Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 28 மே, 2013

அனைத்து மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் : துணைவேந்தர் எம்.ராஜாராம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எம்.ராஜாராம் (54) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். தாற்காலிக துணைவேந்தர் காளிராஜ் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

துணைவேந்தராகப் பொறுப்பேற்ற பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது:

பொறியியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படும். வேலைவாய்ப்பை உறுதிசெய்தாலே அனைத்துப் பொறியியல் காலிப்பணியிடங்களும் நிரம்பிவிடும்.

அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகங்களில் உள்ள பேராசிரியர்களின் தரத்தை உயர்த்தும் வகையில், அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தை சிறந்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார் அவர்.

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த ராஜாராம், ஒருங்கிணைந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். இந்தப் பொறுப்பில் அவர் 3 ஆண்டுகளுக்கு நீடிப்பார்.

இதற்கு முன்பு திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் அவர் இருந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக