Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 18 மே, 2013

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் நெல்லையில் 21ம் தேதி "நேர்முகத்தேர்வு"

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நெல்லையில் 21ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் அதிகபட்ச திட்ட மதிப்பீடு 5 லட்சம் வரை உற்பத்தி தொழில்களுக்கும், 3 லட்சம் வரை சேவை தொழில்களுக்கும், 1 லட்சம் வரை வியாபார தொழில்களுக்கும்15 சதவீத மானியத்துடன் பாங்குகள் மூலம் கடன் உதவி ழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன் பெற குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டிற்கு 1.50 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளிகள் 7 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கான கட்டாய பயிற்சியை மேற்கொண்ட பின்பு பாங்குகள் மூலம் கடன் உதவி வழங்கப்படும்.

பொது பிரிவினர் 18-35 வயது வரையிலும், பங்கு தொகை 10 சதவீதமாக இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து பிற்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் 18-45 வயது வரையிலும், பங்கு தொகை 5 சதவீதமாகவும் இருக்க வேண்டும்.

நடப்பு நிதி ஆண்டுக்கான பயனாளிகள் தேர்வு மாவட்ட தொழில் மையத்தில் வரும் 21ம் தேதி நடக்கிறது. புதிய தொழில் முனைவோர் உரிய விண்ணப்பங்களை அணுகலாம். இதுசம்பந்தமாக மேலும் விபரங்களுக்கு நெல்லை மாவட்ட தொழில் மையத்தை (0462 - 2572384) அணுகலாம் என்று கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக