Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

வாழ்க்கையின் அடுத்த கட்டம் எது ?

சமீபத்தில் சந்தித்த ஒரு வெற்றிகரமான பத்திரிக்கையாளர் சொன்ன கருத்து மிகவும் சிந்திக்க வைப்பது. வெற்றிகரமான பத்திரிக்கையாளராக இன்று வரை இருந்து வரும் அவர், விரைவில் பத்திரிக்கை தொழிலை விட்டு வேறு தொழிலுக்குச் செல்லப் போகிறேன் என்று கூறினார்.

ஏன் என்று கேட்டதற்கு, நான் பத்திரிக்கை தொழிலுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. தொடக்கத்தில் நான் பத்திரிக்கை தொழிலுக்கு வந்த போது, இந்தச் சமுதாயத்தையே மாற்றிப் போட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் வந்தேன். ஆனால் நாளடைவில் பத்திரிக்கை தொழிலில் இருந்து கொண்டு அது போல எதுவும் செய்ய முடியாது என்பது புரிந்து, ஏதோ நம்மால் இயன்றவற்றை செய்யலாம் என்று தான் இன்று வரை செயல்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.

ஆனால், இருபது ஆண்டுகளுக்கு முன்பாவது பத்திரிக்கையில் எழுதினால் ஏதாவது ஒரு தாக்கம் இருக்கும். நடவடிக்கை இருக்கும். ஆனால் இப்போது சூழல் மிக மோசமாக மாறி விட்டது. ஆதாரத்தோடு பத்திரிக்கையில் எழுதினால் கூட எதுவுமே நடக்க மாட்டேன்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால், ரோடு சரியில்லை, விவசாயிகள் பிரச்சினை, காவல்துறையிலும் மற்ற துறைகளிலும் ஊழல் என்று நான் எழுதியது இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்றும், சாலை சரியில்லை, ஊழல் என்றுதான் எழுத வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும் போது, நான் எதற்காக பத்திரிக்கை துறையில் தொடர்ந்து இருக்க வேண்டும் ? ஜனங்களே காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் நிலைக்கு சமுதாயம் சீரழிந்து விட்ட நிலையில் வேறு ஏதாவது நேர்மையான தொழில் செய்து பிழைக்கலாமே என்று அவர் கேட்ட கேள்வி, சவுக்கை சிந்திக்க வைத்தது.

இருபது ஆண்டுகளாக இந்திய ஜனநாயகம் பின்னோக்கித் தானே செல்கிறது ? இருபது ஆண்டுகளுக்கு முன்பு, உண்ணாவிரதம் இருக்கவும், ஊர்வலம் செல்லவும், ஆர்ப்பாட்டம் நடத்தவும் இருந்த உரிமைகள் கூட இன்று இல்லையே ?

ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது எழுந்த முந்த்ரா ஊழலால், டி.டி.கிருஷ்ணமாச்சாரி பதவி விலக நேரிட்டதே. ஒரே ஒரு ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினாரே.. …. ?

25 ஆண்டுகளுக்கு முன்பு கூட, சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டுக் கேட்கப் படுகிறது என்ற குற்றச் சாட்டுக்காக ராமகிருஷ்ண ஹெக்டே பதவி விலகினாரே ?

இன்று என்ன நிலை ? சட்ட விரோதமாக எதிர்க்கட்சியினர், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப் படுகின்றன என்று தொடர்ந்து குற்றச் சாட்டுகள் வந்த போதும் குறைந்த பட்சம் குற்றம் சாட்டப் பட்ட நபரை அந்தப் பதவியை விட்டு மாற்றுவதற்கு கூட கருணாநிதி தயாராக இல்லை. மாற்றுவதற்கு தயாராக இல்லாததால், இந்த சட்ட விரோத ஒட்டுக் கேட்பின் பின்னணியில் உள்ளது கருணாநிதி தானோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

ஊழலை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் ஊழல் பரவிக் கிடக்கிறது. ஊழல் புற்று நோயைப் போல, அனைத்து இடங்களிலும் புரையோடிப் போய் இருக்கிறது. ஆனால் இந்த ஊழலோடு சமரசம் செய்து கொண்டு, இந்த ஊழலில் நாம் எப்படி பங்கு பெறுவது என்ற ஆர்வத்தோடு உள்ளது நமது சமூகம். இப்படிப் பட்ட சமூகத்தில் என்ன மாற்றத்தை கொண்டு வர முடியும் ?

காந்தி படத்தில் ஒரு காட்சி வரும். தென் ஆப்பிரிக்காவில் காந்தி, வெள்ளையர் அல்லாதவர்களுக்காக வழங்கப் பட்ட அடையாள அட்டையை கொளுத்தும் போராட்டத்தை நடத்துவார். அந்த போராட்டத்தில் காந்தி கடுமையாக தாக்கப் படுவார். அதையொட்டி கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் படுவார்.

காந்தி தாக்கப் பட்டதையும், கைது செய்யப் பட்டதையும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை பெரிய அளவில் செய்தியாக வெளியிடும். இதைக் கண்ட தென்ஆப்பிரிக்க ஆங்கிலேய அரசாங்கம், உடனடியாக காந்தியையும் மற்றவர்களையும் விடுதலை செய்து உத்தரவிடும்.

இன்று ஊடகங்கள் இருக்கும் சூழலை எண்ணிப் பாருங்கள். எண்பது விழுக்காடு பத்திரிக்கைகள் முதல்வரின்  கட்டுப் பாட்டில் உள்ளன. இந்தச் சூழலில் கருணாநிதியை மீறி ஊடகங்களில் செய்தி எப்படி வெளி வரும் ? மீதம் உள்ள இருபது விழுக்காடு ஊடகங்கள் எதிர்க்கட்சி ஊடகங்களாக இருப்பதால் அதற்கான நம்பகத் தன்மை குறைவாக உள்ளது.

அதையும் மீறி ஏதாவது ஊடகத்தில் அரசுக்கு எதிரான செய்திகள் வருமானால், அதை எழுதிய செய்தியாளரைப் பற்றியும், அவர் சாதியைப் பற்றியும், விலாவரியாக ஆராய்ந்து, அவர்களுடைய நாளிதழிலேயே , படிக்கக் கூசும் அளவுக்கு, சிலந்தி, காராபூந்தி என்று ஏதாவது ஒரு பெயரில் எழுதுவது.

இதுதானே இன்றைய சூழல் ? இன்று சவுக்கு தளத்தில் வெளிவரும் குற்றச் சாட்டுகளை வெகுஜன ஊடகங்கள் வெளியிடத் தயாராக இருக்குமேயானால் சவுக்கு என்ற தளம் எதற்கு ?

அரசியல் சீரழிந்து விட்டது. ஊடகங்கள் தரம் தாழ்ந்து தங்களது சுதந்திர மன நிலையை இழந்து விட்டன. நம்பகத் தன்மையை இழந்து விட்டன. சரி நீதிமன்றத்திலாவது நியாயம் கிடைக்குமா என்றால், இது எல்லாவற்றையும் விட, மோசமான சூழலில் தான் நீதிமன்றம் இருக்கிறது.

தமிழில் பெயர் வைத்தால், வரி விலக்கு அளித்ததால் அரசுக்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளது, இதனால் மொழி வளரவில்லை என ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தால், அரசு எப்படி வேண்டுமானாலும் வரி விலக்கு வழங்கலாம் என்று தீர்ப்பு.

போலி என்கவுண்டரில் தொடர்ந்து படு கொலைகள் நடந்து வருகின்றன என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், வழக்கு நிலுவையில் இருக்கும் போதே தொடர்ந்து என்கவுண்டர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஐபிஎல் மார்ச் மாதத்தில் நடத்துவதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கும் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், இது குறித்து மத்திய அரசுக்கு புகார் அனுப்பவும் என்று தீர்ப்பு.
காவல் நிலையத்தில் காவல்துறையினரால் ஒரு நபர் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், அரசு நியமித்துள்ள ஆர்.டி.ஓ விசாரணையை நம்பி, பொது நல வழக்கை தள்ளுபடி செய்யும் உயர்நீதிமன்றம்.

அணு உலை நஷ்ட ஈடு மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப் படுத்துவதற்கு முன் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், அரசுக்கு நோட்டீஸ் கூட வழங்காமல் வழக்கை தள்ளுபடி செய்யும் சென்னை உயர்நீதிமன்றம்.

நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா இந்தியாவில் இருக்கும் போது அவனை கைது செய்ய வேண்டும் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், பத்திரமாக டக்ளஸ் இலங்கைக்கு திரும்பிச் செல்லும் வரை, வழக்கை தள்ளி வைத்து விட்டு, இலங்கை சென்றவுடன், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் ஒரு தலைமை நீதிபதி.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு  வண்டி தள்ளுபவர்கள் திடீரென்று ஒரே நாளில் 75 லட்ச ரூபாய் கட்டுகிறார்கள். அது ஊழல் செய்து சம்பாதித்த சொத்தாக இருக்கும் அதன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தால் விசாரணை இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், அவர்கள் மூன்று பேரும் அந்த மனையை “கை மாற்றி“ விட்டு விட்டதால் அவர்கள் மீது விசாரணை நடத்த எவ்வித முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பு கூறும் ஒரு நீதிபதி.

பள்ளிக் கட்டணத்தை சீரைமைக்க அமைக்கப் பட்ட கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்க தடை விதிக்கக் கோரி மெட்ரிக்குலேஷன் பள்ளி நிர்வாகங்கள் நீதிமன்றத்தை அணுகிய வழக்கில், மாணவர்கள் சார்பில் ஒரு பொது நல விரும்பி, அந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டி அணுகிய போது, கோவிந்தராஜன் கமிட்டி வருவதற்கு முன்பு எப்படி பீஸ் கட்டினீர்கள் என்று கேட்கும் ஒரு பொறுப்பற்ற நீதிபதி.

இந்தச் சூழலில் தான் நாம் இருக்கிறோம். நமக்கு முன்னே இப்போது இருப்பது ஒரு சில வழிகள் தான்.

ஒன்று எது நடந்தாலும் கவலைப் படாமல் அமைதியாக நமது வேலையைப் பார்த்துக் கொண்டு இருப்பது

இரண்டு, கொள்ளையடிப்பவர்களோடு சேர்ந்து கொண்டு நாமும் நமது பங்குக்கு கொள்ளையடிப்பது.

இந்த அநியாயங்களை காணச் சகியாமல், அஷோக் குமார் போல தற்கொலை செய்து கொள்வது.

அல்லது, எது வந்தாலும் சரி. நான் கொண்ட கொள்கையில் இருந்து பின் வாங்க மாட்டேன். அநியாயங்களை எதிர்த்து தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பேன் என்று போராடுவது.

இதில் எது வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

இன்றைய தாராளமய பொருளாதார சூழலில், எந்த வழியிலாவது உடனடியாக பணக்காரனாக வேண்டும், ஊரை அடித்து உலையில் போட்டாவது நான் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏறத்தாழ 98 சதவிகித மக்களின் மனநிலை உள்ள சூழலில் எழுதுவதையும், நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, தொடர்ந்து போராடுவதையும் தவிர வேறு என்னதான் செய்வது என்று சவுக்குக்கு தெரியவில்லை. சவுக்கின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லையா என்றும் தெரியவில்லை. நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
 
---சேயன்னா மூனா 

பி.எட். படிப்பில் சேர 11-ந் தேதி(நாளை) முதல் விண்ணப்பம்


தமிழ்நாட்டில் 2 கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்பட 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும், 650-க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் இருக்கின்றன. அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் 2095 பி.எட். இடங்களும், தனியார் கல்லூரிகளில் ஏறத்தாழ 65 ஆயிரம் சீட்டுகளும் உள்ளன.
அரசு மற்றும் உதவி கல்லூரிகளில் உள்ள இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொது கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்படும். தனியார் கல்லூரிகள் விருப்பப்பட்டு ஒப்படைக்கும் இடங்களையும் கவுன் சிலிங் மூலமாகவே நிரப்புகிறார்கள். வழக்கமாக பி.எட். மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு ஜுலை மாதம் வெளியிடப்பட்டு உடனடியாக விண்ணப்ப படிவங்களும் கொடுக்கப்பட்டுவிடும்.

ஆனால், இந்த ஆண்டு அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரும் பி.எட். படிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், பி.எட். மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டது.

இதற்கான விண்ணப்ப படிவம் 11-ந் தேதி (சனிக்கிழமை) முதல் 18-ந்தேதி வரை ஒரு வார காலம் வழங்கப்பட உள்ளது.
சென்னையில் திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும், சைதாப்பேட்டையில் உள்ள கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

மேலும், ஒரத்தநாடு, குமாரப்பாளையம், புதுக்கோட்டை, கோவை, வேலூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளிலும், உதவி பெறும் கல்லூரிகளான சேலம் பேர்லேண்ட்ஸ் ஸ்ரீ சாரதா, காந்திகிராமம் லட்சுமி, மதுரை தியாகராஜர், தூத்துக்குடி வ.உ.சி., பாளையங்கோட்டை இக்னேஷியஸ், திருவட்டாறு என்.வி.கே.எஸ்.டி. ஆகிய கல்வியியல் கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்ப கட்டணம் ரூ.300. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ.175 மட்டும். விண்ணப்ப கட்டணத்தை பணமாகவோ, டிமாண்ட் டிராப்டாகவோ (செயலாளர், தமிழ்நாடு பி.எட். அட்மிஷன், சென்னை-5 என்ற பெயரில்) மேற்கண்ட கல்லூரிகளில் சமர்ப்பித்து விண்ணப்பத்தை வாங்கலாம்.
எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் விண்ணப்பம் வாங்கச்செல்லும்போது தங்கள் அட்டஸ்டேஷன் செய்யப்பட்ட சாதி சான்றிதழ் நகலை எடுத்துச்செல்ல வேண்டும். சுதந்திர தினநாள் நீங்கலாக மற்ற அனைத்து நாட்களிலும் (சனி, ஞாயிறு உட்பட) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 18-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு முதல்முறையாக தனியார் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கமிட்டி இந்த கட்டணத்தை நிர்ணயம் செய்தது. அதன்படி, தனியார் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு கல்விக்கட்டணமாக ரூ.41,500-ம், தர அங்கீகாரம் பெற்றிருந்தால் ரூ.46,500-ம் வசூலித்துக்கொள்ளலாம்.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

மியான்மார் முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப் பட வேண்டும் :ஆங் சான் சூகி


மியன்மார் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கீ "சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிகாக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தித் தன்னுடைய கன்னி உரையை நிகழ்த்தினார்.
மியன்மாரின் 'மக்களாட்சிக்கான தேசிய லீக்' கட்சித் தலைவரும், 1991 ஆம் ஆண்டில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான சூகீ, இராணுவ அடக்குமுறை ஆட்சியாளர்களால் சுமார் 15 வருடகாலம் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.2010 நவம்பர் 13 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்ட சூ கீ, "மியன்மாரில் வாழும் நிராயுதபாணிகளான சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நாட்டில் சட்டமும் ஒழுங்கும் பேணப்பட வேண்டும்" என்று தனது முதலாவது நாடாளுமன்ற உரையில் வலியுறுத்திப் பேசியுள்ளார்.

"மியன்மாரில் உண்மையான ஜனநாயகம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின், நாட்டில் வாழும் சகல இன மக்கள் மத்தியிலும் சம உரிமை, பரஸ்பர நன்மதிப்பு என்பன கட்டியெழுப்பப்படவும், பாதுகாக்கப்படவும் வேண்டும். சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சமான அத்துமீறல் நடவடிக்கைகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அது தொடர்பான சட்டப் பிரேரணைகள் உருவாக்கப்படுவது தொடர்பில் நாடாளுமன்ற அங்கத்தவர்கள் அனைவரும் கலந்துரையாட முன்வர வேண்டும்" என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செயற்திறன் மிக்க வறுமையொழிப்பு நடவடிக்கைகள், இனங்களுக்கிடையிலான பரஸ்பர நல்லுறவு கட்டியெழுப்பப்படல், சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படல் முதலான பல்வேறு விடயங்கள் குறித்து அவர் தனது உரையில் வலியுறுத்திப் பேசியுள்ளார்.
"இரும்புத்திரை நாடு" என்று பெயர்பெற்ற மியன்மாரில் அண்மைக் காலமாக முஸ்லிம் சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள காட்டுமிராண்டித்தனமான படுகொலை நடவடிக்கைகள் தொடர்பில் உலகெங்கிலும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது தொடர்பில் தன்னுடைய முதலாவது நாடாளுமன்ற உரையிலேயே எதிர்கட்சித் தலைவி ஆங் சான் சூ கீ குரல் எழுப்பி இருக்கின்றமை ஒரு நல்ல திருப்பம் என அரசியல் அவதானிகள் கருத்துரைத்துள்ளனர்.


கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளையின் வேண்டுகோள்

ஏழை மாணவர்கள் கல்விக்காக செலவிடப்படும் என்று உறுதி கூறி ,உங்கள் ஜகாத்தை அளித்து ஏழை  மாணவர்கள் வாழ்வில் ஒழி ஏற்றிட கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாகத்தினர் வேண்டுகிறார்கள். நாமும் ,நம் ஜகாத்தை அளித்து அல்லாவின் பொருத்தத்தை பெறுவோமாக !

யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். - (அல்குர்ஆன் 2:277 )

கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளை


காமடி நடிகரின் கண்ணிய சேவை

காமெடி நடிகர் கஞ்சா கருப்புக்கு விரைவில் வெளிவர இருக்கும் கீரிப்புள்ள 50 வது படம். தற்போதும் பத்து படங்களை கையில் வைத்திருக்கிறார். இவருக்கும் சிவகங்கையைச் சேர்ந்த சங்கீதாவுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது கருப்பு&சங்கீதா தம்பதிகளுக்கு தருண் காந்தி என்ற ஒண்ணரை வயது மகன் இருக்கிறான். பிசியோதெரபி டாக்டரான சங்கீதாவுக்கு மருத்துவ சேவை செய்ய ஆசை. அதனால் மனைவிக்காக கஞ்சா கருப்பு மதுரை அருகே உள்ள மேலூரிலும், மதகுபட்டியிலும் மருத்துவமனை கட்டி வருகிறார். கைதேர்ந்த மருத்துவர்களை பணியில் அமர்த்தி இரண்டு மருத்துவமனைகளையும் சங்கீதா நிர்வகிக்க இருக்கிறார். இதில் ஒன்று ஏழைகளுக்காக குறைந்த கட்டண மருத்துவமனையாகவும், மற்றது உயர் தொழில்நுட்பங்களை கொண்ட சொகுசு மருத்துவமனையாகவும் உருவாக்க இருவரும் திட்டமிட்டிருக்கிறார்கள். இதுதவிர கஞ்சா கருப்புவும் சமூக சேவையில் இறங்கியிருக்கிறார். மணப்பாறையில் உள்ள சாந்தி வனம் என்ற அநாதை இல்லத்தில் வளரும் 13 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அநாதை இல்ல குழந்தைகளின் உணவுச் செலவையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். விரைவில் பள்ளிக்கூடம் கட்டும் திட்டம் ஒன்றையும் வைத்திருக்கிறார்.

புதன், 8 ஆகஸ்ட், 2012

தமிழக முஸ்லிம்களின் ஒரே நாளிதழுக்கு வெள்ளி விழா ஆண்டில் சர்வதேச அங்கீகாரம் !

துபையில் வருடந்தோறும் ரமலான் மாதத்தில் நடைபெற்று வரும் துபை சர்வதேச திருக்குர்ஆன் மாநாட்டினையொட்டி திருக்குர்ஆன் மனனப் போட்டி நடைபெற்று வருகிறது. 16 ஆவது ஆண்டாக நடைபெற்று வரும் இப்போட்டி கடந்த 27.07.2012 வெள்ளிக்கிழமை முதல் துபை சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்று வருகிறது.

மணிச்சுடருக்கு சர்வதேச அங்கீகாரம்
துபை சர்வதேச திருக்குர்ஆன் மாநாடு குறித்த செய்திகளை சிறப்புற வெளியிட்டு வரும் ஊடகங்களுக்கு மாநாட்டின் நிறைவு நாளுக்கு முன்னதாக விருது வழங்கி கௌரவிப்படுத்துவது வழக்கம். இவ்வாண்டு திருக்குர்ஆன் மனனப் போட்டி குறித்த செய்திகளை சிறப்புற வெளியிட்டு வரும் மணிச்சுடர் நாளிதழுக்கு விருது வழங்கப்பட்டது.

இவ்விருதினை மணிச்சுடர் நாளிதழின் இயக்குநர்களில் ஒருவரும், அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவருமான குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி அவர்களிடம் விருது வழங்கும் குழுவின் தலைவர் இப்ராஹிம் பு மெல்ஹா வழங்கினார்.

துபை சர்வதேச திருக்குர்ஆன் மாநாட்டுக் குழு மணிச்சுடர் நாளிதழுக்கு வழங்கிய விருதினைப் பெற்ற குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தெரிவித்ததாவது :

மணிச்சுடர் நாளிதழை சிராஜுல் மில்லத் மர்ஹும் அல்ஹாஜ் ஏ.கே. அப்துஸ் ஸமது சாஹிப் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கிலும் வாழ்ந்து வரும் தமிழக முஸ்லிம் சமுதாயம் சமுதாயச் செய்திகளை அறிந்து கொள்ள உதவும் வகையில் நாளிதழின் அவசியத்தை உணர்ந்து ’உண்மை சொல்வோம் நன்மை செய்வோம்’ எனும் கருத்தினை மையமாகக் கொண்டு துவக்கினார்.
சிராஜுல் மில்லத்தின் மறைவுக்குப் பின்னர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மணிச்சுடர் நாளிதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று சிறப்புற நடத்தி வருகிறார்.
மணிச்சுடர் நாளிதழின் வெள்ளி விழா ஆண்டாம் இருபத்தந்தாம் ஆண்டில் இவ்விருது கிடைத்துள்ளது இதன் சமுதாயப் பணிக்கு மட்டுமல்ல சர்வதேச அங்கீகாரமாகும் என்றார்.

இவ்விருதினை மணிச்சுடர் நாளிதழின் நிர்வாகத்திற்கும், நாளிதழ் வளர்ச்சியில் உறுதுணையாக இருந்து வரும் புரவலர்கள், விளம்பரதாரகள், செய்தியாளர்கள், ஏஜெண்டுகள் உள்ளிட்ட அனைவருக்கும் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
 
தகவல் :முதுவை ஹிதாயத் 

சுவர்க்கமும் நரகமும் செய்த தர்க்க வாதம்

சுவர்க்கமும் நரகமும் ஒரு முறை தர்க்கவாதத்தில்இறங்கின.
நரகம் நவின்றது: “உன்னத தலைவர்களும் பிரபல பிரமுகர்களும் வீற்றிருப்பது என்னிடம்தான்!”
தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களின் சமூக அந்தஸ்தைக் கண்டு அகங்கரித்து நரகம் இவ்வாறு சொன்னது. சக்கரவரத்திகளும், பிரபுக்களும், தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர்.
தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களை நோக்கியது சுவர்க்கம். அறிமுகமில்லாதவர்களும், ஊரில் இருக்கிற இடமே தெரியாதவர்களும், ஊரில் அவர்களைக் காணவில்லையென்றால் அவர்கள் எங்கே சென்றார்கள் என்று கேட்கப்படாதவர்களும், ஊரில் இருந்தால் கூட ஒரு நிகழ்ச்சிக்கும் அழைக்கப்படாதவர்களும்தான் சுவர்க்கத்தில் இருந்தனர்.
சுவர்க்கம் சொன்னது: “எனக்கு என்ன ஆனது? மக்களில் பலஹீனமானவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் தானே இங்கே இருக்கிறார்கள்!”
இந்த விவாதத்தில் அல்லாஹ் குறிக்கிட்டான்.
சுவர்க்கத்திடம் அல்லாஹ் கூறினான்:”நீ என்னுடைய கருணை! என்னுடைய அடிமைகளில் நான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உன் வழியாககருணை புரிவேன்.”
நரகத்திடம் அல்லாஹ் இவ்வாறு நவின்றான்: “நீ என்னுடைய தண்டனை! என்னுடைய அடிமைகளில் நான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உன் வழியாக நான் தண்டனை கொடுப்பேன்.”
வாழ்க்கையில் ஏற்படும் தோல்வியின் இறுதி உருவம்தான்  நரகம். அங்கீகாரமும், புகழும் தனக்கு உள்ளது என்ற எண்ணம், இருள் கொண்ட மனங்களில் திமிரையும் பெருமையையும் உண்டு பண்ணும். இத்தகைய தீய எண்ணங்கள் இறுதித் தோல்விக்கு ஒரு மனிதனை இழுத்துச் செல்லும் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நூஹ் நபி (அலை) அவர்களின் சமூகத்தில் பெரும்பாலோர் அவர்களை நிராகரித்தனர். அடித்தட்டு மக்களாகிய தொழிலாளிகள் சிலர் மட்டும்தான் அவர்களைப் பின்பற்றினர். இந்த நிலையைச் சுட்டிக்காட்டி நிராகரிப்பாளர்கள் நூஹ் நபியை கேலி செய்தனர். ஏகடியம் பேசி எக்களித்தனர். நாங்கள் உம்மை விசுவாசிக்கவா? தரம் தாழ்ந்த ஒரு சிலரல்லவா உம்மோடு இருக்கிறார்கள் என்று அவர்கள் நையாண்டி பேசினர்.
அவர்களைப் பார்த்து அமைதியாக நூஹ் நபி அவர்கள் கூறினார்கள்: “என்னை பின்பற்றுபவர்கள் என்ன தொழில் செய்கின்றார்கள் என்று பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவர்களது கணக்குகளை பார்க்க வேண்டியது அல்லாஹ் ஒருவன்தான். எனது பணி எத்தி வைப்பது ஒன்றே”
இது நூஹ் நபி (அலை) அவர்களுக்கு மட்டும் நேர்ந்த அனுபவமல்ல. விறகு வெட்டிகளும், துணி துவைப்பவர்களும் இன்னும் இது போன்ற தொழில் செய்பவர்களும் தான் ஈஸா (அலை) அவர்களிடம் சீடர்களாக இருந்தார்கள். மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த முஹாஜிர்களை இரண்டாவது குடிமக்களாக சித்தரிக்க முனைந்தார்கள் முனாஃபிக்குகள். அல்லாஹ் அவர்களது சூழ்ச்சிகளுக்கு பதிலடி கொடுத்தான்.
வாழ்க்கையின் யதார்த்தங்களை அனுபவித்தறிந்த சாதாரண மக்கள்தான் இறைவனின் கட்டளைகளை ஏற்று நன்மையின் முன்வரிசையில் நிற்பார்கள்.
--கே.எஸ்.அப்துல் காதர்
     சவூதி அரேபியா