Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 13 ஜூன், 2013

காமராஜர் பல்கலை தொலைநிலைக் கல்வியில் 174 படிப்புகள்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் 174 புதிய பாடத்திட்டங்கள் ஜுலை ஒன்றாம் தேதி முதல் துவங்கப்படும் என்று துணை வேந்தர் கல்யாணி மதிவாணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது, மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியின் வழியில் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களல் தொலைதூரக் கல்வி மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்த மையங்களை மேம்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக பல்கலைக்கழக உயர்மட்டக் குழு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இது நல்ல முறையில் செயல்படும் மையங்கள் தொடர்ந்து செயல்படவும், மற்ற மையங்களை மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுவாக பல்கலைக்கழகத்தின் நிதி ஆதாரத்துக்கு தொலைநிலைக் கல்வி இயக்ககம் தான் முதுகெலும்பு. இந்த இயக்ககத்தை திறம்பட செயல்படுத்தி தரமான கல்வியின் மூலம் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் வருவாயை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும்.

உலகத் தரத்தில் மதுரை பல்கலைக்கழக மாணவர்களின் பாடத்திட்டங்கள் அமையும் வகையில் நிபுணத்துவம் கொண்ட பேராசிரியரிகள் கொண்ட குழு மூலம் 174 புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த பாடத்திட்டங்களுக்கு பல்கலைக்கழக ஆட்சிக்குழு, ஆட்சி மன்றக் குழு ஆகியவை ஒப்புதல்  அளித்துள்ன. இதன்படி, ஜூலை 1ம் தேதி முதல் இந்த புதிய பாடத்திட்டங்கள் தொலைநிலைக் கல்வியில் துவங்கப்படும். இதன் மூலம் மதுரை பல்கலைக்கழகத்தில் தொலைநிலையில் கல்வியில் பயிலும் 1 லட்சம் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றார்.

செவ்வாய், 11 ஜூன், 2013

எம்.எல்.ஏ.,வும் போச்சு; எம்.பி.,யும் போச்சு: பாண்டியன் தலைமையில் இந்திய கம்யூ.,அவலநிலை

ராஜ்யசபா தேர்தலில், ஐந்து இடங்களில் அ.தி.மு.க., போட்டியிடும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பால், தேர்தல் களத்திலிருந்து இந்திய கம்யூ., கட்சி வெளியேற்றப்பட்டு உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில், ஒரு எம்.எல்.ஏ., ஒரு எம்.பி., இடங்களை, அ.தி.மு.க.,விடம், பாண்டியன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் இழந்துள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

புதுக்கோட்டை எம்.எல்.ஏ.,வாக இருந்த முத்துக்குமரன் சாலை விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு, இடைத் தேர்தல் நடந்தது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மீண்டும் வாய்ப்புத் தராமல், கூட்டணிக்கு தலைமை வகிக்கும், அ.தி.மு.க., வேட்பாளரை நிறுத்தி வெற்றியும் பெற்றது. ராஜ்யசாபாவில் பதவி முடிவுக்கு வரும், ஆறு எம்.பி.,க்களில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜாவும் ஒருவர். அந்த இடத்தைத் தக்க வைக்கவேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில் விரும்பினர். ஆனால், அந்த இடத்தில் அ.தி.மு.க., வேட்பாளரை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால், ராஜ்யசபா தேர்தலில், இந்திய கம்யூ., கட்சிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

ராஜ்யசபா தேர்தல்:
ராஜ்யசபா தேர்தலில் காலியாகும் 6 எம்.பி., இடங்களில், 5 இடங்களை வெற்றிபெற அ.தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது. இதில், 4 இடங்களை தன்னிச்சையாகவும், ஒரு இடத்தை கூட்டணிக் கட்சிகளோடும் வெல்ல முடியும். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் வெல்லும் இடத்தை, இந்திய கம்யூ., கட்சிக்கு அளிக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில், இந்திய கம்யூ., கட்சியில், யார் போட்டியிடுவது என்பதும் விவாதத்துக்கு உள்ளானது. எம்.பி., பதவிக் காலம் முடியும், தேசிய செயலர் டி.ராஜாவை மீண்டும் எம்.பி.,யாக்க வேண்டும் என, ஒரு பிரிவினரும், மாநில செயலர் தா.பாண்டியனை எம்.பி.,யாக்க வேண்டும் என, மற்றொரு பிரிவினரும் வலியுறுத்தியதால், வேட்பாளரை முடிவு செய்வதில் பெரும் பின்னடைவு, கட்சியில் ஏற்பட்டது. அ.தி.மு.க.,வின் ஆதரவைப் பெற்ற பின், வேட்பாளரை முடிவு செய்யலாம் என, முடிவு செய்து, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க, கட்சியின் மூத்த தலைவர் பரதன், சுதாகர் ரெட்டி ஆகியோர், சென்னையில் முகாமிட்டனர். ஆனால், இவர்களது சந்திப்பு நடக்கவில்லை . ஆனால், 5 எம்.பி., இடங்களிலும், அ.தி.மு.க.,வே போட்டியிடும் என்ற அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை வெளியிட்டார்.

யாருக்கு ஆதரவு:
இதுகுறித்து, இந்திய கம்யூ., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: எங்களிடம், ராஜ்யசபா எம்.பி., தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ., பலம் இல்லை. கூட்டணிக் கட்சியின் ஆதரவுடன் தான் போட்டியிட முடியும். கூடுதல் எம்.எல்.ஏ.,க்களை வைத்திருக்கும் அ.தி.மு.க., தானே போட்டியிடுவதாக முடிவு செய்துவிட்டது. இதில், வேறு எந்தக் கருத்தையும் கூறுவதற்கில்லை. எங்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்காத நிலையில், அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டளிப்பதா என்பதை, கட்சி தான் முடிவு செய்யும். அதற்கு, இன்னும் கால அவகாசம் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

ரேடியோ பிரீக்வென்சி இன்ஜினியர் படிப்பு

வயர்லெஸ் சாதனங்களான மொபைல் போன், ரேடியோ போன்றவற்றை பயன்படுத்த தேவையான சமிக்ஞைகளை (சிக்னல்கள்) உருவாக்கும் நவீன தொழில்நுட்ப கருவிகளை கையாள்பவர்களே ரேடியோ பிரீக்வென்சி இன்ஜினியர்கள். சுருக்கமாக "ஆர்.எப். இன்ஜினியர்கள்" என்று அழைப்படுகிறார்கள்.

நவீன தகவல் தொழில்நுட்பங்களான ஜி.எஸ்.எம்., (குளோபல் சிஸ்டம் பார் மொபைல் கம்யூனிகேசன்), சமிக்ஞைகளை பெற மற்றும் அனுப்ப உதவும் பல்வேறு வகையான ஆன்டனாக்கள் போன்றவற்றை பற்றிய தொழில்நுட்பங்களை ஆர்.எப். இன்ஜினியர்களுக்கு நன்கு தெரியும்.

இது தவிர அதிக திறன் வாய்ந்த டிரான்ஸ்மிட்டர்கள், வயர்லெஸ் கருவிகள் போன்றவற்றின் தொழில்நுட்பங்களை பற்றி இவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள்.

தேவையான தகுதிகள்
பிளஸ்2 வில் இயற்பியல் பாடத்தை எடுத்து படித்திருப்பது இத்துறைக்கு தேவையான அடிப்படை தகுதியாக கருதப்படுகிறது. பி.இ., எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்தவர்களும் ஆர்.எப் இன்ஜினியர்களாக ஆக முடியும். ரேடியோ ப்ரீக்வென்சி சார்ந்த இளநிலை, முதுநிலை, பிஎச்.டி., மற்றும் டிப்ளமோ படிப்புகளை இந்தியாவிலேயே படிக்கலாம். சான்றிதழ் படிப்புகளாகவும் இவை கற்றுத்தரப்படுகின்றது.

பல்வேறு தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்புடன் சேர்ந்த பயிற்சியாக இவற்றை வழங்குகின்றன.

வேலைவாய்ப்பு
பெருகி வரும் மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள், எப்.எம் வானொலி நிலையங்கள் ஆகியவற்றில் ஆர்.எப் இன்ஜினியர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் இந்தியாவிலேயே உள்ளது. வெளிநாடு களிலும் இவர்களுக்கு நல்ல மவுசு உள்ளது.

கல்வி நிறுவனங்கள்
* ஐ.ஐ.டி., காரக்பூர்
* ஐ.ஐ.டி., கவுகாத்தி
* மும்பை பல்கலைக்கழகம், மும்பை
* வித்ய விகாஸ் இன்ஸ்டிடியூட், மைசூர்
* பி.என்., கல்லூரி, லக்னோ
* பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
* அம்பேத்கர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, டில்லி
* டில்லி பல்கலைக்கழகம், புதுடில்லி

கடையநல்லூர் சேயன் டிரேடர்ஸ் இல்லத் திருமணம்


திங்கள், 10 ஜூன், 2013

மனித உரிமைகள் தொடர்பான படிப்பு

மனித உரிமைகள் என்பது வேகமாக வளர்ந்து வரும் கல்விப் பிரிவாகவும் மாறியுள்ளது. இப்பிரிவு படிப்புகளை முடிப்பவர் நல்ல பணி வாய்ப்புகளைப் பெற முடிகிறது. வெறும் தகுதிகளைத் தாண்டி சிறப்பான தகவல் தொடர்புத் திறன் மற்றும் மேம்பட்ட பொது அறிவைப் பெற்றிருப்போர் இத் துறையில் சிறப்பான சம்பளத்தையும் எதிர்காலத்தையும் பெறுகிறார்கள்.

எனவே மனித உரிமைகள் தொடர்பான படிப்புகளுக்கு பெரிய வரவேற்பு இருப்பதில் சந்தேகமில்லை. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் ரைட்ஸ் என்னும் சிறப்பு நிறுவனம் தொலைதூரக் கல்வி முறையில் இப் பிரிவில் 2 ஆண்டுபட்ட மேற்படிப்பைத் தருகிறது. பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்கும் எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய பிற விபரங்களை அறிய இணைய தள முகவரி: http://www.rightsedu.net. இப்படிப்புக்கான தேர்வுகள் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே நடத்தப்படும். நமக்கு அண்மையில் பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலும் இது நடத்தப்படும்.

விண்ணப்பம் பெறும் முகவரி
Indian Institute of Human Rights,
A16, Paryavaran Complex, (HT), SaketMaidangarhi Marg,
New Delhi – 110 030.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலார் அணை நீர்மட்டம் உயர்வு

பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் சுமார் 5 அடியும், சேர்வலார் அணையின் நீர்மட்டம் சுமார் 16 அடியும் அதிகரித்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 53.35 அடியாக இருந்தது.

இந்நிலையில் காரையார் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் சுமார் 5 அடி அதிகரித்து நேற்று காலை நிலவரப்படி 58.80 அடியானது. அணைக்கு விநாடிக்கு 3609.60 கனஅடிநீர் வந்து கொண்டிருந்தது. அணைப்பகுதியில் 27 மி.மீ. கீழணையில் 11 மி.மீ. அளவிலும், சேர்வலாரில் 9 மி.மீ, அம்பையில் 13.2 மி.மீ, சேரை., 6 மி.மீ. அளவில் மழையின் அளவு பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் 65.12 அடியாக இருந்த சேர்வலார் அணையின் நீர்மட்டம் நேற்று சுமார் 16 அடி அதிகரித்து 81.04 அடியானது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 72.04 அடியானது. இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்துறை வாய்ப்புகளுக்கான மேம்பட்ட படிப்புகள்

எதிர்கால உலகில், பெரியளவில் வளர்ச்சியடையக்கூடிய சில துறைகளைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம். அதன்மூலம் நமது வருங்கால வாய்ப்புகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

கோஸ்டல் இன்ஜினியரிங் படிப்பு
அரசு ஏஜென்சிகள், உள்ளூர் அத்தாரிட்டிகள் மற்றும் பொறியியல் கன்சல்டன்டுகள் ஆகியோரிடம், கோஸ்டல் இன்ஜினியரிங் பணியை மேற்கொள்ள விரும்பும் பொறியாளர்கள் அல்லது பிசிகல் சயின்டிஸ்டுகள் ஆகியோருக்காக இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது.

சமூக மற்றும் பொருளாதார நலன்களை முன்னிட்டு, உலகின் கடற்கரைகளை பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை செய்தல் போன்ற செயல்பாடுகளுடன் சம்பந்தப்பட்டது இந்த கோஸ்டல் இன்ஜினியரிங். இதுதொடர்பாக செயல்படும் நிறுவனங்களில் பணிவாய்ப்பு மற்றும் பணி உயர்வை எதிர்பார்க்கும் பட்டதாரி விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கென்று, கோஸ்டல் இன்ஜினியரிங் துறையில் வழங்கப்படும் முதுநிலை படிப்புகள் துணைபுரிகின்றன.

அந்தப் பாடத்திட்டமானது, Wave theory, Coastal processes and modern techniques in coastal data collection, analysis such as GIS and remote sensing, numerical modelling techniques, issues of environmental law and the applications of current coastal defence guidelines போன்ற அம்சங்களை உள்ளடக்கியது.

வேளாண் அறிவியல்கள்
வேளாண்மை என்பது மனிதனின் உயிர்வாழ் அடிப்படையான உணவு உற்பத்தி தொடர்பானது மட்டுமின்றி, அவனது ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. எனவே, இதைக் கையாள, முறையான அறிவியல் அடிப்படைகளைக் கையாள வேண்டியுள்ளது.

சுற்றுச்சூழலில் மேற்கொள்ளப்படும் வேளாண் முறைகளின் தாக்கம் பற்றிய பொதுமக்களின் கவலை மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு உள்ளிட்ட சில அம்சங்கள், முக்கிய ஆராய்ச்சி கருத்தாக்கங்களாக உள்ளன.

இவைதவிர, Animal nutrition, plant stress tolerance, nutrient and soil management, composting, crop protection, invertebrate ecology and the health, welfare of livestock போன்றவையும் ஆராய்ச்சிக்கு ஏற்றவையாக உள்ளன.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொழில்
இந்த 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய தொழில் துறைகளாக, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகள் வளர்ந்து வருகின்றன. ஒட்டுமொத்த உலக வேலைவாய்ப்பில், 10%க்கும் மேல், இத்துறையில் உள்ளது. இத்துறைகளில், ஒருவரை, மேலாளர் நிலைக்கு உயர்த்தக்கூடிய பொருத்தமான படிப்புகள், இன்றைய நிலையில் பரவலாக வழங்கப்படுகின்றன.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில், தங்களின் மேலாண்மை திறன்களை வளர்த்துக் கொள்ளும் அதேவேளையில், வியூக நிலையை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் நபர்களுக்கு இந்தப் படிப்புகள் பேருதவி புரியும்.

துணைநிலை மீன் உயிரியல்
உலகளாவிய மீன்வள சேமிப்பு குறைந்து வருதல், சுற்றுச்சூழல் மாறுபாட்டால், பல அரிய கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துபோதல், கடலில் ரசாயனம் உள்ளிட்ட பொருட்கள் கலப்பதால் ஏற்படும் மீன்களின் அழிவு போன்றவை, உலகளவில் கவலை தரத்தக்க விஷயங்களாக உள்ளன.

உலகளாவிய மீன்வளம் குறைந்து வரும் அதேநேரத்தில், மீன் உணவிற்கான தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த நூற்றாண்டில், வளர்ப்பு மீன் பெருக்க நடவடிக்கையானது, முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, இத்துறையில் பயிற்சிபெற்ற நிபுணர்களின் தேவை அதிகளவில் உள்ளது.

மீன்கள் சிறப்பாக வளர்வதற்கான செயற்கை உணவுகளை கண்டுபிடித்தல், மீன்களை தாக்கும் நோய்கள் குறித்து பரிசோதித்தல் மற்றும் அவற்றுக்கான மருந்துகளை கண்டுபிடித்தல் போன்றவை முக்கியமான அம்சங்கள்.

இத்துறை போன்றே பெரிதாக வளர்ந்துவரும் இன்னொரு முக்கிய துறை எதுவெனில், அழகு மீன்கள் மற்றும் நீர்த்தாவர வணிகம். எனவே, இதுதொடர்பான உணவளித்தல், பராமரித்தல், மீன் அருங்காட்சியக மேலாண்மை மற்றும் புதிய தொழில்நுட்ப தாக்கம் போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன. Fish toxicology என்பதும், இப்படிப்பின் மிக முக்கியமானதொரு அம்சமாக திகழ்கிறது.

தியரடிகல் மற்றும் கம்ப்யூடேஷனல் நியூரோசயின்ஸ்
இந்த பல்அம்ச படிப்புகள், மூளை இயக்கம் பற்றிய கோட்பாடுகள், மூளை நரம்பு செயல்பாட்டின் கணித மற்றும் கம்ப்யூடேஷனல் மாடலிங், நியூரோசயின்ஸ் டேட்டா அனலிசிஸ் தொடர்பான புள்ளியியல் நுட்பங்கள் உள்ளிட்ட பலவிதமான அம்சங்களைப் பற்றிய விரிவான அறிவை இப்படிப்பு வழங்குகிறது.

நியூரோ சயின்ஸ் என்பது, 21ம் நூற்றாண்டின், மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு முக்கிய படிப்பாகும். நடைமுறை ரீதியிலான அணுகுமுறை மற்றும் நுட்பங்கள் இதில் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, மூளை நடவடிக்கையை பதிவுசெய்யும் மற்றும் இமேஜிங் செய்யும் செயல்பாடானது, மூளை இயக்கத்தின் வெவ்வேறு அம்சங்களைப் பற்றிய விரிவான தரவுகளைத்(datas) தருகிறது.

செல்லுலர், சர்க்யூட் மற்றும் சிஸ்டம் நிலையில், ஒரு மூளையின் நுண்ணிய செயல்பாடுகளைப் பற்றிய பலவிதமான நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வழியேற்படுத்துகிறது.