Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

ஏமாற்றி வந்த சாரல் மீண்டும் வந்ததால் குற்றாலத்தில் வெள்ளம்


குற்றாலத்தில் கடந்த ஒரு வார காலமாக சாரல் பெய்வதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இன்று காலை முதல் தென்காசி பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

மெயின் அருவியில் இன்று மதியம் முதல் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐந்தருவி உள்ளிட்ட மற்ற அருவிகளிலும் தண்ணீர் அதிக அளவில் விழுகிறது. அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக