Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 13 ஜூலை, 2013

முதல் மலாலா விருதை இந்திய மாணவி ரஷியா சுல்தானாவிற்கு வழங்கியது ஐ.நா.


பெண் குழந்தை கல்விக்காக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள முதல் மலாலா விருது இந்தியாவை சேர்ந்த 15 வயது மாணவி ரசியா சுல்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த ரசியா சுல்தான் 48 பெண் குழந்தை தொழிலாளர்களை மீட்டு பள்ளியில் சேர்த்தற்காக அவர் இந்த விருதை பெறுகிறார். விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசியா சுல்தானின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரஷியா சுல்தான் மீரட்டில் உள்ள ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். குடும்ப வறுமை காரணமாக 5 வயதாக இருக்கும் போதே வேலைக்கு சென்றார். இவரை அரசு சாரா நிறுவனம் ஒன்று மீட்டு கல்வி வழங்கி வருகிறது.
தற்போது பள்ளியில் படித்து வரும் இவர், அந்நிறுவனத்துடன் இணைந்து கிராமத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறார்.

முன்னதாக தனது 16வது பிறந்த நாளையோட்டி ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் மலாலா யூசப்சாய் உரையாற்றினார். ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு பேனா இருந்தால் உலகையே மாற்றிவிடலாம் என மலாலா நம்பிக்கை தெரிவித்தார். பாகிஸ்தானில் பெண் கல்விக்கு எதிரான தலிபான்கள் நடத்திய தாக்குதலை சந்தித்த மலாலாவை பெருமைப்படுத்தும் விதமாக ஜூலை 12ந் தேதியை மலாலா தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது. வரும் காலங்களில் மலாலாவின் அனைத்து சமுதாய கல்வி பணிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை உதவி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக