Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 10 ஜூன், 2013

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலார் அணை நீர்மட்டம் உயர்வு

பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் சுமார் 5 அடியும், சேர்வலார் அணையின் நீர்மட்டம் சுமார் 16 அடியும் அதிகரித்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 53.35 அடியாக இருந்தது.

இந்நிலையில் காரையார் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் சுமார் 5 அடி அதிகரித்து நேற்று காலை நிலவரப்படி 58.80 அடியானது. அணைக்கு விநாடிக்கு 3609.60 கனஅடிநீர் வந்து கொண்டிருந்தது. அணைப்பகுதியில் 27 மி.மீ. கீழணையில் 11 மி.மீ. அளவிலும், சேர்வலாரில் 9 மி.மீ, அம்பையில் 13.2 மி.மீ, சேரை., 6 மி.மீ. அளவில் மழையின் அளவு பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் 65.12 அடியாக இருந்த சேர்வலார் அணையின் நீர்மட்டம் நேற்று சுமார் 16 அடி அதிகரித்து 81.04 அடியானது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 72.04 அடியானது. இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக