Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 4 நவம்பர், 2012

சென்னைப் பல்கலைக்கழகத்தில் புதிதாக 5 துறைகள்


சென்னைப் பல்கலைக்கழகத்தில் புதிதாக 5 துறைகளை தொடங்குவதற்கு பல்கலைக்கழக செனட் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

 இதையடுத்து, சமூகப் பணி, மகளிரியல், பயோ-இன்ஃபர்மேடிக்ஸ், நெட்வொர்க் சிஸ்டம்ஸ் அண்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெட்டீரியல் சயின்ஸ் ஆகிய துறைகள் தொடங்கப்பட உள்ளன. இதன்மூலம் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளின் எண்ணிக்கை 78 ஆக அதிகரிக்கிறது.

 சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் கூட்டம் உயர் கல்வித் துறைச் செயலாளரும், சென்னைப் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் குழுவின் அமைப்பாளருமான டி.எஸ். ஸ்ரீதர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்களும் செனட் குழுவின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்பட்டன.

 இதில் பல முடிவுகளுக்கு ஒப்புதலும் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக