Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

பாலுக்கு தவிக்கும் பச்சிளம் குழந்தைகள்- பள்ளிக்கு ஏங்கும் சிறுவர்கள்; நெருப்பைத் தேடும் பயங்கரவாத ஜென்மங்கள் ! - அதிர்ச்சி ரிப்போர்ட்


நள்ளிரவு 1.17 மணி (இன்று அதிகாலை) தொலைபேசியில் என்னை அழைத்தது அஸ்ஸாமில் இருந்து போனில் அழைத்தவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணியின் தமிழ்நாடு மாநில இணைச்செயலாளர் ஈரோடு முஹம்மது ஆரிப்! நான் என்ன ஏது என்று கேட்டபோது, இப்போதுதான் துப்ரி அகதி முகாமிலிருந்து நிவாரண உதவிகளை கொடுத்து விட்டு இருப்பிடம் திரும்பிக்கொண்டிருக்கிறோம் என்றார்.

பதற்றம் நிறைந்த பாது காப்பற்ற ஒரு பகுதியில் அதுவும் இந்த நேரத்திலா என ஆச்சரியத்தோடு நான் கேட்டபோது, """"அகதி முகாம்களில் கதறி துடிப்பவர்களை பார்த்த எங்களுக்கு உயிர் மேல் அக்கறையே இல்லாமல் போய்விட்டது"" என்றார்.

அஸ்ஸாம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 4 லட்சம் முஸ்லிம்கள் 270 அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிவாரண உதவிகளை செய்து வருகிறது.

இந்த உதவிகளை நேரில் செய்வதற்காகத்தான் தமிழ்நாட்டிலிருந்து முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் அய்யம்பேட்டை மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், முஸ்லிம் லீக் இளைஞரணியின் மாநில செயலாளர் பள்ளப்பட்டி எம்.கே. முஹம்மது யூனுஸ், மாநில இணைச்செயலாளர் ஈரோடு முஹம்மது ஆரிப் ஆகியோர் சென்றுள்ளனர்.


நிவாரணப் பணிகள் குறித்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

நாங்கள் செல்வதற்கு ஒரு நாள் முன்பதாக அகதி முகாமில் நிவாரண உதவி செய்த போது அதைப் பெற வந்த 6 பேர் போடோ தீவிர வாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

இதை அறிந்தும் அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்து நாங்கள் அந்த புனித காரியத்தில் இறங்கினோம். வேறு எந்த அமைப்புக்களாலும் இவ்வளவு இலகுவாகவும் , துணிச்சலாகவும் இறங்கி நிவாரண உதவி செய்ய முடிய வில்லை.

நாங்கள் நாற்பது பேர் கொண்ட குழுவாக செயல்பட்டோம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் டெல்லி குர்ரம் அனீஸ் உமர், தேசிய பொருளாளர் கர்நாடகத்தின் தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா, உத்திர பிரதேச மாநில பொதுச்செயலாளர் டாக்டர் மத்தீன், கேரள முஸ்லிம் யூத் லீக் தலைவர் சாதிக் அலி, ஜுபைர் குழுவினர் அஸ்ஸாம் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் என தாய்ச்சபையினர் இதில் முழுமையாக ஈடுபாடு கொண்டனர்.

இந்த அகதி முகாம்களில் பெரும்பாலனவை துப்ரி மாவட்டத்திலேயே அமைந்துள்ளன. அதில் 35 முகாம்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தத்து எடுத்துக் கொண்டது.

அஸ்ஸாமிலேயே மிகப் பெரிய முகாம் தமாரா ஹத் பகுதியில் உள்ள ஹாத்திதூரா கல்லூரியில் அமைந்ததுதான் துப்ரியிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த முகாமில் முப்பதாயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்துக்களும் அடங்குவர்.

முகாம்களை எல்லாம் பார்வையிட்டு அங்கு தங்கியுள்ளவர்களிடம் முதலில் தேவைகளை கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டோம். அகதிகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளும், சிறுவர்களுமே அவர்கள் எங்களிடம் கேட்டது சமைப்பதற்கு பாத்திரங்கள் பால் பவுடர் , பிஸ்கட், சோப்பு, துணி, மணிகள், இவைகள் தான்.

அவர்கள் கேட்டதை கவுகாத்தியில் நேரடியாக கொள்முதல் செய்து, நேரடியாகவே, கொண்டு வந்து, நேரடியாகவே விணியோகித்தோம். �நேரடி� என்று நாங்கள் அழுத்தி சொல்வதற்கு காரணம் தாய்ச்சபையின் மீது எந்த நம்பிக்கை வைத்து இந்த நிவராண உதவிக்கு சமுதாயம் வாரி வழங்கியதோ அந்தத் தொகையில் ஒரு பகுதி கூட வீனாகக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறோம் என்ற மன நிறைவு ஒரு புறம் இருந்தாலும் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளில் இந்த நிவாரண உதவி இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலிருந்து தரப்படிகிறது என சொல்லிக் கொண்டே இருந்தது மன நிறைவை அதிகப் படுத்தியது.

ஆனால் என்னதான் உதவினாலும் அவர்கள் அத்தனை பேருமே கேட்டது, """"எங்களை எப்போது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்புவார்கள்�� என்ற கேள்விதான் அதை விட எங்களுக்கு பரிதாபமாக இருந்தது. சிறுவர்கள் எங்களிடம், """" பள்ளிக்கூடங்கள் திறக்காதா எதிக்கப்பட்ட புத்தகங்களுக்கு பதில் புதிதாக புத்தகங்கள் எல்லாம் தருவார்களா?"" என்ற அப்பாவித்தனமான கேள்விகள்தான். அதைவிட எங்கள் நெஞ்சை உருக வைத்தது, பேசத் தெரியாத பச்சிளம் குழந்தைகள் எங்களை வெறித்துப் பார்த்தது, அவர்கள் ஒட்டிய வயிறு பசியை சுட்டிக்காட்டியது கல்லையும் கரைய வைக்கும் காட்சிகள். பாலுக்கு ஏங்கும் அவர்களுக்கு பால் பவுடரும், அதை காய்ச்சி கொடுப்பதற்கு பாத்திரங்கள் வாங்குவதையுமே முதல கடமையாக கொண்டோம்

அரசாங்கம் எதையுமே செய்ய வில்லையா? எனக் கேட்கலாம் அரசு சார்பில் அரிசி,பருப்பு, எண்ணெய் வழங்கப்படுகிறது ஆனால் சமைத்து சாப்பிட பாத்திரங்களோ அடுப்பெரிக்க விறகோ இல்லை.

இவர்கள் வசித்த வீடுகள் எல்லாம் படு பாவிகளால் தீயில் கொடூரமாக எரிக்கப்பட்டன. ஆனால் சமைப்பதற்கு இவர்கள் நெருப்பைத் தேடி ஆலாய் பறப்பது வேதனையை வரவழைத்தது. 

யார் என்னதான் உதவி செய்தாலும் இந்த மக்கள் சொந்த இருப்பிடங்களுக்கு விரைந்து அனுப்பப்பட வேண்டும் அவர்கள் வாழ்வதற்கு ஆயுதப் பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும்.

அஸ்ஸாம் அகதி முகாம்களில் உள்ளவர்கள் கோரிக்கை எல்லாம் போடோலாந்து தேசிய கவுன்சிலை கலைக்க வேண்டும் போடோ தீவிரவாதிகளிடம் இருக்கும் ஆயுதங்களை பறிக்க வேண்டும் என்hதுதான்.

போடோ தீவிரவாதிகள் முஸ்லிம்களை துரத்தி அடித்ததோடு அவர்கள் வாழ்ந்த வீடுகள் அனைத்தையும் எரித்து விட்டனர். அந்த இடங்களையெல்லாம் புல்டோஸர் மூலம் தகர்த்திதுவிட்டனர். இதனால் அவர்கள் குடியுரிமை பெற்றதற்கான ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி என அனைத்து ஆவணங்களும் எரிந்து விட்டன.

இதை அவர்கள் மீண்டும் கேட்டால் வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் என மறுப்பார்கள் 60 ஆண்டுகாலம் அஸ்ஸாமில் நடப்பது இதுதான். அஸ்ஸாம் முஸ்லிம்களில் பெரும்பாலனவர்கள் மீன்பிடி தொழில் செய்பவர்கள், ஆற்றோரத்திலுள்ள செங்கள் சூழைகளில் கூலிகளாக வேலை செய்பவர்கள்.

பிரமாண்டமான பிர்ம்மபுத்திரா நதியில் அடிக்கடி பெருக்கெடுக்கும் வெள்ளத்தால் இவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படும்போதெல்லாம் அவர்களின் ஆவணங்களும் அழிந்து போய்விடுகின்றன. திருப்பிக்கேட்கும்போது வங்க தேசத்திலிருந்து வந்தவர்கள் என வழக்கமான குற்றமே இவர்கள் மீது சுமத்தப்படும்.

அஸ்ஸாம் முஸ்லிம்கள் அவரவர் இருப்பிடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டாலும் அவர்களுக்கு வீடு உள்ளிட்ட வசிப்பிடங்கள் செய்து கொடுக்கப்படவேண்டும். கல்வி, மார்க்க அறிவு, அவர்களுக்கு அத்தியாவசிய தேவை எனவே ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் கருணைப் பார்வை அஸ்ஸாம் முஸ்லிம்கள் மீது திரும்ப வேண்டுமென்பதே எங்கள் பயணத்தில் நாங்கள் தெரிந்து கொண்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும் மத்திய மனித வள மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ.அஹமது சாஹிப், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். அப்துர் ரஹ்மான் , இ.டி.முஹம்மது பஷிர் உள்ளிட்டோர் அடங்கிய குழு இந்த அகதி முகாம்களில் பார்வையிட்டு பணி தொடங்கி வைத்து முதல்வர் தருன் கோகாயைச் சந்தித்து பேசியதன் பலனாகவே நாங்கள் இந்த அளவிற்கு நிவராண பணி செய்ய முடிந்தது.

மாவட்ட நிர்வாகமும் வருவாய் அதிகாரிகளும் காவல் துறையும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர் நாங்கள் ஒரு காரில் மூவர் பயணம் செய்கிறோம் என்றால், எங்கள் காருக்கு முன்பும் பின்பும் ஏ.கே.47 ஏந்திய 12 காவலர்கள் பாதுகாப்புக்கு எப்போதும் உடன் வந்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீது அரசும், காவல்துறையும், உளவு அமைப்புக்களும், கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக இத்தனை நாட்களாக நிவாரண பணி செய்ய முடிந்தது.

அஸ்ஸாம் முஸ்லிம்கள் சொந்த இருப்பிடம் திரும்பி நிம்மதியாக வாழ்கிறார்கள் என்ற செய்தி கிடைக்கும் வரை எங்கள் மனதில், அகதி முகாம்களில் அவர்கள் படும் அவலங்களே நிழலாடும்.

நேர்காணல் - காயல் மகபூப்


வியாழன், 6 செப்டம்பர், 2012

இளைய சமுதாயமே ! மாணவச் சமுதாயமே ! நம் நிலையை நாமே உயர்த்திட ,கும்ப கோணம் நோக்கி வா !


மத்திய அரசால் சிறுபான்மையின மக்களின் நிலையை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சச்சார்  மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிசன்களின்  அறிக்கையில் இந்தியாவில் முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை குறித்து வெளியிட்ட தகவல்கள் மிகவும் அதிர்ச்சி தரக்கூடியதாகும்.
 முஸ்லிம்களின் கல்வியறிவைக் குறித்து "இந்தியா டுடே" ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வறிக்கை சமூகத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் நல்லதோர் முன்னெச்சரிக்கையாகும்.அந்த ஆய்வறிக்கையில் ,
  
"2001- ல் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இந்தியாவில் கல்வியறிவைப் பெறுவதில் முஸ்லிம்கள் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள் என்பதைத்  தெரிவிக்கிறது. 1881- க்கு பிறகு அகில இந்திய அளவில் மேற்கொள்ளப் பட்ட கணக்கெடுப்புகளில் இது மிக விரிவானது (சமீபத்தில் வெளியாகியுள்ள ஸச்சார் அறிக்கை இக்கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டதே). 2001-லேயே இக்கணக்கெடுப்பு முடிந்துவிட்டாலும் பல தகவல்களை கணக்கெடுப்பு ஆணையம் இன்னமும் வெளியிடவில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை எவரொருவர் தனது பெயரை எழுதவும், கையெழுத்திடவும் தெரிந்திருக்கிறாரோ அவரும் கல்வியறிவு பெற்றவர் என வகைப்படுத்தப்படுகிறார். இந்த குறைந்த பட்ச கல்வியறிவைக்கூட இந்தியாவில் உள்ள மொத்த முஸ்லிம்களில்  55% அளவினர்தான் பெற்றுள்ளனர். அதிலும் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நிலைமை படு மோசமானதாக இருக்கிறது.
நாட்டின் மொத்த முஸ்லிம்களில் 61 சதவீதத்தினர் இம்மாநிலங்களில்தான் இருக்கின்றனர். முஸ்லிம்கள் அதிகம் உள்ள மற்றும் படித்தவர்கள் அதிகமுள்ள கேரளாவிலும் கூட இதே நிலைதான். குஜராத் மற்றும் ஆந்திராவில்தான் ஏதோ சொல்லிக்கொள்ளும் அளவுக்கு முஸ்லிம்களின் கல்வி நிலை இருக்கிறது. கிராமம், சிறு நகரம், பெருநகரம் என எல்லா வகையிலும் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியே உள்ளனர். ஆரம்பக்கல்வியில் ஆரம்பிக்கும் இவ்வித்தியாசம் கல்வி நிலை உயர உயர அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 
மேலும் இதில் ஆண், பெண் வர்க்க பேதமும் பார்க்கப்படுகிறது. முஸ்லிம் ஆணுக்கு கிடைக்கும் கல்வி, முஸ்லிம் பெண்களுக்கு கிடைப்பதில்லை என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஆரம்பக் கல்வியில், பெருநகரம் மற்றும் சிறு நகரங்களில் கல்வியறிவு பெற்ற முஸ்லிம் ஆண்களை விட 18% குறைவாகவே பெண்கள் கல்வி பெறுகிறார்கள். கல்லூரி அளவில் உயரும்போது இது 48% அதிகரிக்கிறது. இப்படி எல்லா வகையிலும் கல்வியில் பின் தங்கியுள்ள முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்களின் கல்வி விகிதத்தை அடைவதற்கு 2011-ம் ஆண்டிற்குள் 31 மில்லியன் முஸ்லிம்கள் கல்வி கற்கவேண்டும்" என்று கூறுகிறது .

சமீபத்தில் இராணுவம் மற்றும் காவல்துறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க மத்திய அரசு தீர்மானம் எடுப்பதற்கு முயன்றபோது அனைத்து ஃபாசிஸ சக்திகளும் இணைந்து நாட்டுப் பாதுகாப்பை காரணம் காட்டி அதனை எதிர்த்தது நினைவுகூரத்தக்கது.
இன்னும் சொல்லப்படாத கணக்கெடுக்கப்படாத விவரங்கள் எத்தனையோ உள்ளன. 

   தமிழகத்தை பொருத்தவரை ,கடந்த திமுக ஆட்சியில் முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று 3.5 % இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது . பின்பு , அதனை சரியாக அதிகாரிகள் நிரப்பவில்லை என்று தகவல் வந்ததும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கோரிக்கையை ஏற்று திமுக அரசு கண்காணிப்பு குழு அமைத்தது .முறையாக முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு நிறப்பப்படுகிறதா ? என்பது கண்காணிக்கப்பட்டது ; ஆனால் , நம்  சில துறைகளில் ஏற்படும் காலி இடங்களுக்கு அரசு நிரப்பும் போது முஸ்லிம்களை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது .

             இந்த நிலையில் ,நம் தாய் சபையாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் தீர சிந்தித்து ,இந்த நிலை இனி தொடரக்கூடாது ,கல்வி நிலையில் நம் சமுதாயம் இன்னும் முன்னுக்கு வர வேண்டியுள்ளது ,இதற்க்கு சமுதாய மக்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தனர் .

      அதன் அடிப்படையில் ,எதிர்வரும் செப்டெம்பர் 08 - ஆம் நாள் கும்ப கோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கல்வி விழிப்புணர்வு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . ஏதோ ,முஸ்லிம் லீக்கினர் திடீர் என்று கட்சியை வலுப்பைபடுத்த இவ்வாறு நடத்துகிறார்கள் என்று இன்றைய தலைமுறையினர் நினைத்துவிடக்கூடாது .

 முஸ்லிம் லீக்கின் துவக்கமே ,முஸ்லிம்களின் கல்விநிலை முன்னேற்றத்திற்கும் ,இட ஒதுக்கீட்டிற்கும் தான் .அந்த இரண்டு நோக்கத்தை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டதால் தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை புதுக்கல்லூரி முதல் நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரிவரை தோன்றுவதற்கு காரணமாக இருந்தது .

                  எனவே ,முஸ்லிம்களின் கல்வி நிலை உயர ,மத்திய மாநில அரசுகள் நம் சமுதாயத்திற்கு வழங்கியுள்ள உரிமைகளை நாம் முழுமையாக பயன்படுத்திட வழிகாண நம் சமுதாயத்தை செம்மையோடு வழி நடத்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அழைக்கின்றது ,செப் -08 -இல் கல்வி விழிப்புணர்வு மாநாடு !
             
                 தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தி பெற்றிட , அகில இந்த அளவில் முஸ்லிம்களுக்காக மத்தியரசின் 10 % இட ஒதுக்கீடு கிடைத்திட ,வலுவான முறையில் மத்திய ,மாநில அரசுகளுக்கு நம் கோரிக்கை குரல் கேட்டிட , அழைக்கின்றது நம் இனமானப் பேரியக்கம் ,செப்-08 ,கும்பகோணத்தில் கல்வி விழிப்புணர்வு மாநாடு !

                             நாம் நடந்து வந்த பாதை என்ன ? இனி நாம் நடை போடும் பாதை எப்படி பட்டது ? நாம் எவ்வாறு நடந்து சென்றால் வெற்றி இலக்கை அடையலாம் ? என்ற கேள்விகளுக்கு விடை கண்டிட அழைக்கின்றது தாய் சபை செப்-08 கும்பகோணத்தில் கல்வி விழிப்புணர்வு மாநாடு !

          இளைய சமுதாயமே !  மாணவச் சமுதாயமே ! நம் நிலையை நாமே உயர்த்திட ,கும்ப கோணம் நோக்கி வா ! திணரட்டும் கும்பகோணம்! அறியட்டும் நம் நிலையை அரசாங்கம் ! 

-------------அபு ஆஸிமா
             
நன்றி : மணிச்சுடர் 

எதிர்கால தலைவர்களின் பரிதாப நிலை பாரீர் !


சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாநில கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் கடந்த 31-ந்தேதி நடந்தது. இதில் தலைவராக மாணவர் ஞானகார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெயகிருஷ்ணன் தோல்வி அடைந்தார்.

மொத்தம் உள்ள 2106 வாக்குகளில் ஞானகார்த்திக் 1487 வாக்குகள் பெற்றார். முடிவு அறிவிக்கப்பட்டதும் ஞானகார்த்திக் ஆதரவு மாணவர்கள் வெற்றியை கொண்டாடினர். அப்போது தோல்வியடைந்த மாணவரின் ஆதரவாளர்களும், வெற்றி பெற்ற மாணவரின் ஆதரவாளர்களும் கல்வீச்சு நடத்தி மோதிக் கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர். ஆனால் 2-ம் ஆண்டு பிகாம். மாணவி செவ்வந்தி மரணம் அடைந்ததால் விடுமுறை விடப்பட்டது. இதுதெரியாமல் 2 பஸ்களில் மாணவர்கள் கல்லூரி முன் வந்து இறங்கினார்கள். அவர்கள் தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அதே சமயம் கடற்கரை சர்வீஸ் சாலையில் திரண்டு இருந்த மாணவர்கள் பட்டாசு வெடித்த மாணவர்கள் மீது கல்வீசி தாக்கினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கல்லூரியில் இருந்து 3 கத்திகளையும் போலீசார் கைப்பற்றினர்.

இன்று காலையும் இருதரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர் ஒருவருக்கு கத்தி குத்து விழுந்தது. மேலும் 2 பேர் காயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மன அழுத்தத்தை போக்குவதற்கான வழிமுறைகள்


பொதி சுமக்கும் காளையின் மீதுதான் அதிக பாரம் ஏற்றப்படும் இது உலக இயல்பு. எதையும் எளிதாக செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தாலும் கூடுதல் பாரங்கள் மன அழுத்தத்தை வளர்த்துவிடும். எனவே எல்லோரையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாத காரியம் என்பதால், செய்ய முடியாதவற்றையும் செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காக மறுத்துச் சொல்வதே நல்லது.

மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்புகள். பற்களை இறுகக்கடித்து, காதுக்குக்கீழ் சுட்டுவிரலால் அழுத்திக் கொண்டு, நீளமாக மூச்சிழுப்பதும், வாயைத் திறந்தபடி காற்றை வெளியே விடுவதும், அழுத்தத்தின் சுவடுகளை உடலில் தங்காமல் வெளியேற்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கின்ற வழி.

ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு அதிகரிப்பதால் உங்கள் தசைகள் தளர்வுநிலை அடைகின்றன. மனம் இயல்புநிலை அடைகின்றது. அடிவயிற்றில் கையை லேசாக அழுத்திக்கொண்டு ஆழமாக சுவாசிப்பதன் மூலம் அடிவயிற்றின் அசைவுகளையும், உடலும் மனமும் தளர்வு நிலை அடைவதையும் கண்கூடாக உணரலாம்.

அமைதியான இடத்தில் அமர்ந்து கற்பனையாய் சிந்திப்பது பலனளிக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். பூப்பூவாய்த் தூவும் வென்னீர் ஷவரின் கீழ் கண்மூடி நிற்பது போலவும், அதில் அழுத்தங்களும் பதட்டங்களும் அடித்துக் கொண்டு போவது போலவும் மனதுக்குள் ஒரு காட்சியை வரைந்து பார்க்கச் சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். அடைந்துகிடக்கும் உணர்வுகளை விடுவிக்கும் சக்தி திறந்தவெளிக்கு இருக்கிறது. 

அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்ப்பது பயன்தரும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசையை கேளுங்கள் அல்லது வாய்விட்டுப் பாடுங்கள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக்கொள்வதை அது கட்டுப்படுத்தும். 

நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய்கள் போன்றவற்றை நுகர்வதன் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கிக் கொள்ளமுடியும். இரண்டு கைகளையும் பரபரவென்று தேய்த்து மூடிய கண்களுக்கு மேல் வைத்து, ஆழமாக சுவாசிக்கும்போதே அந்த உஷ்ணத்தையும் உள் வாங்குகிறபோது, புதிய உத்வேகம் உங்களுக்குள்ளேயே உருவாகும்.. வெறுப்பாக இருந்தால் வெந்நீர்க் குளியல் போடுங்கள். 

குளிக்கும் அளவு நிலைமையோ நேரமோ இல்லையென்றால் வெந்நீரில் கைகால்களையாவது கழுவுங்கள். இதம் செய்யும் ஆற்றல் வெந்நீருக்கு இருக்கிறது என்கிறார் அவர். வைட்டமின் பி, மற்றும் கால்ஷியம் போன்ற சத்துள்ள உணவுகளை உண்பவர்கள் எளிதாக மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

கார்போஹைட்ரேட் கொண்ட நொறுக்குத் தீனியை நொறுக்கினால் அதிலுள்ள செரிடானின் உங்கள் மனதை அமைதிப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்கத் தொடங்கிவிட்டால் கொஞ்சதூரம் நடந்துவருவது பயன்தரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். 

வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில் அலுவலகத்துக்குள் அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவாரணம் போன்றது. மனதில் தோன்றும் கவலைகள் எல்லா நேரமும் உங்களை அரித்தெடுப்பதை அனுமதிக்காதிருக்க வழி உண்டு. கவலைகள் என்னவென்று பார்க்க சில மணி நேரம் ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் கவலைகளை ஆராய்ந்து அவற்றை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். 

பதற்றமான சூழலில் நுணுக்கமான விஷயங்களை நோக்கிக் குவியாமல் மனம் அலைபாயத் தொடங்கும். அப்போதெல்லாம், ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் முழு கவனத்தை செலுத்துங்கள். உங்கள் மனம் இயல்பு நிலை அடைவதை உணர்வீர்கள். சோர்வு வரும்போது சுருண்டு படுக்கத்தான் மனது சொல்லும். 

முதுகுத்தண்டை நிமிர்த்தி நேராக, உட்காரும்போது இரத்த ஓட்டம் நன்கு நிகழ்ந்து உங்கள் சக்தியைப் பெருக்கும். மன அழுத்தம் மாறுவதற்கு வஜ்ராசனத்தில் அமருங்கள் என்று சொல்பவர்கள் நம் ஊர் யோகக்கலை வல்லுநர்கள் மட்டுமல்ல. வெளிநாட்டினரும் இதனை உறுதி படுத்துகின்றனர். 

குழந்தைபோல் மண்டியிட்டு கண்மூடி குதிகாலின் மீது சிறிது நேரம் அமருங்கள். அதுதான் வஜ்ராசனம். மெல்லக் குனிந்து முன் நெற்றியை நிலத்தில் பதியுங்கள். இதையே சில தடவைகள் செய்யுங்கள். மனமுருகும் பிரார்த்தனை, மன ஒருமை கொண்டு செய்யும் தியானம் இவையெல்லாம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிற வல்லமை கொண்டவை என்கின்றனர் மனநல மருத்துவர்கள்

புதன், 5 செப்டம்பர், 2012

ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள இந்தியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்


ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள இந்தியர்களுக்கு ஒரு ஓய்வூதிய திட்டத்தை இந்த மாத இறுதியில் இந்திய அரசு செயல் படுத்த உள்ளதாக துபாயில் வெளியாகும் தினசரி நாளிதழ் ஒன்றின்  தேசிய ரிப்போர்ட் கூறியுள்ளது.

"மகாத்மா காந்தி பிரவாசி சுரக்ஷா யோஜனா" என்று அழைக்கப்படும் இத்திட்டம் இந்தியாவின் வெளிநாடு வாழ் மக்களுக்கான முதல் பாதுகாப்பு திட்டமாகும் .இத்திட்டம் தொழிலாளர்களுக்கு உதவும் திட்டமாகவும் ஓய்வு ஊதிய திட்டமாகவும் அமையும் .ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஒருமில்லியன் இந்தியர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும் .அவர்கள்  Emigration Cheque Required (ECR ) பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் .

இந்த திட்டத்தில் சேருபவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வருடத்திற்கு குறைந்தது ரூ. 5000 செலுத்த வேண்டும் .இதனில் ,இந்திய அரசு ரூ.1900 கூடுதலாக சேர்த்துக் கொள்ளும் .இந்த ஒய்வூதிய திட்டத்திற்கான அலுவலகம் துபாயிலும் ,அபுதாபியிலும் ஒவ்வொரு அலுவலகம் திறக்கப்படும் .

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 54,870 பணியிடங்கள் காலியாக உள்ளது


தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இதனால் பழுது பணிகளும், மின் இணைப்பு பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்வாரியத்தில் மொத்த மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 2.10 கோடி. ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான புதிய இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. களப்பிரிவு, கணக்கீட்டுப் பிரிவு, வருவாய் பிரிவு, தொழில்நுட்ப பிரிவு என மொத்த பிரிவுகளிலும் சேர்த்து 90 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் 5 சதவீதம் பேர் ஓய்வு பெறுகிறார்கள்.

இதனால் புதிதாக மின் இணைப்பு பெற பல நாட்கள் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. உதிரிப் பொருட்கள் பற்றாக்குறையால், மின்பராமரிப்பு பணிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. மின்நிலையங்களில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.  பழுதுகளை சரிசெய்ய அலுவலகங்களுக்கு போன் செய்தாலும், எந்த பதிலும் இல்லை.
புதிய மின் இணைப்புகள் தருவதன் மூலம் மட்டுமே, மின்வாரியத்துக்கு வருவாய் அதிகரிக்கப்படுகிறது. அதற்கான பணிகளை செய்பவர்கள்தான் களப்பிரிவு ஊழியர்கள். நுகர்வோர் விண்ணப்பித்த ஓரிரு நாட்களிலேயே மின் இணைப்பு தரப்பட வேண்டும். ஆனால், ஊழியர்கள் பற்றாக்குறையால் ஒரு மாதம் வரை காலதாமதம் ஏற்படுகிறது.


களப்பிரிவு ஊழியர்களில் ஒயர்மேன், உதவியாளர்கள், வணிக ஆய்வாளர், மின்பாதை ஆய்வாளர்கள், போர்மேன் என 42,724 பணியிடங்கள் காலியாக உள்ளன. உதவியாளர் பணியிடங்கள் மட்டும் 15,000 காலியாக உள்ளன. அலுவலர் மற்றும் எழுத்தர் பிரிவில் 12,146 பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 54,870 பணியிடங்கள் காலியாக இருக்கிறது.

இது குறித்து மின்வாரிய சம்மேளன பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் கூறியதாவது: மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள ஊழியர்கள் பற்றாக்குறையால், மின்இணைப்பு, மின்பராமரிப்பு, மின்கட்டண கணக்கீடு, பண வசூல், மின்தடை நீக்கம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதிய மின்இணைப்பு கொடுக்கும் பணிகளும் தாமதமாகின்றன. அதிக பணி பளு காரணமாக, மின் ஊழியர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. காலி பணியிடங்களை நிரப்ப கோரி மின்வாரிய நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களுக்கு சில நூறு ஒப்பந்த ஊழியர்களை வைத்து கொண்டு மின்வாரிய பழுது பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இது போதாது. இறுதியில் பாதிப்பது மக்கள் தான். தமிழக அரசு 4,000 பேரை நியமிக்க உத்தரவிட்டது. இது போதாது. பணிகளை விரைவாக முடிக்கவும், ஊழியர்கள் பாதுகாப்பாக பணியாற்றவும், மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஏமாற்றி வந்த சாரல் மீண்டும் வந்ததால் குற்றாலத்தில் வெள்ளம்


குற்றாலத்தில் கடந்த ஒரு வார காலமாக சாரல் பெய்வதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இன்று காலை முதல் தென்காசி பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

மெயின் அருவியில் இன்று மதியம் முதல் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐந்தருவி உள்ளிட்ட மற்ற அருவிகளிலும் தண்ணீர் அதிக அளவில் விழுகிறது. அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.