Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 22 ஜூலை, 2013

ஓராண்டை நிறைவு செய்யும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நாட்டின் முதல் குடிமகன் பொறுப்பில் அமர்ந்து, இம்மாதம், 25ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த காலகட்டத்தில், ராஷ்டிரபதி பவனை, பொதுமக்களின் பவனாக மாற்றியுள்ளார்; அதன் பழமை மற்றும் சிறப்பை மேம்படுத்தி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல பொறுப்புகளை வகித்த, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி, கடந்த ஆண்டு, 25ம் தேதி, ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதிபா பாட்டீல் பதவிகாலம் முடிவடைந்ததை அடுத்து, பிரணாப் அடுத்த ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.அவரின் இந்த ஓராண்டு சாதனைகளாக குறிப்பிடப்படும் அம்சங்களில், இரண்டு முக்கிய உத்தரவுகளை கூறலாம். மும்பை மீது தாக்குதல் நடத்திய, பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசப் மற்றும் பார்லிமென்ட் மீதான தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு ஆகியோரின் கருணை மனுக்களை நிராகரித்து, அவர்களுக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தந்ததை குறிப்பிடலாம்.அதற்கு அடுத்த படியாக, "தர்பார் ஹால்' சீரமைப்பை குறிப்பிடலாம். தலைநகர் டில்லியில், 320 ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படும் ராஷ்டிரபதி பவனின், 85 ஆண்டு பழமையான, பாரம்பரியம் மிக்க, "தர்பார் ஹால்' பராமரிப்பு இல்லாமல், சீரழிந்து காணப்பட்டதை, புனரமைத்து, அதன் பொலிவு மாறாமல் மேம்படுத்திய பெருமை, பிரணாப்புக்கே உரியது.

தர்பார் ஹால் ஒலி:
"தர்பார் ஹாலில்' பெரும்பாலும் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடப்பதில்லை; ஏனெனில், அதன் மாடம், 33 மீட்டர் உயரம் கொண்டது என்பதால், ஒலிபெருக்கிகள் தெளிவாக ஒலியை வழங்காமல், எதிரொலிக்கும். இந்தக் குறைபாட்டை, பிரணாப் உத்தரவின்படி, ஒலி வல்லுனர்கள் சரி செய்துள்ளனர்.அதுபோல், ராஷ்டிரபதி பவன் நூலகத்தையும் சீரமைத்து, அதில் இருந்த பழமையான பல புத்தகங்களை, பலரும் படிக்க ஏதுவாக ஒழுங்குபடுத்தி உள்ளனர்.ஜனாதிபதியை, "ஹிஸ் எக்சலன்சி' என, அழைப்பது தான், இதுவரை ராஷ்டிரபதி பவனில் பின்பற்றப்படும் மரபு; அதை பிரணாப் மாற்றியுள்ளார். பிரிட்டீஷ் கால மரியாதை தேவையில்லை என, கூறிவிட்டார். அது போல், ராஷ்டிரபதி பவன் பாதுகாப்பு கெடுபிடிகளும், பிரணாப் முகர்ஜியால் குறைக்கப்பட்டது.இதனால் பொதுமக்களும், சாதாரணமானவர்களும், எளிதாக நாட்டின் முதல் குடிமகனை சந்திக்க முடிகிறது.இதுபோல் பல சீர்திருத்தங்களை, ராஷ்டிரபதி பவனில் மேற்கொண்டு வரும் பிரணாப், ஜனாதிபதி பதவி வெறும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என்பதை நிரூபித்து வருகிறார். இந்த காலகட்டத்தில், 23 மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு, 36 கல்வி நிறுவனங்களின் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்று உள்ளார்.



நிதி ஆதார மாற்றம் புதிய முறை வேண்டும்: 

"மாநிலங்களுக்கு நிதி ஆதாரங்களை பகிர்ந்து வழங்குவதில், புதிய முறை பின்பற்ற வேண்டும்; ஏனெனில், பீகார் மட்டுமின்றி, நாட்டின் பல மாநிலங்களிலும், வறுமை, வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. உள்கட்டமைப்பில் ஏற்படும் பின்னடைவு, நாட்டின் வளர்ச்சிக்கு பாதகமாக அமைகிறது,'' என, பிரணாப் முகர்ஜி கூறினார்.பிரபல பொருளாதார மேதை, அமர்தியா சென் எழுதிய, பீகார் தொடர்பான புத்தகத்தை, நேற்று வெளியிட்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இவ்வாறு பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக