Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 4 நவம்பர், 2012

30 மாணவருக்கு ஒரு ஆசிரியர் நியமனம்

நாடு முழுவதும் கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டு 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி தரத்தை உறுதி செய்யும் வகையில் 5ம் வகுப்பு வரை 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், 6ம் வகுப்பில் இருந்து 8ம் வகுப்பு வரை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் நியமிக்க கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்தப்போவதாக ஏற்கனவே தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும் அறிவித்திருந்தார்.

அடுத்த கல்வியாண்டில் இருந்து அனைத்து அரசு ஆரம்ப பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் விகிதாச்சாரம் அமல்படுத்தும் நடவடிக்கை துவங்கியுள்ளது. தற்போது பல பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விகிதாச்சாரத்திற்கு ஏற்ற ஆசிரியர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சில பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிரியர் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது.

இதை சரி செய்வதற்கு பள்ளிகள் வாரியாக வகுப்புகள்தோறும் மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை குறித்த விவரங்கள் சேகரிக்கும் பணி துவங்கியுள்ளது. இந்த விவரங்களை சேகரித்து விரைவில் அனுப்பி வைக்க தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நடுநிலைப்பள்ளிகளில் பாடங்களுக்கு ஏற்பவும் ஆசிரியர்கள் நியமிக்கவேண்டியுள்ளது. கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அடுத்த ஆண்டில் விகிதாச்சாரப்படி நியமனம் அமலுக்கு வரும். இதற்கான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிடும்‘ என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக