Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 3 ஜூன், 2013

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் தொடங்கும். இந்த சீசன் ஜூலை, ஆகஸ்ட் வரை 3 மாதங்கள் வரை நீடிக்கும். சீசன் தொடங்குவதற்கான அறிகுறி மே மாத இறுதியில் தென்படும். அந்த வகையில் கடந்த 3 நாட்களாக குற்றாலம் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.

பகலில் வெயில் அடித்தாலும் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. 3 நாட்களாக பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தின் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவியில் தண்ணீர் விழத்தொடங்கியுள்ளது. மெயினருவியில் ஆர்ச்சை தொட்டப்படி தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியின் 5 கிளைகளிலும் ஓரளவு தண்ணீர் விழுகிறது.

குற்றாலத்தில் சீசன் தொடங்கியதையடுத்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இருப்பினும் குறைந்த அளவு தண்ணீர் விழுவது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் குற்றாலம் மலைப்பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கக்கூடும். இதையடுத்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகரித்து சீசன் முழுவீச்சில் களை கட்ட தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு சீசன் முழுவதுமாக கைவிட்ட நிலையில் வியாபாரிகளும் பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர். இந்த ஆண்டு சீசன் குறிப்பிட்ட காலத்தில் தொடங்கியுள்ளதால் முழுவதுமாக களைகட்டும் என நம்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக