Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 2 மே, 2013

சுற்றுச்சூழல்துறை படிப்புகள்

வெகு வேகமாக வளரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றால் இன்று சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை அறிவோம். இயற்கை மற்றும் சமூக அறிவியல்களின் ஒருங்கிணைப்பாக சுற்றுச்சூழலியல் விளங்குகிறது.

சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் உயிரியலாளர்கள், சுற்றுச்சூழல் இன்ஜினியர்கள், சுற்றுச்சூழல் மாதிரி வடிவமைப்பாளர்கள், சுற்றுச்சூழல் மீடியாத் துறையினர் என இன்று இத் துறையில் எண்ணற்ற
வாய்ப்புகள் இருக்கின்றன.

சுற்றுச்சூழல் சமநிலை, பயோடைவர்சிடி மற்றும் வேஸ்ட்லேண்ட் மேனேஜ்மென்ட் என்னும் இலக்குகளை நோக்கி இவர்களின் பணி அமைகிறது. இத் துறையில் ஆய்வுப் படிப்புகளை பல பல்கலைக்கழகங்கள்
தருகின்றன. சமீப காலமாக சில கல்வி நிறுவனங்கள் இத் துறையில் பி.எஸ்சி. மற்றும் எம்.எஸ்சி. படிப்புகளைத் தருகின்றன.

நல்ல சம்பளத்தையும் சிறப்பான எதிர்காலத்தையும் இத் துறை தருவதால் இப் படிப்புகளுக்கான போட்டி அதிகரித்துள்ளது.

இத்துறை சார்ந்த படிப்பை வழங்கும் கல்விநிலையங்கள் 

1. St. Joseph's College of Arts & Science, Cuddalore 
2. St. Joseph's College, Tiruchirappalli 
3. Anna University , Chennai 
4. University Of Madras 
5. Barathiar University , Coimbature 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக