Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 18 மே, 2013

மெட்ரோ ரயில் தொழிலாளர்களுக்கு தாமதமாகும் ஊதியம்


சென்னையில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வரும் கம்மோன் இந்தியா நிறுவன தொழிலாளர்களுக்கு ஊதியம் வெகு தாமதமாக அளிக்கப்படுகிறது.

தங்களுக்கு உரிய ஊதியத்தை உரிய நேரத்தில் வழங்கக் கோரி அவர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும், மே 7ம் தேதி வழங்கப்பட வேண்டிய ஏப்ரல் மாத ஊதியம் இதுவரை அவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஏற்கனவே, இதே காரணத்தைக் கண்டித்து அவர்கள் பணிக்கு வரமாட்டோம் என்று கூறினர்.

ஆனால், கம்மோன் இந்தியா (Come on India) ஊழியர்கள் அவர்களை சமாதானம் செய்து வேலைக்கு வரச் செய்தனர். இந்நிலையில், தாங்கள் அளிக்கும் பில்களை சென்னை மெட்ரோ ரயில் லிமிடட் நிறுவனம் உரிய நேரத்தில் ஒப்புதல் அளித்து பணத்தை தருவதில் தாமதம் செய்கின்றனர். எனவேதான் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் அளிக்க முடியவில்லை என்கிறார்கள் கம்மோன் நிறுவனத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக