Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 3 ஜூன், 2013

மலேசிய இந்திய சமூகத்தில் அதிகரித்து வரும் விவாகரத்துகள்

மலேசியாவில் வாழும் இந்திய சமூகத்தில் விவாகரத்துகள் பெருகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருடத்துக்கு சுமார் 5 ஆயிரம் என்ற அளவில் விவாகரத்துகள் அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து தமிழ் பெல் கிளப் மலேசியாவின் தேசிய தலைவர் எஸ்வி லிங்கம் கூறுகையில், இது போன்ற நிலை தொடர்ந்தால், சமூகத்தில் பிளேக் நோய் போல் இது பரவி, சமூகச் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

மலேசிய நண்பன் பத்திரிகையில், இது குறித்து அண்மையில் வெளியான செய்தியில், மலேசிய இந்திய சமூகத்தில் தம்பதிகளுக்கு இடையேயான அன்னியோன்யம் குறைந்து, புரிந்துணர்வும் குறைந்து இடைவெளி அதிகரித்து வருவதும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பாங்கு குறைந்துள்ளதும் காரணம் என்று கூறியுள்ளது. இதனால் விவாகரத்துகள் மிக அதிகமாக ஆகிவிட்டன என்று கூறப்பட்டுள்ளது, சில வருடங்களுக்கு முன்னர் வருடத்துக்கு 200 என்ற அளவில் இருந்த விவாகரத்துகள் இப்போது 5000 என்ற அளவுக்கு உயர்ந்துவிட்டது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த லிங்கம், மலேசிய இந்து சங்கம் தம்பதிகளை அழைத்து அவர்களுக்கு கட்டாய வகுப்புகளை நடத்த வேண்டும், அவர்களுக்கு வழிகாட்டி, அவர்களின் கடமைகளை எடுத்துச் சொல்லி, திருமண பந்தத்தை வெற்றிகரமானதாக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக