Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 22 ஜூலை, 2013

திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை: மாணவ, மாணவியருக்கு அழைப்பு

தமிழக கல்லூரிக்கல்வி இயக்ககம் விடுத்துள்ள அறிக்கை: "மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால், திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

தமிழகத்தில், 2013, மார்ச்சில் வெளியான பிளஸ்2 மேல்நிலைப்பள்ளித் தேர்வு முடிவுகளில், 1200க்கு 955க்கு மேல், 80 சதவீத மதிப்பெண் பெற்ற கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெற்றோரின் ஆண்டு வருமானம், ஆறு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் வேறு எந்தவித கல்வி உதவித்தொகையையும் பெற்றிருக்க கூடாது. இத்திட்டத்தில், மத்திய அரசால் தமிழகத்துக்கு, 4,883 பேருக்கு கல்வித் தொகை வழங்கப்படுகிறது.

இதில் 50 சதவீதம் பெண்களுக்காகவும், மாநில அரசின் இன சுழற்சி முறை மற்றும் ஒவ்வொரு இனத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு, மூன்று சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும்.

விண்ணப்பிப்பவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு துவங்கி, கணக்கு எண், மாணவ, மாணவியரின் இமெயில் முகவரி, ஆதார் அடையாள அட்டை எண் மற்றும் மொபைல் எண் ஆகிய விபரங்களை வழங்க வேண்டும்.

மாணவ, மாணவியர் ஊனமுற்றவர்களாக இருப்பின் அதற்குரிய மருத்துவ சான்றிதழ் பெற்று, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்லூரி முதல்வர்கள் மூலம், ஆகஸ்ட் 30ம் தேதிக்குள், "இயக்குனர், கல்லூரிக்கல்வி இயக்ககம், ஈ.வெ.கி.சம்பத் மாளிகை, 6வது தளம், கல்லூரி சாலை, சென்னை-600006." என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ரயில் பய­ணத்தின் போது, பெண்கள் ஆடை அணி­வதில், கட்­டுப்­பாட்டை பின்­பற்­றினால், பிரச்னைகள் வராது’

பட்­டா­பி­ரா­மி­லி­ருந்து, சென்ட்ரல் ரயில் நிலை­யத்­திற்கு வந்த, புற­நகர் மின்­சார ரயிலில், நேற்று முன்­தினம் பயணம் செய்த, ஆந்­தி­ராவை சேர்ந்த நபர், பெண் பய­ணி­களை அலை­பே­சியில் ஆபாச படம் எடுத்­ததால், கைது செய்­யப்­பட்டார்.
சென்னை சென்ட்­ர­லி­ருந்து, டில்­லிக்கு, கடந்த 19ம் தேதி இயக்­கப்­பட்ட, ஜி.டி., விரைவு ரயிலில், ஆக்ரா அருகே, அதி­காலை நேரத்தில் ரயில் கொள்­ளை­யர்கள் புகுந்து, துப்­பாக்­கியை காட்டி, பய­ணி­களை மிரட்டி, பெண் பய­ணி­களின் நகை, பணம், பொருட்­களை கொள்­ளை­ய­டித்துச் சென்றனர்.


இந்த சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து, ரயில்­களில், பாது­காப்­பாக பயணம் செய்­வது தொடர்­பாக, பய­ணி­க­ளுக்­கான விழிப்­பு­ணர்வு முகாம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலை­யத்தில் நேற்று நடந்­தது.சென்ட்ரல் ரயில்வே போலீசார், ரயில் பய­ணத்தில் பய­ணி­க­ளுக்கு, பாது­காப்பு குறித்து, ஆலோ­சனை வழங்­கினர்.
ஆலோ­ச­னைகள் அச்­சி­டப்­பட்ட பிர­தி­களும் பய­ணி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன.
 

இது­கு­றித்து ரயில்வே போலீசார் கூறி­ய­தா­வது:
பய­ணத்தின் போது, அறி­மு­க­மில்­லாதோர் தரும், உணவு பண்­டங்­களை உண்ண கூடாது; தெரி­யாத நபர்­க­ளிடம் பேசு­வதை தவிர்க்க வேண்டும்.
பய­ணத்தின் போது, தங்க நகைகள் அணி­வதையும், ஜன்னல் ஓரம் தலை வைத்து படுப்பதையும் தவிர்க்க வேண்டும்.


இரவு நேரத்தில் ரயில் பெட்­டியின் ஜன்­னல்­களை மூடி­வைக்க வேண்டும். பய­ணத்தின் போது, பெண்கள் உடம்பு முழு­வதும் மூடும் வகையில், பாது­காப்­பான முறையில், ஆடைகள் அணி­வதில் கவனம் செலுத்த வேண்டும்.
இதனால், பெண்கள் கவன குறை­வாக இருக்கும் போதோ, துாங்கும் போதோ விஷ­மி­களால் ஏற்­படும் தொந்­த­ரவு தவிர்க்­கப்­படும்.

ஓராண்டை நிறைவு செய்யும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நாட்டின் முதல் குடிமகன் பொறுப்பில் அமர்ந்து, இம்மாதம், 25ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த காலகட்டத்தில், ராஷ்டிரபதி பவனை, பொதுமக்களின் பவனாக மாற்றியுள்ளார்; அதன் பழமை மற்றும் சிறப்பை மேம்படுத்தி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல பொறுப்புகளை வகித்த, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி, கடந்த ஆண்டு, 25ம் தேதி, ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதிபா பாட்டீல் பதவிகாலம் முடிவடைந்ததை அடுத்து, பிரணாப் அடுத்த ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.அவரின் இந்த ஓராண்டு சாதனைகளாக குறிப்பிடப்படும் அம்சங்களில், இரண்டு முக்கிய உத்தரவுகளை கூறலாம். மும்பை மீது தாக்குதல் நடத்திய, பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசப் மற்றும் பார்லிமென்ட் மீதான தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு ஆகியோரின் கருணை மனுக்களை நிராகரித்து, அவர்களுக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தந்ததை குறிப்பிடலாம்.அதற்கு அடுத்த படியாக, "தர்பார் ஹால்' சீரமைப்பை குறிப்பிடலாம். தலைநகர் டில்லியில், 320 ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படும் ராஷ்டிரபதி பவனின், 85 ஆண்டு பழமையான, பாரம்பரியம் மிக்க, "தர்பார் ஹால்' பராமரிப்பு இல்லாமல், சீரழிந்து காணப்பட்டதை, புனரமைத்து, அதன் பொலிவு மாறாமல் மேம்படுத்திய பெருமை, பிரணாப்புக்கே உரியது.

தர்பார் ஹால் ஒலி:
"தர்பார் ஹாலில்' பெரும்பாலும் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடப்பதில்லை; ஏனெனில், அதன் மாடம், 33 மீட்டர் உயரம் கொண்டது என்பதால், ஒலிபெருக்கிகள் தெளிவாக ஒலியை வழங்காமல், எதிரொலிக்கும். இந்தக் குறைபாட்டை, பிரணாப் உத்தரவின்படி, ஒலி வல்லுனர்கள் சரி செய்துள்ளனர்.அதுபோல், ராஷ்டிரபதி பவன் நூலகத்தையும் சீரமைத்து, அதில் இருந்த பழமையான பல புத்தகங்களை, பலரும் படிக்க ஏதுவாக ஒழுங்குபடுத்தி உள்ளனர்.ஜனாதிபதியை, "ஹிஸ் எக்சலன்சி' என, அழைப்பது தான், இதுவரை ராஷ்டிரபதி பவனில் பின்பற்றப்படும் மரபு; அதை பிரணாப் மாற்றியுள்ளார். பிரிட்டீஷ் கால மரியாதை தேவையில்லை என, கூறிவிட்டார். அது போல், ராஷ்டிரபதி பவன் பாதுகாப்பு கெடுபிடிகளும், பிரணாப் முகர்ஜியால் குறைக்கப்பட்டது.இதனால் பொதுமக்களும், சாதாரணமானவர்களும், எளிதாக நாட்டின் முதல் குடிமகனை சந்திக்க முடிகிறது.இதுபோல் பல சீர்திருத்தங்களை, ராஷ்டிரபதி பவனில் மேற்கொண்டு வரும் பிரணாப், ஜனாதிபதி பதவி வெறும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என்பதை நிரூபித்து வருகிறார். இந்த காலகட்டத்தில், 23 மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு, 36 கல்வி நிறுவனங்களின் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்று உள்ளார்.



நிதி ஆதார மாற்றம் புதிய முறை வேண்டும்: 

"மாநிலங்களுக்கு நிதி ஆதாரங்களை பகிர்ந்து வழங்குவதில், புதிய முறை பின்பற்ற வேண்டும்; ஏனெனில், பீகார் மட்டுமின்றி, நாட்டின் பல மாநிலங்களிலும், வறுமை, வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. உள்கட்டமைப்பில் ஏற்படும் பின்னடைவு, நாட்டின் வளர்ச்சிக்கு பாதகமாக அமைகிறது,'' என, பிரணாப் முகர்ஜி கூறினார்.பிரபல பொருளாதார மேதை, அமர்தியா சென் எழுதிய, பீகார் தொடர்பான புத்தகத்தை, நேற்று வெளியிட்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இவ்வாறு பேசினார்.

சனி, 20 ஜூலை, 2013

இந்திய புலனாய்வு அமைப்பில் வேலைவாய்ப்பு

 இந்திய புலனாய்வு அமைப்பில்(Intelligence Bureau) பட்டதாரிகளுக்கு(Any Graduate) 750 Assistant Central Intelligence Officers காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த பணிகளுக்கு அனைத்து பட்டதாரிகளுகும் விண்ணபிக்கலாம். இந்தியாவின் அதி முக்கியத்துவம் வாய்ந்த IB துறையில் இணைந்து சமூக விரோதிகளின் குற்ற செயல்களிலிருந்து நாட்டினை பாதுகாப்போம்.

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது? யார் விண்ணபிக்கலாம்? உள்ளிட்ட முக்கிய தகவல்கள் :

Location: All India

Name Of The Post:

Assistant Central Intelligence Officer 750 Posts

Qualification: Graduation or equivalent from a recognized University.

Pay: 9,300 – 34,800 plus Grade Pay 4,200/-

Age: 18-27 years,Upper age limit is relaxable by 5 years for SC/ST and by 3 years for OBC candidates. Upper age limit is also relaxable for Departmental Candidates with 3 years continuous service, upto 40 years and also certain other categories in accordance with the instructions or orders issued by Central Government from time to time.

Fee: Rs. 100/- (Rupees Hundred only). Only male candidates belonging to General and OBC category are required to pay the fee.
All SC/ST and female candidates are exempted from payment of examination fee.

How To Apply: Applications should be submitted only through ON-LINE registration by logging on to the website www.mha.nic.in. Applications will not be accepted through any other mode. Wrong information in any column may lead to the application getting rejected
altogether.

Last Date: 12-08-2013

More Details
http://mha.nic.in/pdfs/DtlAwdtz-ACIO-II-130713.pdf

Apply Online
http://www.mha.nic.in/

வெள்ளி, 19 ஜூலை, 2013

அரசு மருத்துவமனைக்கு வெளியே "வீசப்படும்" நோயாளிகள் பஸ் ஸ்டாப், ரோட்டில் கிடக்கும் அவலம்

மதுரை அரசு மருத்துவமனை வார்டுகளில் கவனிப்பாரற்று கிடப்பவர்களை, ரோட்டில் வீசும் கொடுமை தொடர்கிறது. இங்கு சிகிச்சைக்காக வயதானவர்களை அழைத்து வருபவர்கள், அப்படியே விட்டுச் செல்கின்றனர். ஆதரவற்ற முதியவர்களை பராமரிப்பது கடினம் என்பதால், இரவு நேரங்களில் அவர்களை வார்டிலிருந்து ஊழியர்கள் வலுகட்டாயமாக வெளியேற்றி, பஸ் ஸ்டாப்பில் விட்டுச் செல்கின்றனர். அல்லது, வேறு ஏதாவது வார்டுக்கு அருகில் கொண்டு வந்து படுக்க வைக்கின்றனர். அந்த நோயாளி இறந்தால் கூட, "ஆதரவற்றோர்' என்ற பெயரில் தான் மார்ச்சுவரியில் உடல் வைக்கப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பதற்கான ஆதாரங்களை கூட தருவதில்லை.

மூன்று நாட்களுக்கு முன், ஈரோடு கரந்தபாளையம் வீரா,45 என்பவரை வார்டிலிருந்து வெளியேற்றினர். நெஞ்சுக்கூடு வெளியே தெரியும் வகையில், காசநோயாளி போலிருக்கும் அவர், மருத்துவமனைக்கு எதிரில் உள்ள சாக்கடையில் கிடந்தார். தகவல் அறிந்த போலீசார், அவரை மீட்டு மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் பஸ் ஸ்டாப்பில் வீரா கிடந்தார். சோறு, தண்ணீர் இன்றி உதடுகள் உலர்ந்த நிலையில், தண்ணீருக்காக "தவித்துக்' கொண்டிருந்தார். செஞ்சுருள் சங்கத்தினருக்கு தகவல் கொடுத்தபின், மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

இதேபோல, சித்த மருத்துவ வார்டு அருகில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 60 வயது மூதாட்டி மயங்கி கிடந்தார். இப்படி மருத்துவமனையைச் சுற்றி வயதானவர்கள் ஆங்காங்கே முடங்கி கிடப்பது, பரிதாபமாக இருக்கிறது. ஆதரவற்றவர்களுக்கு மருத்துவமனை வளாகத்தில் தனியிடம் ஒதுக்கி, செஞ்சுருள் சங்கத்தின் மூலம் பராமரிக்க, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

சைக்கோதெரபி படிப்பு

உளவியலின் முக்கியப் பிரிவுகளில் ஒன்று சைக்கோதெரபி. உளவியல் ரீதியான மற்றும் உணர்வு ரீதியான பிரச்னைகளைப் பெற்றிருப்பவருக்கு இத்துறை தான் உதவுகிறது. இதன் உதவியோடு இப்பிரச்னைகளைப் பெற்றிருப்பவர் தங்களது மனப்பாங்கையும் சிந்தனைகளையும் மாற்றிக் கொள்ள முடிகிறது. நடத்தை முறைகளையும் இது மாற்றி ஒருவரை சாதாரணமான நபராக மாற்றவும் இது உதவுகிறது. நமது சிந்திக்கும் முறைகளை சைக்கோதெரபிஸ்டுகள் மாற்றுகிறார்கள்.

சைக்காலஜி என்னும் உளவியலில் பட்டப்படிப்பை முடித்திருப்பவர் பட்ட மேற்படிப்பில் உளவியலின் இந்த சிறப்புப் பிரிவைப் படிக்கலாம். உளவியல் பட்ட மேற்படிப்பு முடித்தபின்னும் இதைப் படிக்கலாம். சைக்கியாட்ரிஸ்டுகள் கட்டாயம் எம்.பி.பி.எஸ். முடித்த டாக்டர்களாக இருக்க வேண்டும். ஆனால் சைக்கோதெரபிஸ்டுகள் உளவியல் படித்தவராக இருந்தால் போதும். இதில் கிளினிகல் சைக்காலஜி, இன்டஸ்ட்ரியல் சைக்காலஜி போன்ற படிப்புப் பிரிவுகள் உள்ளன. இது போக ஆர்ட்ஸ் சைக்கோதெரபி என்னும் பிரிவும் உள்ளது. இது கிராபிக்ஸ் போன்ற வடிவங்களின் ரூபத்தில் பிரச்னைகளை கையாளுவதாகும்.

அடுத்தவர் மேல் பரிவுச் சிந்தனை இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல துறையாக அமையும். இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் சைக்கோதெரபிஸ்டுகள் நமக்கு அண்மையில் இருப்பதை பலர் விரும்புகிறார்கள் என்பதை இங்கே கட்டாயம் குறிப்பிட வேண்டும். அவ்வளவு தேவை இருக்கிறது சைக்கோதெரபிஸ்டுகளுக்கு. மும்பை பல்கலைக்கழகம், நிம்ஹான்ஸ் (பெங்களூரு) மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இது தொடர்பான படிப்புகள் தரப்படுகின்றன. 

பள்ளிக்கல்வி துறையில் விரைவில் 1,800 பேர் பணி நியமனம்


பள்ளி கல்வித் துறையில், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களில், 1,800 பேர், விரைவில், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

கல்வித் துறையில், பணியின் போது மரணம் அடைந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு, படிப்படியாக, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. 2001 வரை விண்ணப்பித்த, 400க்கும் மேற்பட்டோருக்கு, ஏற்கனவே, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது, 2009 வரை காத்திருக்கும், 500 பேருக்கு, விரைவில் வேலைவாய்ப்பு வழங்க, பள்ளி கல்வித்துறை, நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக, விண்ணப்ப சரிபார்ப்பு பணி, மாவட்ட கல்வி அலுவலகங்களில் நடந்து வருகிறது.

"தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர், சரிபார்ப்பு பட்டியலில், தங்களின் பெயர் இருக்கிறதா என்பதை, மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம், உறுதி செய்து கொள்ளலாம்" என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், ஆக., 25ம் தேதி நடக்கும் "குரூப்-4" தேர்வு மூலம், பள்ளி கல்வித்துறைக்கு, 1,300 இடங்கள் ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.