Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்விஉதவி தொகை விண்ணப்பிக்கலாம்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர் புத்த மதம் மற்றும் பார்சி பிரிவை சேர்ந்த தொழில் மற்றும் தொழில் நுட்ப கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ் 2013-14ம் ஆண்டிற்கு கல்வி உதவி தொகை பெறுவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை பதிவதற்கு வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள்ளும், புதுப்பித்தலுக்கு வரும் டிசம்பர் மாதம் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2,301 மாணவர்களுக்கு புதிய கல்வி உதவி தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. கல்வி உதவி தொகை பெற மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டு பொது தேர்வில் குறைந்தபட்சம்50 சதவீத மார்க் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்கள் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து கையொப்பமிட்டு, மார்க் சான்று, வருமான சான்று நகல்களுடன் கல்வி கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, பாங்க் கணக்கு எண் ஆகிய ஆவணங்களை இணைத்து அவர்கள் படிக்கும் கல்வி நிலையங்களில் வரும் அக்டோபர் மாதம்10ம் தேதிக்குள் பதிவு செய்யவும், 20.1.2014க்குள் புதுப்பித்தலுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி உதவி தொகை மாணவ, மாணவிகளின் பாங்க் கணக்கில் செலுத்தப்பட உள்ளதால் விண்ணப்பிக்கும் போது பாங்க் கணக்கு விபரங்களை தவறாது சமர்ப்பிக்க வேண்டும்.

மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் செலுத்தும் முழு கல்வி கட்டணமும் திரும்ப வழங்கப்படும். பிற கல்வி நிறுவனங்களில் விடுதியில் தங்கி படிப்பதற்கு 30 ஆயிரம் மற்றும் விடுதியில் தங்காமல் படிப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அதிகபட்சமாக கல்வி உதவி தொகை வழங்கப்படும்.கல்வி நிலையங்கள் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பரிந்துரை செய்ய வேண்டும். ""சிறுபான்மை நல ஆணையர், 81, அண்ணா சாலை, சென்னை - 2 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக மேலும் விபரங்களுக்கு 044 - 28523544 என்ற டெலிபோனில் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக