Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 2 மே, 2013

தமிழக அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் படுக்கை வசதியில்லை, தரையில் படுத்து சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள்


செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, மகப்பேறு பிரிவில், போதிய படுக்கை வசதியில்லாததால், பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

செங்கல்பட்டு நகரில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு, கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு பிரிவு இயங்கி வருகிறது. இதில், தினமும், 30 குழந்தைகள் வரை பிறக்கின்றன. 5 குழந்தைகள் இயல்பான பிரசவத்திலும், 25 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலமாகவும் பிறக்கின்றன. தற்போது, பிரசவம் அதிகரித்து வரும் நிலையில், இங்கு அடிப்படை வசதிகள் இன்றி, சிகிச்சைக்கு வரும் பெண்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

படுக்கைகள் பற்றாக்குறை
இங்குள்ள இரு வார்டுகளிலும், தலா 35 படுக்கைகள் உள்ளன. இதில், குழந்தை பிரசவித்த பெண்களை இதில் படுக்க வைக்கின்றனர். அவர்கள், குறைந்தபட்சம், 9 நாட்கள் வரை, படுக்கையில் இருக்க வேண்டும். ஆனால், படுக்கைகள் பற்றாக்குறையாக உள்ளதால், பிரசவ வார்டில் மட்டும் குழந்தை மற்றும் தாயை படுக்கையில் இருக்க அனுமதிக்கின்றனர். பிரசவம் அதிகரிப்பதால், அடுத்தடுத்த பிரசவத்திற்காக கர்ப்பிணிகள் வருவதால், முன்னதாக படுக்கையில் இருப்பவர்களை கீழே இறக்கி, தரைப்பகுதியில் படுக்க வைக்கின்றனர்.

அடிப்படை வசதியில்லைவார்டின் தரைப்பகுதி, சுகாதாரமற்ற முறையில் அமைந்துள்ளதுடன், அங்கு வழங்கப்படும் குடிநீரும் தூய்மையாக இல்லை. மின்விசிறிகள் முறையாக இயங்கவில்லை. கழிப்பறையும் பராமரிப்பின்றி, துர்நாற்றம் வீசி வருகிறது. படுக்கைகளும் முறையாக பராமரிக்கப்படவில்லை. இப்பிரச்னைகளால், பிரசவத்திற்கு வரும் பெண்கள், குழந்தைகளுடன் கடும் அவதிப்படுகின்றனர்.தரையில் படுக்கைஇதுகுறித்து, அச்சிறுப்பாக்கத்தைசேர்ந்த ஷர்மிளா கூறுகையில்,""பிரசவத்திற்கு பிறகு, ஒருநாள் மட்டும் படுக்கை வசதி செய்து தரப்படுகிறது. அடுத்த, 5 நாட்கள் வரை தரையில் படுக்கவேண்டியுள்ளது. இடமும் சுகாதார வசதியின்றி உள்ளதால், தொற்றுநோய் பரவுகிறது. இதனால், அடிக்கடி மருத்துவரை வந்து சந்திக்கவேண்டிய நிலை உள்ளது. அடிப்படை வசதிகளும் சரியாக செய்து தருவதில்லை. எனவே, பிரசவ பெண்களின் நலன் கருதி, கூடுதல் படுக்கைகள் அமைத்து, இப்பிரிவை சுகாதாரத்தோடு பராமரிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக