Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 2 ஜூன், 2013

ஈராண்டில் பல்லாண்டு சாதனை படைத்த ? ஜெயலலிதா ஆட்சியில் இன்று சென்னை அண்ணா சாலையில் ஓட ஓட விரட்டி இளைஞர் வெட்டப்பட்டார்

சென்னை அண்ணா சாலையில் அமெரிக்க தூதரகம் அருகில் இன்று காலையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ,தன்னை ஒரு கும்பல் ஆட்டோவில் வேகமாக விரட்டி வருவதை பார்த்தார். இதனால்  மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார். ஆனால், ஆட்டோவில் வந்த 3 பேர்  ஓட ஓட விரட்டிச் சென்றுச் சென்று தப்பி ஓடிய வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்து அலறியபடி கீழே விழுந்தார். இதைப் பார்த்து சாலையில் போய்க் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து நின்றனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆயிரம் விளக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 108 ஆம்புலன்சில் வாலிபரை ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.போலீஸார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் கென்னத் (40) என்பது தெரிய வந்தது.கோயம்பேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த இவர் அதே பகுதியில் உள்ள ஜெப கூடத்துக்கு பிரார்த்தனைக்கு வந்தபோதுதான் எதிரிகளிடம் மாட்டிக் கொண்டார். ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் கென்னத்தை கொலை செய்ய முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது.இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக