Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

பிரதமரின் உண்மையான கவலை


பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின சிறப்பு செய்தியில் கூறியிருப்பதாவது:-

கடந்த 8 ஆண்டுகளில் துவக்கப் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை அதிகரித்துள்ளது. மேலும் பாலின இடைவெளியும் குறைந்திருக்கிறது. சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், எஸ்சி, எஸ்டி சிறுபான்மைகளினர் இடைவெளி குறைந்துள்ளது.

எனினும், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கான கல்வி மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. எனவே அதற்கேற்ப பள்ளிகளின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும். மாணவர்களின் வருகையை கண்காணிக்க வெளிப்படையான நம்பகமான அமைப்பை உருவாக்க வேண்டும்.

2004-05 முதல் கல்விக்காக மத்திய அரசு அதிக நிதியை செலவு செய்து வருகிறது. கொள்கைகளை உருவாக்குதல், நிர்வாகம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.  

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக