Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 22 ஜூலை, 2013

'ரயில் பய­ணத்தின் போது, பெண்கள் ஆடை அணி­வதில், கட்­டுப்­பாட்டை பின்­பற்­றினால், பிரச்னைகள் வராது’

பட்­டா­பி­ரா­மி­லி­ருந்து, சென்ட்ரல் ரயில் நிலை­யத்­திற்கு வந்த, புற­நகர் மின்­சார ரயிலில், நேற்று முன்­தினம் பயணம் செய்த, ஆந்­தி­ராவை சேர்ந்த நபர், பெண் பய­ணி­களை அலை­பே­சியில் ஆபாச படம் எடுத்­ததால், கைது செய்­யப்­பட்டார்.
சென்னை சென்ட்­ர­லி­ருந்து, டில்­லிக்கு, கடந்த 19ம் தேதி இயக்­கப்­பட்ட, ஜி.டி., விரைவு ரயிலில், ஆக்ரா அருகே, அதி­காலை நேரத்தில் ரயில் கொள்­ளை­யர்கள் புகுந்து, துப்­பாக்­கியை காட்டி, பய­ணி­களை மிரட்டி, பெண் பய­ணி­களின் நகை, பணம், பொருட்­களை கொள்­ளை­ய­டித்துச் சென்றனர்.


இந்த சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து, ரயில்­களில், பாது­காப்­பாக பயணம் செய்­வது தொடர்­பாக, பய­ணி­க­ளுக்­கான விழிப்­பு­ணர்வு முகாம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலை­யத்தில் நேற்று நடந்­தது.சென்ட்ரல் ரயில்வே போலீசார், ரயில் பய­ணத்தில் பய­ணி­க­ளுக்கு, பாது­காப்பு குறித்து, ஆலோ­சனை வழங்­கினர்.
ஆலோ­ச­னைகள் அச்­சி­டப்­பட்ட பிர­தி­களும் பய­ணி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன.
 

இது­கு­றித்து ரயில்வே போலீசார் கூறி­ய­தா­வது:
பய­ணத்தின் போது, அறி­மு­க­மில்­லாதோர் தரும், உணவு பண்­டங்­களை உண்ண கூடாது; தெரி­யாத நபர்­க­ளிடம் பேசு­வதை தவிர்க்க வேண்டும்.
பய­ணத்தின் போது, தங்க நகைகள் அணி­வதையும், ஜன்னல் ஓரம் தலை வைத்து படுப்பதையும் தவிர்க்க வேண்டும்.


இரவு நேரத்தில் ரயில் பெட்­டியின் ஜன்­னல்­களை மூடி­வைக்க வேண்டும். பய­ணத்தின் போது, பெண்கள் உடம்பு முழு­வதும் மூடும் வகையில், பாது­காப்­பான முறையில், ஆடைகள் அணி­வதில் கவனம் செலுத்த வேண்டும்.
இதனால், பெண்கள் கவன குறை­வாக இருக்கும் போதோ, துாங்கும் போதோ விஷ­மி­களால் ஏற்­படும் தொந்­த­ரவு தவிர்க்­கப்­படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக