்களும், ஆண் குக் பிரிவில் 22 இடங்களும், சபாய்கர்மாச்சாரி பிரிவில் 12 இடங்களும், பார்பர் பிரிவில் 10 இடங்களும், கார்டனர் பிரிவில் 1 இடமும் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள்

சி.ஆர்.பி.எப்.,பின் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.08.2012 அன்று அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும், 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பத்தாம் வகுப்பிற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இந்தப் பதவிகளில் டிரைவர் மற்றும் பிட்டர் பதவிக்கு குறிப்பிட்ட கல்வித் தகுதியும், இதர பதவிகளான பக்ளர், டெய்லர், காப்ளர், கார்பென்டர், கார்டனர், பெயின்டர், பைப் பேண்டு, பிராஸ் பேண்டு, குக், வாட்டர் சப்ளையர், சபாய்கர்மாச்சாரி, பார்பர், வாஷர்மேன், ஹேர் டிரஸ்ஸர் போன்ற பதவிகளுக்கு அனுபவ ரீதியான பயிற்சியும் தேவைப்படும். இந்தத் தகுதிகளை அறியும் விதத்தில் நடத்தப்படும் டிரேடு டெஸ்டை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.

இதர தகவல்கள்

சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸின் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.50/ஐ டி.டி., போஸ்டல் ஆர்டர் அல்லது பேங்கர்ஸ் செக் மூலமாக Deputy Inspector General of Police என்ற பெயரில் விண்ணப்பிக்கும் பகுதிக்கு ஏற்ற இடத்தில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.

பிஸிக்கல் எபீசியன்சி டெஸ்ட், பிஸிக்கல் ஸ்டாண்டர்ஸ் டெஸ்ட், எழுத்துத் தேர்வு போன்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். முழுமையாகப் பூர்த்தி செய்த பரிந்துரைத்த படிவ மாதிரியிலான விண்ணப்பத்துடன் உரிய இணைப்புகளை இணைத்து தொடர்புடைய அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்:26.11.2012. இணையதள முகவரி http://crpf.nic.in/RECRUITMENT/159912.pdf